விவசாயக் குடும்பத்து நாயகி

விவசாயக் குடும்பத்து நாயகி

3 mins read
d365b6ea-c6dc-49a5-8ba5-a43c7232c177
-

விவ­சா­யக் குடும்­பத்­தில் இருந்து நடிக்க வந்­தி­ருக்­கி­றார் சந்­தி­ரிகா ரேவதி.

பார்த்­தி­பன், கெள­தம் கார்த்­திக் நடித்த 'யுத்த சத்­தம்' படத்­தில் காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்து ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­த­வர். அடுத்து நடி­கர் மயில்­சா­மி­யின் மகன் அன்­பு­வு­டன் இணைந்து ஒரு படத்­தில் நடித்து முடித்­துள்­ளார்.

மேலும், முன்­னணி நடி­கர் ஒரு­வ­ரின் படத்­தி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ளா­ராம். அது குறித்த அறி­விப்பு விரை­வில் வெளி­வ­ரும் என்­கி­றார்.

சந்­தி­ரிகா ரேவ­தி­வின் சொந்த ஊர் கோவை. பட்­டப்­ப­டிப்பு முடிக்க வேண்­டும், ஏதா­வது ஒரு வேலைக்­குச் சென்று சம்­ப­ளம் வாங்கி குடும்­பத்­துக்கு உதவ வேண்­டும் என்­ப­து­தான் இவ­ரது மன­நி­லை­யாக இருந்­துள்­ளது.

"கடந்த 2018ஆம் ஆண்டு சென்­னை­யில் இருந்த ஒரு தோழி­யைச் சந்­திக்க வந்­தேன். அவர் மாட­லிங் துறை­யில் இருந்­தார். அவ­ரைச் சந்­தித்த பிற­கு­தான் நான் நடி­கை­யாக உரு­மா­றிய வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நிகழ்வு நடந்­தது.

"என் தோழி பங்­கேற்ற புதுப்­ப­டத்­துக்­கான நடி­கர் தேர்­வுக்கு நானும் துணைக்­குச் சென்­றி­ருந்­தேன். அங்­கி­ருந்த சிலர், 'நீங்­களும் நடிக்­க­லாமே' என்று சொல்லி என்­னை­யும் தேர்­வில் பங்­கேற்க வைத்­த­னர். அதன் மூலம் மலே­சி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்ட 'நான் கபாலி அல்ல' இணை­யத் தொட­ரில் நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது.

"போஸ் வெங்­கட், நிரோஷா, மலே­சிய நடிகை ஜாஸ்­மின் ஆகி­யோ­ருடன் இணைந்து நானும் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தேன். கேமரா முன்பு நின்ற முதல் அனு­ப­வம் அது­தான்.

"படப்­பி­டிப்­புக்கு முன்பு ஒத்­திகை பார்த்­த­னர். அத­னால் ஓர­ளவு சமா­ளித்­து­விட்­டேன். எனி­னும், அந்­தத் தொடர் எனக்கு நல்ல பெயரை வாங்­கிக்­கொ­டுத்­தது," என்று சொல்­ப­வ­ருக்கு, அதன் பிற­கு­தான் மன­தில் சினிமா ஆசை எட்­டிப்­பார்த்­த­தாம்.

நாம் ஏன் சினி­மாத்­து­றையைத் தேர்ந்­தெடுக்­கக் கூடாது என்ற கேள்வி எழுந்­த­தும், உடனே தனது குடும்­பத்­தா­ரு­டன் கலந்­தா­லோ­சித்­தி­ருக்­கி­றார். அதன் பிறகு சென்­னைக்­கும் இடம்­பெயர்ந்­துள்­ளார்.

"எந்­த­வித சினிமா பின்­ன­ணி­யும் இல்­லா­மல் தமிழ்த் திரை­யு­ல­கில் அடி­யெ­டுத்து வைத்­தேன். என்­னைப் போன்­ற­வர்­க­ளுக்கு வாய்ப்பு கிடைத்­தது மிக­வும் கடி­னம் என்று ஒரு­சி­லர் என் காது­ப­டவே பேசி­னார்­கள். அத­னால் மன­துக்­குள் சிறிய அச்­சம் எட்­டிப் பார்த்­தது.

