சாக்கடையில் விழுந்ததால் மூச்சுத்திணறல்; உயிருக்குப் போராடி மீண்ட போண்டா மணி

சாக்கடையில் விழுந்ததால் மூச்சுத்திணறல்; உயிருக்குப் போராடி மீண்ட போண்டா மணி

2 mins read
32f9f5cc-5840-4707-934a-34d92d44a845
-

அண்­மை­யில் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்டு, அரசு மருத்­து­வ­ம­னை­யில் உயி­ருக்­குப் போராடி மீண்டு வந்­துள்­ளார் நடி­கர் போண்டா மணி.

இந்­நி­லை­யில், திரை­யு­ல­கத்­தி­னர் அவரை அறவே கண்­டு­கொள்­ள­வில்லை என்று ஊட­கத்­தில் செய்தி வெளி­யா­னதை அடுத்து, நடி­கர் மயில்­சாமி உள்­ளிட்­ட­வர்­கள் தேடி வந்­த­ன­ராம்.

32 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அரசு மருத்­து­வ­ம­னையை நாடிச் சென்­ற­தா­கச் சொல்­கி­றார் போண்டா மணி. நடி­கர் விவேக்­கின் நண்­ப­ரான 'செல்' முரு­கன்­தான் முத­லில் மருத்­து­வ­ம­னைக்­குத் தேடி வந்து போண்டா மணி­யைச் சந்­தித்­துள்­ளார். மருத்­து­வர்­க­ளி­டம் பேசு­வ­தில் தொடங்கி பணம் கொடுத்­தது வரை பல்­வேறு உத­வி­க­ளைச் செய்தார்.

"உடம்பு முடி­யாத சம­யத்­தில்­தான் இன்­ன­மும் என் மீது பாசம் வைத்­துள்ள மனி­தர்­கள் உள்­ள­னர் என்­பதை உணர்ந்­தேன். அந்த மகிழ்ச்­சி­யி­லேயே விரை­வில் மீண்டு வந்­து­விட்­டேன்.

"வடி­வேலு நடிக்­காத கால­கட்­டத்­தில் அவ­ரது குழு­வில் இருந்த நான் உட்­பட அனை­வ­ருமே வேலை இல்­லா­மல் சிர­மப்­பட்­டோம். அது அனை­வ­ருக்­கும் தெரிந்­தி­ருந்த போதி­லும், யாரும் எந்த உத­வி­யும் செய்­ய­வில்லை. இப்­போது பணம் இருந்­தால் யார் வேண்­டு­மா­னா­லும் சினி­மா­வில் நடிக்­க­லாம் என்­றா­கி­விட்­டது. முன்பு சினி­மா­வில் நடிப்­ப­வர்­க­ளுக்கு மரி­யாதை இருந்­தது. இப்­போது அப்­படி இல்லை. சின்­னத்­திரை இருப்­ப­தால் எங்­க­ளைப் போன்ற சில­ருக்கு பிழைப்பு நடக்­கிறது.

"நான் கையெ­டுத்­துக் கும்­பிட்­டுக் கேட்­டுக்­கொள்­வது ஒன்­று­தான். எல்லா கதா­நா­ய­கர்­களும் எங்­க­ளைத் திரும்­பிப் பார்க்க வேண்­டும். நாங்­கள் திரை­யு­ல­கில் நீடிக்க வாய்ப்­பு வேண்­டும்.

"எனக்கு யாரும் உத­வ­வில்லை என்று ஊட­கத்­தில் செய்தி வெளி­யா­ன­தும், நடி­கர் மயில்­சாமி ஓடி வந்து, 'நீங்­கள் அப்­ப­டி­யெல்­லாம் சொல்­லக்­கூ­டாது' என்று அறி­வு­றுத்தி பண­மும் கொடுத்­தார். அதன் பிறகு இயக்­கு­நர் பி. வாசு, நடி­கர்­கள் சத்­ய­ராஜ், சரத்­கு­மார் ஆகி­யோ­ரும் பண உதவி செய்­த­னர்.

"செல் முரு­கனை விவேக்­கு­டன் பார்த்­தி­ருக்­கி­றேன். ஆனால் அவர் தேடி வந்து கைகொ­டுப்­பார் என எதிர்­பார்க்­கவே இல்லை.

"ரஜினி, விஜய்­யின் உத­வி­யாளர்­கள் தொலை­பே­சி­யில் தொடர்பு­கொண்டு உடல்­ந­லம் குறித்து விசா­ரித்­த­னர். அஜித்­துக்கு என்னை மிக­வும் பிடிக்­கும். அவ­ரு­டன் ஆறு படங்­கள் நடித்­துள்­ளேன். இவர்­கள் எல்­லாம் எங்­க­ளைப் போன்­ற­வர்­க­ளுக்கு வாய்ப்பளித்தால் உத­வி­யாக இருக்­கும்.

அண்­மை­யில் ஒரு படப்­பி­டிப்­பின்­போது நான் சாக்­க­டை­யில் விழு­வது போன்ற காட்­சியை எடுத்­த­னர். ஆனால், அதற்­கான அரங்கை அமைக்க முடி­ய­வில்லை. படக்­குழு என்ன செய்­வது என யோசித்­த­போது அங்­கி­ருந்த உண்­மை­யான சாக்­க­டை­யில் விழு­கி­றேன் என்­றேன். ஆனால் காட்­சியை எடுத்து முடிக்க நீண்ட நேர­மா­கி­விட்­டது. அன்று இரவு லேசான மூச்­சுத்­தி­ண­ற­லில் தொடங்கி, பிறகு நிலைமை மோச­மா­கி­விட்­டது. அத­னால்­தான் சிசிக்சை பெற்­றேன்," என்­கி­றார் போண்டா மணி.