உதயநிதி: ஆரிதான் உண்மையில் நாயகன்

1 mins read
4bfe5aa2-aa34-4572-94da-c240e26bd952
நிகழ்ச்சி ஒன்றில் ஆரி, உதயநிதி ஸ்டாலின். -

'நெஞ்­சுக்கு நீதி' படத்­தின் வெற்­றிக்கு அதன் இயக்­கு­நர் அருண்­ராஜா காம­ரா­ஜா­தான் கார­ணம் என்­கி­றார் உத­ய­நிதி ஸ்டா­லின்,

இந்­தப் படத்­தின் உண்­மை­யான கதா­நா­ய­கன் என்­றால் அது நடிகர் ஆரி தான் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இப்­ப­டத்­தில் ஆரி அர்­ஜுனா, தான்யா ரவிச்­சந்­தி­ரன், இள­வ­ரசு உள்­பட பலர் நடித்­துள்­ள­னர். அண்­மை­யில் வெளி­யீடு கண்ட இப்­ப­டம் விமர்­சன, வசூல் ரீதி­யில் வர­வேற்பு பெற்­றுள்­ளது.

இந்­நி­லை­யில் இப்­ப­டத்­தில் பணி­யாற்­றி­ய­வர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் விழா நடந்­தது.

அதில் கலந்­து­கொண்டு பேசிய படத்­தின் நாய­கன் உத­ய­நிதி, மனதுக்கு நிறை­வ­ளிக்­கும் வகை­யில் நேர்­மை­யான படத்தை ரசிகர்­க­ளுக்கு கொடுத்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"எங்­க­ளு­டைய முயற்­சிக்­குக் கிடைத்த பாராட்­டிற்கு நன்றி. மேலும், தயா­ரிப்­பா­ளர்­கள் இரு­வ­ருக்­கும் நன்றி. எனக்கு எந்­த­வி­த­மான சிர­ம­மும் கொடுக்காமல் காட்சி­க­ளைப் படம்­பி­டித்­துள்­ளார் ஒளிப்­ப­தி­வா­ளர். அவ­ருக்­கும் நன்றி சொல்ல வேண்­டும்.

"படத்தை முழு­மை­யா­கப் பார்த்த பிறகு ஒரு விஷ­யத்தை உணர்ந்­தேன். ஆரி­தான் இந்தப் படத்­தின் உண்மையான கதாநாய­கன்.

"இந்­திப் படத்தை இயக்­கு­நர் தமி­ழுக்குத் தகுந்­தாற்­போல் மாற்­றி­யுள்­ளார். படத்­தின் வெற்­றிக்கு முக்­கிய கார­ணம் அவர்­தான். சாதித்­துக் காட்­டி­விட்­டார் இயக்­கு­நர் அருண். இந்­தப் படத்­தில் நடித்த அனை­வ­ரும் சிறப்­பாக நடித்­துள்­ள­னர்.

இந்த வெற்­றி இயக்­கு­நர் அரு­ணுக்­கும் அவ­ரது மனை­விக்­கும் சமர்ப்­ப­ணம்," என்­றார் உத­ய­நிதி ஸ்டா­லின்.

, :   