ரசிகருக்காக கண்கலங்கிய சூர்யா

ரசிகருக்காக கண்கலங்கிய சூர்யா

1 mins read
466b5f6c-9595-4a48-9230-9c6c74a16b0c
-

தனது தீவிர ரசி­கர் விபத்­தில் பலி­யா­னதை அடுத்து நாமக்­கல்­லில் உள்ள அவ­ரது வீட்­டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரி­வித்­தார் சூர்யா.

27 வய­தான ஜெக­தீஷ் என்ற அந்த ரசி­க­ருக்­குத் திரு­ம­ணமாகி மூன்று வயதில் பெண் குழந்தை உள்­ளது.

சூர்யா ரசி­கர் மன்­றத்­தின் நாமக்­கல் மாவட்ட செய­லா­ள­ராக இருந்­தார் ஜெக­தீஷ். இந்­நி­லை­யில், நாமக்­கல் மேட்­டுத்­தெ­ரு­வில் உள்ள அவ­ரது வீட்­டிற்கு நேற்று முன்­தி­னம் இரவு திடீ­ரென சென்ற சூர்யா, அவ­ரது உரு­வப் படத்தை வணங்கி அஞ்சலி செலுத்­தி­னார். பின்­னர் அவ­ரது மனைவி, குழந்­தைக்கு ஆறு­தல் கூறி­ய­போது சூர்யா கண்­க­லங்­கி­னார்.