கோடம்பாக்கத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

1 mins read
f49a454f-94d5-4ce4-8d22-9bb4787b6a5f
திரைப்படப் படப்பிடிப்பின்போது படக்குழுவினருடன் ஒளிப்பதிவாளர். -

தமிழ் சினி­மா­வின் தலை­ந­க­ரம் என்று குறிப்­பி­டப்­படும் கோடம்­பாக்­கத்­தில் மீண்­டும் ஒரு வேலை நிறுத்­தப் போராட்­டம் நடப்­ப­தற்­கான வாய்ப்பு உள்­ளது.

வெளிப்­பு­றப் படப்­பி­டிப்பு தொழி­லா­ளர் சங்­கம் எதிர்­வ­ரும் ஜூன் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்­தம் மேற்­கொள்ள இருப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.

இந்­தச் சங்­கத்­தில் உறுப்­பி­ன­ரா­கச் சேர இது­வரை குறை­வான கட்­ட­ணமே வசூ­லிக்­கப்­பட்டு வந்­த­தா­க­வும் இப்­போது அதை மூன்று லட்­ச­மாக உயர்த்தி உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

"தென்­னிந்­திய திரைப்­பட தொழி­லா­ளர் சம்­மே­ள­ன­மான 'ஃபெப்சி' அமைப்­பில் வெளிப்­பு­றப் படப்­பி­டிப்­புத் தொழி­லா­ளர் சங்­க­மும் உறுப்­பி­ன­ராக உள்­ளது. இந்­நி­லை­யில் உறுப்­பி­னர் சேர்க்­கைக் கட்­ட­ணத்தை பல­ம­டங்கு அதி­க­ரித்­தி­ருப்­பதை ஏற்­றுக்­கொள்ள இய­லாது," என்று அச்­சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

கொரோனா நெருக்­க­டிக்­குப் பிறகு தமிழ்த் திரை­யு­ல­கத்­தில் பணி­கள் வேக­மெ­டுத்­துள்­ளன. திரைப்­ப­டங்­கள், இணை­யத் தொடர்­கள், தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளுக்­கான படப்­பி­டிப்­பு­கள் பர­வ­லாக நடை­பெற்று வரு­கின்­றன.

இத­னால் திரைப்­ப­டத் தொழி­லா­ளர் பற்­றாக்­குறை நில­வு­கிறது. இந்­நி­லை­யில் புதிய உறுப்­பி­னர் சேர்க்­கைக்கு முட்­டுக்­கட்டை போடும் வித­மாக கட்­டண உயர்வு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. மேலும், வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பால் பரபரப்பும் நிலவுகிறது.