முதலிடம் பிடித்த விஜய்

முதலிடம் பிடித்த விஜய்

3 mins read
0ae62cc5-f69c-4bd9-ac28-e229c11e32f5
-

அண்­மைய கருத்­துக்­க­ணிப்­பின்­படி, இந்­திய அள­வில் மிகப்பிர­ப­ல­மாக உள்ள நடி­கர்­க­ளின் பட்­டி­ய­லில் விஜய் முத­லி­டம் பிடித்­துள்­ளார்.

அஜித்­துக்கு ஆறாம் இடம்­தான் கிடைத்­துள்­ளது. ஊடக நிறு­வ­னம் ஒன்று இந்த ஆய்வை மேற்­கொண்டது. இதே பட்­டி­ய­லில் நடி­கர் சூர்யா ஒன்பதா­வது இடத்­தில் உள்­ளார்.

நடி­கை­களில் இம்­முறை சமந்­தா­வுக்கு முத­லி­டம் கிடைத்­துள்­ளது. ஆலியா பட் இரண்­டா­வது இடத்­திலும் நயன்­தாரா மூன்­றாம் இடத்­தி­லும் உள்­ள­னர். காஜல் அகர்­வா­லுக்கு நான்­காம் இடத்தையும் தீபிகா படுகோன், ராஷ்­மிகா, அனுஷ்கா, கேத்­ரினா கைஃப் ஆகி­யோர் அடுத்­த­டுத்த இடங்­க­ளை­யும் பிடித்­துள்­ள­னர். கீர்த்தி சுரே­ஷும் பூஜா ஹெக்டே­வும் முறையே ஒன்­பது, பத்­தாம் இடங்­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.

இம்­முறை திரை­யு­ல­கில் முன்­னிலை வகிக்­கும் பட்­டி­ய­லில் தென்­னிந்தியாவைச் சேர்ந்த ஏழு பேருக்கு இடம் கிடைத்­துள்­ளது. பாலி­வுட் நடி­கை­களில் மூவர் மட்­டுமே பட்­டி­ய­லில் உள்­ள­னர்.

நடி­கர்­களில் ஜூனி­யர் என்­டி­ஆர் இரண்­டாம் இடத்­தி­லும் அல்லு அர்ஜுன் நான்­காம் இடத்­தி­லும் உள்­ள­னர். ஐந்­தாம் இடத்­தில் அக்­‌ஷய் குமார், ஏழாம் இடத்­தில் யஷ், எட்­டாம் இடத்­தில் ராம் சரண் உள்ள நிலை­யில், மகேஷ்­பா­பு­வுக்கு பத் தாம் இடம்­தான் கிடைத்­துள்­ளது. இந்த அய்­வில் தமிழ், தெலுங்கு, கன்­ன­டம், மலை­யா­ளம், இந்தி, மராத்தி, பஞ்­சாபி, வங்காளம் ஆகிய மொழி­களில் நடித்து வரும் நடி­கர், நடி­கை­ய­ரும் கவனத்­தில் கொள்­ளப்­பட்­ட­னர்.

அண்­மைக்­கா­ல­மாக 'பான் இந்­தியா' வகைப் படங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இந்­தியா முழு­வ­தும் உள்ள அனைத்து திரை­யு­லக ரசி­கர்­களும் பார்ப்­ப­தற்கு ஏற்ற படைப்­பாக இருப்­பின் அதை 'பான் இந்­தியா' படம் என்று குறிப்­பி­டு­கின்­ற­னர். அந்த வகை­யில் பிரம்­மாண்­ட­மாக தயா­ரிக்­கப்­பட்ட சில தெலுங்­குப் படங்­களில் இந்தி, தமிழ்த் திரை­யு­ல­கக் கலை­ஞர்­க­ளுக்­கும் வாய்ப்பு அளிக்­கப்­பட்­டது. மேலும் பல இடங்­கள் இதே ரீதி­யில் உரு­வாகி வரு­கின்­றன.

இதன் கார­ண­மாக தென்­னிந்­திய நாய­கர்­களும் நாய­கி­களும் இப்­போது நாட­றிந்த கலை­ஞர்­க­ளாக மாறி­விட்­ட­னர். தென்­னிந்­திய கதா­நா­ய­கர்­கள் நடிக்­கும் படங்­க­ளுக்கு வட இந்­தி­யா­வில் பெரும் வர­வேற்பு கிடைத்து வரு­கிறது. தமிழ், தெலுங்கு படங்­கள் பலவும் இப்­போது வட மாநி­லங்­களில் பர­வ­லா­கத் திரை­யி­டப்­ப­டு­கிறது. ஓடிடி தளங்­களில் இந்த நாய­கர்­க­ளின் பழைய படங்­களை வட­இந்­திய ரசி­கர்­கள் கண்டு ரசித்து வரு­கின்­ற­னர்.

அண்­மை­யில் வெளி­யீடு கண்ட 'புஷ்பா', 'ஆர்­ஆர்­ஆர்', 'பீஸ்ட்', 'கேஜி­எஃப்-2' ஆகிய படங்­க­ளின் வட­இந்­திய வசூல் எதிர்­பார்த்­த­தை­விட அதி­க­மாக இருந்­த­தா­கக் தக­வல்.

இதன் எதி­ரொ­லி­யாக தென்­னிந்­திய நாய­கர்­களின் சந்தை மதிப்பு கிடு­கி­டு­வென உயர்ந்து வரு­கிறது. அதை உறுதி செய்­யும்­வி­த­மாக அண்­மைய ஆய்வு முடி­வு­கள் அமைந்­துள்­ளன. விஜய்க்கு முத­லி­டம் கிடைத்­தி­ருப்­பது அவ­ரது ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது. இது தொடர்­பாக சமூக ஊட­கங்­களில் பல்­வே­று­வி­த­மாக பதி­விட்டு தங்­கள் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

பட்­டி­ய­லில் தென்­னிந்­திய நடி­கர், நடி­கை­க­ளின் ஆதிக்­கம் இருந்­தா­லும், வசூல், சம்­ப­ளம் போன்ற விஷ­யங்­களில் இந்தி திரை­யு­லகத்­தி­னர்­தான் முன்­ன­ணி­யில் உள்­ள­னர். 'பாகு­பலி', 'கேஜி­எஃப்' போன்ற சில தெலுங்­குப் படங்­களும் சாதித்­துள்­ளன. தமி­ழில் இது­வரை அப்­ப­டிப்­பட்ட பிரம்­மாண்ட படங்­களை இது­வரை உரு­வாக்க முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யில் மணி­ரத்­னம் இயக்கி வரும் 'பொன்­னி­யின் செல்­வன்' படம் இந்­தக் குறையைப் போக்­கும் வாய்ப்­புள்­ளது என்­கிறார்­கள் சினிமா விமர்­ச­கர்­கள். பல்­வேறு மொழி­க­ளைச் சேர்ந்த கலை­ஞர்­கள் இப்­ப­டத்­துக்­குப் பங்­க­ளித்­துள்­ள­னர். இப்­ப­டத்­தின் இசை உரி­மம் பெருந்­தொ­கைக்கு விலை­போயிருக்­கிறது.

, :

  