'கமல் யாருக்கும் பயப்பட மாட்டார்'

'கமல் யாருக்கும் பயப்பட மாட்டார்'

4 mins read
464a5726-cf41-4afb-b22c-1897cf87302a
விஜய் சேதுபதி -
multi-img1 of 3

அனை­வ­ரும் எதிர்­பார்த்­த­தை­விட பிரம்­மாண்­ட­மாக நடந்­தேறி உள்­ளது 'விக்­ரம்' இசை வெளி­யீடு. இசை­ அமைப்­பா­ளர் அனி­ருத், நடி­கர்­கள் விஜய்­சே­து­பதி, சிலம்­ப­ர­சன், நரேன், உத­ய­நிதி, இயக்­கு­நர் பா. ரஞ்சித் உள்­ளிட்ட பலர் கலந்துகொண்­ட­னர்.

ரஜி­னி­யும் வரு­வார் என எதிர்­பார்க்­கப்­பட்­டா­லும் ரசி­கர்­க­ளுக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யது. ஆனால் யாரும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக சிம்பு வந்­தி­ருந்­தார்.

இந்­நி­கழ்­வில் பேசிய விஜய் சேது­பதி,

முதல் முறை­யாக கமல்­ஹா­ச­னு­டன் இணைந்து நடித்­தது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

"கமல் சாரு­டன் நடிப்­பேன் என்று கன­வில்­கூட நினைத்­த­தில்லை. நான் பேச ஆரம்­பித்த பிற­கு­தான் அவ­ரது பேச்சை கவ­னிக்க ஆரம்­பித்­தேன். அவ­ரது பேச்­சில் ஒரு­வித பொறுப்­பு­ணர்­வும் ஆழ­மும் இருக்­கும். மூன்று முறை அவரை நேரில் சந்­தித்து பேசி­யுள்­ளேன். தாம் பெரிய அனு­ப­வ­சாலி என்ற தலைக்­க­னம் அவ­ரது பேச்­சில் இருக்­காது," என்­றார் விஜய் சேது­பதி.

படப்­பி­டிப்­புக்கு மத்­தி­யில் கம­லும் அமர்ந்து பேசி­ய­தெல்­லாம் தமது பாக்­கி­யம் என்று குறிப்­பிட்ட அவர், 'கமல் 60' நிகழ்ச்­சி­யில் அவ­ரு­டன் இணைந்து நடிக்க வேண்­டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­ததை நினை­வு­கூர்ந்­தார்.

"அந்த ஆசை நிறை­வே­றி­விட்­டது. அடுத்து அவ­ரது இயக்­கத்­தில் நடிக்க வேண்­டும் என்ற ஆசை­யும் இருக்­கிறது. உங்­கள் எழுத்­தின் மிகப் பெரிய ரசி­கன் நான். அது நடக்க வேண்­டும் என இயற்­கையை வேண்­டிக்கொள்­கி­றேன்," என்­றார் விஜய் சேது­பதி.

நிகழ்ச்­சி­யின் நாய­க­னான இசை­ அமைப்­பா­ளர் அனி­ருத், தமது இசை­யில் கமல்­ஹா­சன் பாடி­யதை பெரு­மை­யா­கக் கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

'இந்­தி­யன்-2' படத்­துக்கு இசை­ அமைக்க கிடைத்த வாய்ப்பு முழுமை பெறா­மல் போன வருத்­தத்­தில் இருந்த போது­தான், இயக்­கு­நர் லோகேஷ் தமக்கு 'விக்­ரம்' பட வாய்ப்­பைத் தந்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

"இந்­தப் படத்­தில் கமல் சார் பாடி­யுள்ள 'பத்­தல பத்­தல' பாடல் ஒலிப்­ப­திவு இரண்டு நாள்­கள் நடை­பெற்­றது. ஒரு மாதத்­துக்கு முன்பே பாடல் வரி­களை அனுப்­பி­விட்­டார் கமல். தமி­ழில் பாடி முடித்­த­தும் தெலுங்கு வரி­க­ளைப் பார்­வை­யிட்டு, அதில் பிழை இருக்­கி­றதே என்று கண்­டு­பி­டித்­தார். பிறகு அவரே அதைச் சரி­செய்து பாடி­னார்.

"'மாஸ்­டர்' 50 விழுக்­காடு லோகேஷ் படம். ஆனால், 'விக்­ரம்' படம் முழுக்க முழுக்க கமல் சாரின் ரசி­க­னாக லோகே­ஷின் சம்­ப­வம்.

"எந்­த­வோர் இசை வெளி­யீட்டு விழா­வி­லும் ஒரு படத்­தின் வெற்றி குறித்து பேச­மாட்­டேன். ஆனால், இந்­தப் படம் நிஜ­மா­கவே உல­கம் முழுக்க வெற்­றி­பெ­றும்" என்­றார் அனி­ருத்.

அடுத்து பேசிய நடி­கர் சிம்பு, வாழ்க்­கை­யில் தன் தந்­தையை குரு­வாக கரு­து­வ­தா­க­வும் திரைத்­து­றை­யில் கமல்­தான் தமது குரு என்­றும் குறிப்­பிட்­டார்.

