ரஜினியை நேரில் சந்தித்துப் பேசியது குறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
"இந்திய சினிமாவின் 'டான்' ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரைச் சந்தித்த அந்த அறுபது நிமிடங்கள் என் வாழ்நாள் நினைவாக இருக்கும்.
"உங்கள் நேரத்திற்கும் 'டான்' படத்திற்கான உங்கள் மதிப்புமிக்க பாராட்டிற்கும் நன்றி தலைவா," என்று பதிவிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

