சிம்பு நடித்துள்ள 'மாநாடு' படம் உலகெங்கும் 117 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளது. இத்தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான 'மாநாடு' படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் காணும் படங்களில் நடித்தவர்களின் சம்பளம்தான் உடனுக்குடன் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், அஜித் நடித்த 'வலிமை', விஜய் நடித்த 'பீஸ்ட்' ஆகிய படங்கள் இருநூறு கோடி ரூபாய் வசூல் கண்டன.
அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்', 'டான்' ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்து நூறு கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளன.
இதையடுத்து, நூறு கோடி ரூபாய் 'சங்கத்தில்' சிவாவும் இணைந்துள்ளார்.
அதனால்தான் சிவாவை நடிகர் ரஜினியும் நேரில் அழைத்துப் பாராட்டி உள்ளார்.
இந்நிலையில், சிம்புவின் படமும் 117 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான டுவிட்டர் பதிவில், "இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக 'மாநாடு' அமைந்துள்ளது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

