'இது முக்கிய காலகட்டம்'

'இது முக்கிய காலகட்டம்'

3 mins read
4e404716-f29e-4225-84a0-fc6b6bd93a10
-

ஒரு நடி­க­ராக தமது திரைப்­ப­ய­ணத்­தின் முக்­கிய கால­கட்­டத்­தில் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் ஜிவி பிர­காஷ். அவ­ரது நடிப்­பில் கடை­சி­யாக வெளி­வந்­துள்ள 'பேச்­சு­லர்', 'செல்ஃபி', 'ஜெயில்', 'ஐங்­க­ரன்' ஆகிய நான்கு படங்­க­ளுமே விமர்­சன ரீதி­யில் வர­வேற்பைப் பெற்­றுள்­ள­தா­க­வும் இது தமக்கு மன­நி­றை­வைத் தந்துள்­ள­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்டுள்ளார்.

"திரைப்­ப­டங்­களில் நடிப்­பது என முடிவு செய்த பின்­னர் சில நகைச்­சு­வைப் படங்­களில் நடித்­தேன். அதன் பிறகு எனது நடிப்­புத் திற­மையை வெளிப்­படுத்­தக்­கூ­டிய வாய்ப்­பு­கள் அமைந்­தன. இப்­போது ஜிவி பிர­காஷ் படங்­கள் என்­றால் நல்ல கதைக்­க­ரு­வும் கள­மும் இருக்­கும் என ரசி­கர்­கள் நம்­பு­கி­றார்­கள். நானும் அவர்­க­ளது எண்­ணத்­துக்கு ஏற்ப அது­போன்ற கதை­க­ளில்­தான் கவ­னம் செலுத்தி வரு­கி­றேன்.

"சினி­மா­வில் நடிப்­பது என்­பது இசை­ய­மைப்­பது போன்­ற­து­தான். ஏதா­வது வித்­தி­யா­ச­மான முயற்­சி­களில் தொடர்ந்து ஈடு­ப­டு­கி­றோம். அதில் இருந்து கிடைக்­கும் அனு­ப­வங்­க­ளைப் பாட­மாக எடுத்­துக் கொள்­கி­றோம்.

"உண்­மை­யில் திரை­யு­ல­கில் எனக்­கான இடம் எது என்­பதை நான் இன்­னும் முழு­மை­யா­கக் கண்டறி­ய­வில்லை. எனி­னும் அண்­மைக்­கா­ல­மாக நேர்­மறை விமர்­ச­னங்­க­ளைப் பெற்று வரு­கி­றேன்," என்­கி­றார் ஜிவி.

கன­மான கதை­க­ளி­லும் காட்­சி­க­ளி­லும் நடிப்­பது அவ்­வ­ளவு எளி­தல்ல என்று குறிப்­பி­டு­ப­வர், அவை ஏற்­ப­டுத்­தும் தாக்­கங்­களில் இருந்து வெளி­வர நேர­மா­கும் என்­கி­றார். அதற்­கான சில உதா­ர­ணங்­களையும் பட்­டி­ய­லி­டு­கி­றார்.

"உதா­ர­ண­மாக 'செல்ஃபி' படத்­தில் என் தந்­தை­யி­டம் பேசும்­போது மன­த­ள­வில் உடைந்­து­போக வேண்­டும். அக்­காட்­சி­யில் நடித்து முடித்த பிறகு, அதி­லி­ருந்து மீண்டுவர நான்கு மணி நேர­மா­னது. அது­வரை வேறு எதி­லும் கவ­னம் செலுத்த முடி­ய­வில்லை. அதே­போல் 'ஜெயில்' படத்­தின் இடை­வேளை காட்­சியைச் சொல்­ல­லாம். அதில் நடித்த பிறகு ஒரு நாள் முழு­வ­தும் அதன் பாதிப்பு என்­னி­டம் இருந்தது.

"எனவே நான்கு கன­மான கதை­யம்­சம் கொண்ட படங்­களில் நடித்து முடித்­தி­ருப்­ப­தால், அடுத்து நகைச்­சு­வைப் படமா என்று சிலர் கேட்­கி­றார்­கள். உண்மை­யில் அடுத்து என்ன என்­பது எனக்கு தெரி­ய­வில்லை.

"இன்­றைய இளம் ரசி­கர்­களை எவ்­வாறு அணுக வேண்­டும் எனும் சூட்­ச­மத்தை அறிந்த ஓர் இயக்­கு­நரை நான் இன்­னும் சந்­திக்­க­வில்லை. ஒரு­வேளை அப்­ப­டிப்­பட்ட ஒரு­வரை சந்­திக்­கும் பட்­சத்­தில் மீண்­டும் நகைச்­சு­வைப் படங்­களில் நடிப்­பேன்," என்று சொல்­லும் ஜிவி பிர­காஷ், தம்மை வைத்து படம் எடுக்­கும் தயா­ரிப்­பா­ளர்­கள் லாபம் காண வேண்­டும் என்­ப­தற்கு மிகுந்த முன்­னு­ரிமை அளிப்­ப­தா­கச் சொல்கி­றார்.

தமது படங்­கள் வசூல் ரீதி­யில் தோல்வி அடை­ய­வில்லை என்­பதை உறுதி செய்­தால்­தான் ஒரு நடி­க­ராக தாம் வெற்­றி­பெற முடி­யும் என்று குறிப்­பி­டு­ப­வர், இதை­யெல்­லாம் மன­திற்­கொண்டே படங்­களைத் தேர்வு செய்­வ­தா­கக் கூறு­கி­றார்.

இசை­ய­மைப்­பா­ளர் ஜிவி பிரகாஷின் எதிர்­கா­லத் திட்­டம்?

"உறு­தி­யா­கத் தெரி­ய­வில்லை. எனி­னும் மன­த­ள­வில் நான் முதிர்ச்சி அடைந்­துள்­ளேன் என உறு­தி­யாக நம்­பு­கி­றேன். நான் இசை­ய­மைக்­கும் படங்­க­ளுக்­கான பின்­னணி இசை­யைக் கவ­னிக்­கும்­போது இதை உணர முடி­கிறது.

மேலும் 'சூர­ரைப் போற்று', 'அசுரன்' படங்­க­ளின் மூலம் இசை­அமைப்­பில் நான் அடுத்­த கட்­டத்­துக்­குச் சென்­று­விட்­ட­தாக நினைக்­கி­றேன். இப்­போது 'சூர­ரைப் போற்று' இந்­திப் பதிப்பு, ரவி தேஜா நடிக்­கும் தெலுங்­குப் படங்­க­ளுக்கு இசை­ய­மைக்­கி­றேன்.

"நான் வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றேன். ஆனால் இந்த வளர்ச்சி என்னை எங்கு கொண்டு செல்­கிறது என்­பது தெரி­ய­வில்லை. அது நல்ல இடமாகத்தான் இருக்கும்," என்கிறார் ஜிவி பிரகாஷ்.

பல பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு இசையமைக்கும்படி ஜிவி பிரகாஷை தொடர்ந்து கேட்டு வருகின்றன. அவற்றுள் சில படங்களுக்கு மட்டும் இசையமைக்க ஒப்புக் கொள்வது என முடிவு செய்துள்ளாராம்.