"ஆனா­லும் முயற்சி செய்­வதை நிறுத்­தக்­கூடாது என்­ப­தில் முடி­வாக இருந்­தேன். 'யுத்த சத்­தம்' படத்­தைப் பொறுத்­த­வரை ஓடும் பேருந்­தில் ஏறிய கடைசி பயணி மாதி­ரி­தான் அந்­தப் பட வாய்ப்பு கிடைத்­தது. அந்­தப் படத்­தின் இயக்­கு­நர் எழி­லைச் சந்­தித்­த­போது நடி­கர், நடி­கை­யர் தேர்வு முன்பே முடிந்­து­விட்­டது என்­றார். ஏமாற்­றத்­து­டன் திரும்­பி­விட்­டேன்.

"ஆனால், அடுத்த மூன்று நாள்­க­ளி­லேயே அவ­ரி­டம் இருந்து அழைப்பு வந்­தது. அது­வும் நாய­கிக்கு இணை­யான கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க வாய்ப்பு தந்­தார் இயக்­கு­நர். படம் முழுக்க பார்த்­தி­பன் சாரு­டன் பய­ணிப்­பேன்.

"அவ­ரைப் பற்றி நான் சொல்­லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை. வெளியே நகைச்­சு­வை­யாக சிரித்­துப் பேசு­வார். ஆனால் படப்­பி­டிப்பு, நடிப்பு என்று வந்­து­விட்­டால் முழுக்­க­வ­ன­மும் அதில்­தான் இருக்­கும். என்­னைப்­போன்ற புது­மு­கம் எந்த அள­வுக்கு ஈடு­பாட்­டு­டன் உழைப்­போமோ, அதே­போல் அவ­ரும் உழைக்­கி­றார்.

"இந்­தப் படத்­தின் மூலம்­தான் நடிப்பு என்­றால் என்­ன­வென்று கற்­றுக்­கொண்­டேன். யதார்த்­த­மாக நடிப்­பது எப்­படி என்று அவர்­தான் சொல்­லிக்­கொ­டுத்­தார். பத்து படங்­களில் நடித்த அனு­ப­வத்தை ஒரே படத்­தில் பெற்­று­விட்­டேன்.

"இயக்­கு­நர் எழில் மிக­வும் மென்­மை­யா­ன­வர். அனைத்து கலை­ஞர்­க­ளு­டன் அன்­பா­கப் பேசித்­தான் வேலை வாங்­கு­வார். அவர் என்­னி­டம் பேசு­கி­றார் என்­றால், என் அரு­கில் இருப்­ப­வர்­க­ளுக்­குக்­கூட எது­வும் கேட்­காது. எனக்கு மட்­டும்­தான் கேட்­கும். அந்த அளவு மரி­யா­தை­யாக நடத்­து­வார்," என்று சொல்­லும் சந்­தி­ரி­கா­வுக்கு, 'அறம்', 'அருவி' போன்று நாய­கிக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள படங்­களில் நடிக்க விருப்­ப­மாம்.

இவர் சிவ­கார்த்­தி­கே­ய­னின் தீவிர ரசி­கை­யாம். எப்­போ­தும் சமூக வலைத்­த­ளங்­களில் ஏதா­வது பதி­விட்­ட­படி இருக்­கி­றார்.

இன்ஸ்­ட­கி­ரா­மி­லும் டுவிட்­டர் தளத்­தி­லு­மா­கச் சேர்த்து இரு­நூ­றா­யி­ரம் பேர் சந்­தி­ரி­கா­வைப் பின் தொடர்­கி­றார்­கள்.

"குறை­வான படங்­களில் நடித்­தா­லும், ரசி­கர்­கள் நம்மை மன­தில் வைத்­தி­ருக்க வேண்­டும். அது போதும்," என்­கி­றார் சந்­தி­ரிகா.