'என் பெயரைப்போலவே நடிப்பும் கவரும்'

'என் பெயரைப்போலவே நடிப்பும் கவரும்'

3 mins read
86eb162a-efe6-45fc-987a-450704ac266c
-

தமிழ் சினி­மா­வில் புது வர­வு­களில் இளம் நாயகி பாடினி குமா­ரும் ஒரு­வர். சின்­னத்­தி­ரை­யில் இருந்து வெள்­ளித்­தி­ரைக்கு வந்­துள்­ளார்.

'நாயகி', 'திரு­ம­ணம்' ஆகிய தொலைக்­காட்­சித் தொடர்­க­ளைப் பார்த்­த­வர்­க­ளுக்கு பாடி­னியை நிச்­ச­யம் தெரிந்­தி­ருக்­கும்.

தற்­போது 'டேக் டைவர்­சன்' என்ற தலைப்­பில் உரு­வா­கும் படத்­தில் நடித்து வரு­கி­றார்.

அதென்ன பாடினி? என்று இவ­ரது பெய­ருக்­கான விளக்­கத்தை பல­ரும் கேட்­கி­றார்­க­ளாம்.

"பாடினி என்­றால் இசைக் கலை­யின் அரசி எனப் பொருள். அது மட்­டு­மல்ல, என் பெற்­றோர் தமிழ் ஆர்­வ­லர்­கள். அத­னால் குடும்ப நண்­ப­ரான தமிழறிஞர் அரு­ணா­ச­லம், 'உங்­கள் மக­ளுக்கு காகங்­க­ளைப் போல் தமக்­குக் கிடைத்­ததை பிறர்க்­கும் கொடுக்­கும் குணம் இருப்­ப­தால் காக்­கை­யைப் போற்­றிப் பாடிய காக்கை பாடி­னி­யார் நினை­வாக பாடினி என பெயர் வைப்­போம்' என்­றார். அதைப் பெற்­றோ­ரும் ஏற்­றுக்­கொண்­ட­னர்.

பாடி­னி­யின் சொந்த ஊர் நெல்லை. ஆனால் வளர்ந்­தது முழுக்க சென்­னை­யில்­தா­னாம்.

இரு­தய சிகிச்சை சம்­பந்­தப்­பட்ட தொழில்­நுட்­பப் படிப்பை முடித்­து­விட்டு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் வேலை பார்த்­துள்­ளார்.

எனி­னும், சிறு வயது முதலே நடிப்­பில்­தான் ஆர்­வம் அதி­க­மாம். அத­னால் வேலை பார்த்­துக்­கொண்டே நடிப்­ப­தற்கு வாய்ப்பு தேடி இருக்­கி­றார்.

"வீட்­டில் பெரி­தாக எதிர்ப்பு இல்லை. அத­னால் சுதந்­தி­ர­மாக வாய்ப்­பு­க­ளைத் தேட முடிந்­தது. அப்­படி கிடைத்­த­து­தான் தொலைக்­காட்­சித் தொடர்­களில் நடித்த வாய்ப்பு.

"திரைப்­பட நடிகை ஆக வேண்­டும் என்­ப­து­தான் இலக்கு என்­றா­லும், சின்­னத்­தி­ரை­யில் கிடைக்­கும் அனு­ப­வம் நிச்­ச­யம் கைகொ­டுக்­கும் என நம்­பி­னேன்.

"அந்த நம்­பிக்கை வீண் போக­வில்லை. கேமரா முன்பு நிற்­கும்­போது எந்­த­வித பய­மும் இல்­லா­மல் நடிக்க முடி­கிறது.

"நான் இப்­போது நடித்து வரும் 'டேக் டைவர்­ஷன்' படம் இளை­யர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் உரு­வாகி வரு­கிறது. கடந்த 1970 தொடங்கி 2000ஆம் ஆண்டு வரை பிறந்­த­வர்­க­ளின் வாழ்க்கை இப்­போது எப்­படி இருக்­கிறது என்­ப­து­தான் கதைக்­க­ளம். இதில், எனக்கு முக்­கிய கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ளது.

"நன்கு சுருள் முடி கொண்ட பெண் தேவை என்று இப்­ப­டக்­கு­ழு­வி­னர் தேடி வந்­த­னர். அது­கு­றித்து தக­வல் கிடைத்­த­போது, நான் நேரில் சென்­றேன்.

"நடிப்­புத்­தேர்வு, தோற்­றப் பொருத்­தம் ஆகி­ய­வற்­றுக்­குப் பிறகு என்­னைத் தேர்வு செய்­த­னர். அடுத்த மாதம் இந்­தப் படம் வெளி­யாக உள்­ளது," என்று சொல்­லும் பாடினி குமார், முறைப்­படி நட­னம் கற்­ற­வர்.

திரைப்­பட பின்­ன­ணிப் பாட­கர் வேல்­மு­ரு­க­னின் மனை­வி­தான் இவ­ரது பரத நாட்­டிய குரு. பர­தம் மட்­டு­மல்­லா­மல், அனைத்து வகை நட­ன­மும் பாடி­னிக்கு அத்­துப்­ப­டி­யாம்.

"வீட்­டில் இருக்­கும்­போது நட­ன­மா­டிக்­கொண்டே இருப்­பேன். அந்த அள­வுக்கு அதில் ஈடு­பாடு உள்­ளது. நட­னத்தை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் படத்­தில் நடிக்க வேண்­டும் என்ற ஆசை இருக்­கிறது.

"மேலும், எத்­த­கைய சவா­லான கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும், அதை ஏற்று நடிக்­கத் தயார். மிகச்­சி­றந்த நடிகை எனப் பெயர் வாங்க வேண்­டும் என்ற ஆசை எல்­லோ­ரை­யும் போல் எனக்­கும் உண்டு.

"வாய்ப்­புக்­காக தேவை­யின்றி கவர்ச்சி காட்­டு­வ­தில் எனக்கு விருப்­பம் இல்லை. எனி­னும், நான் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரத்­துக்கு அவ­சி­யம் எனில் ஓர­ளவு கவர்ச்­சி­யாக நடிப்­பேன். அதே சம­யம் நீச்­சல் உடை­யில் நடிக்க மாட்­டேன். என் பெய­ரைப் போலவே என் நடிப்­பும் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­கும்," என்­கி­றார் பாடினி குமார்.