"முன்­பெல்­லாம் நான் ஐந்து மணிக்கு எழுந்­தி­ருக்க மாட்­டேன். ஆனால், கம­லின் 'விஸ்­வ­ரூ­பம்' படத்­துக்குப் பிரச்­சினை ஏற்­பட்­ட­போது அதி­கா­லை­யில் எழுந்து, நாள் முழு­வ­தும் கமல் சாரு­டன் இருந்­ததை மறக்­கவே மாட்­டேன்.

"இந்­தப் படத்­தின் முன்­னோட்­டக்­காட்­சித் தொகுப்­பைப் பார்த்­து­விட்­டுச் சொல்­கி­றேன். நிச்­ச­யம் படம் வெற்றி பெறும். இத்­தனை நடி­கர்­களை வைத்து படம் இயக்­கு­வது எளி­தல்ல. லோகேஷ் அதை சாதித்­தி­ருக்­கி­றார். விஜய்­சே­து­பதி என் நண்­பர். மலை­யா­ளத்­தில் பகத் ஃபாசில் போல் தமி­ழில் விஜய் சேது­பதி அசத்­து­கி­றார்," என்­றார் சிம்பு.

தாம் கமல்­ஹா­ச­னின் தீவிர ரசி­கர் என்று குறிப்­பிட்­டார் 'விக்­ரம்' படத்­தின் இயக்­கு­நர் லோகேஷ் கன­க­ராஜ்.

கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளாக தாம் மேற்­கொண்ட கடும் முயற்­சி­களும் உழைப்­பும்­தான் கம­லி­டம் தம்­மைக் கொண்­டு­வந்து சேர்த்­த­தாக அவர் கூறி­னார்.

"முன்­பெல்­லாம் கமல் சார் வீட்டு வாச­லில் காத்­தி­ருப்­பேன். அவர் என்­றா­வது ஒரு நாள் நின்று என்னை நோக்கி கைய­சைப்­பார் என்று எதிர்­பார்த்து நிற்­பேன். கட­வு­ளி­டம் அதற்­காக வேண்­டிக்­கொள்­வேன். இன்று அந்த ஆண்­ட­வர் இந்த (கமல்) ஆண்­ட­வ­ரு­டன் இணைந்து பணி­யாற்ற வைத்­துள்­ளார். நான் சினி­மா­வுக்கு வர கார­ணமே கமல்­தான்.

"இந்­தப் படத்­தின் இறு­திக்­காட்­சிக்­காக படப்­பி­டிப்பு நடந்­த­போது, காட்­சி­யின் தேவை கருதி சில நிமி­டங்­கள் உடற்பயிற்சி செய்­தார். அதைக் காணொ­ளி­யா­கப் பதிவு செய்­துள்­ளேன். இந்த வய­தில் கொரோனா தாக்­கு­த­லுக்­குப் பிறகு அவர் உழைப்­ப­தைப் பார்க்­கும்­போது நாம் செய்­வ­தெல்­லாம் வேலையே இல்லை என்று தோன்­று­கிறது," என்­றார் லோகேஷ்.

இறு­தி­யில் பேசிய கமல்­ஹா­சன், தமது ரசி­க­ராக லோகேஷ் தன்னை வைத்து படம் இயக்கி இருப்­பது தனக்­குத்­தான் பெருமை என்­றார். மேலும், இந்­தக் கூட்­டணி தொட­ரும் என்­றும் குறிப்­பிட்­டார்.

"நான் 22 வய­தில் வேலை செய்­த­து­போல், விஜய்­சே­து­பதி தமது 44 வய­தில் உழைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார். நான் அந்த வய­தில் ஒரு வரு­டத்­தில் எத்­தனை படங்­கள் நடித்­தேனோ அது போல விஜய் சேது­பதி இப்­போது ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றார்.

"இந்­தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறு­வ­னம் வெளி­யி­டு­வது குறித்து பல­ரும் கேட்­கி­றார்­கள். அர­சி­ய­லைக் கடந்த முதல்­வர் மு.க.ஸ்டா­லின் எனது நண்­பர். நானும் ரஜி­னி­யும் திரை­யு­ல­கில் பணி­யாற்­றி­ய­படி நண்­பர்­க­ளா­கவே நீடிக்­கி­றோம். இளம் வய­தில் ஒரு­வ­ருக்கு எதி­ராக மற்­றொ­ரு­வர் பேசி இருக்­கக்­கூ­டும். ஆனால், இரு­வ­ருக்­கும் இடை­யி­லான நட்பு எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்க வேண்­டும் என்­பதை 25 வய­தில் முடிவு செய்­தோம்.

"அதே­போல் மறைந்த முதல்­வர் கலை­ஞர் கரு­ணா­நி­தி­யி­டம் தொடங்­கிய உறவு அவ­ரது பேரன் உத­ய­நிதி வரை நீடிக்­கிறது.

"இந்தி ஒழிக என்று சொல்வது என் வேலை அல்ல. தமிழ் வாழ்க எனச் சொல்வதுதான் என் கடமை," என்­றார் கமல்­ஹா­சன்.

கமல்ஹாசன்

'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் விரைவில் ஒளிபரப்ப உள்ளது.

, :   