திரைத்துளி­கள்

 பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்ற நடிகை பூஜா ஹெக்டே, தனது உடைகளை வைத்திருந்த பெட்டியை தொலைத்துவிட்டா ராம். இதனால் அங்கு நடை பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அணிய சரியான உடைகள் இல்லாமல் தவித்துப்போனதாகச் சொல்கிறார். "நல்ல வேளையாக ஒப்பனைப் பொருள்களும் சில நகைகளும் வைத்திருந்த பெட்டி பத்திரமாக உள்ளது. நண்பர்கள் சிலரது உதவியுடன் சில பிரச்சினைகளை எப்படியோ சமாளித்து விட்டேன்," என்கிறார் பூஜா.

 'பத்து தல' படத்துக்குக் தயாராகி உள்ளார் சிம்பு. கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தில் சிம்பு ரவுடிக் கும்பலின் தலைவனாகவும் நடிகர் கௌதம் கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கின்றனர். தனது கதாபாத்திரத்துக்காக மீண்டும் உடல் எடையைக் கூட்டியுள்ளாராம் சிம்பு. வரும் 27ஆம் தேதி முதல் சிம்பு பங்கேற்க உள்ள காட்சிகளை மும்பையிலும் சென்னையிலும் படமாக்க உள்ளதாகத் தகவல். தற்போது கௌதம் மேனன் இயக்கி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு.

 'சாணிக் காயிதம்' படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது தமக்கு வருத் தம் அளிப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ஓடிடி தளத்தில் வெளியான தால் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் அப்படத்தை உடனுக்குடன் பார்த்து ரசிக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

"அதேசமயம் திரையரங்கில் வெளியாகி இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை நஷ்டம் ஏற்படாத வரை எதுவுமே நல்லதுதான்," என்கிறார் கீர்த்தி.

 சிவாஜியின் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் திரையுலகில் நடிகராக அறிமுகமாக உள்ளார். அவர் தர்ஷன். சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்தன் சில படங்களில் நடித்த பின்னர் திரையுலகில் இருந்து ஒதுங்கி விட்டார். இப்போது அவரது இரண்டாவது மகன் தர்ஷன் புனே நகரில் உள்ள நடிப்புப்பயிற்சிக் கல்லூரியில் படித்து வருகிறார். விரைவில் தமிழ்ப் படம் ஒன்றில் அவர் நாயகனாக அறிமுகமாக உள்ளதாகத் தகவல். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் நடிப்பதற்கு ஏற்ப தன்னை தயார் படுத்தி வருகிறாராம் தர்ஷன்.

 கார்த்தியுடன் 'விருமன்' படத்தில் நடித்து வரும் அதிதி சங்கர், அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் வெற்றிபெற்ற 'கப்பேலா' என்ற படத்தை தமிழில் மறுபதிப்பு செய்ய உள்ளார் கௌதம். இந்தப் படத்தில் அதிதியை நாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளனராம்.

 சேரன் இயக்கத்தில் உருவாகும் இணையத்தொடர் ஒன்றில் நாயகனாக நடிக்கிறார் ஆரி. இதில் அவரது ஜோடியாக திவ்ய பாரதியும் முக்கிய கதா பாத்திரத்தில் கலையரசனும் நடிக்க உள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ஜெயப்பிரகாஷ் இருவரும் உள்ளனர். முக்கிய காட்சிகளை துபாயில் படமாக்க உள்ளனர். மிக விரைவில் முன்னணி ஓடிடி தளம் ஒன்றில் இந்த இணையத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!