'பூலோகம்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'அகிலன்'. இதன் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு நேற்று வெளியானது.
இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக் கின்றனர்.
ஜெயம் ரவிக்கு இதில் இரட்டை வேடங்கள் என்றும் ஒரு கதா பாத்திரத்தில் கடற்படை அதிகாரி யாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும் சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.
80 விழுக்காட்டுக்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப் பெரிய கொள்கலன் தளத்தில் எடுக்கப்படும் காட்சிகளுடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது.
முழுக்க துறைமுகப் பின்னணியில் உருவாகியுள்ள 'அகிலன்' படம், தமிழ்த் திரையுலகில் புதுமையான முயற்சியாக இருக்கும் என்றும் ஜெயம் ரவியின் பாத்திரங்களும் அவரது நடிப்பும் பெரிதும் பேசப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியீடு காண உள்ளது.