பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிய யாஷிகா

பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிய யாஷிகா

1 mins read
8ee31469-4398-4c7f-8e33-a942a817adb3
-

தாம் உழைத்து சம்­பா­தித்து சொந்த வீடு வாங்க வேண்­டும் என்று தன் பெற்­றோர் விரும்­பி­ய­தாகவும் அந்த ஆசை­யைத் தாம் நிறை­வேற்றி உள்­ள­தா­க­வும் கூறு­கி­றார் யாஷிகா ஆனந்த்.

இது­கு­றித்து அவர் தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார். அதில், சொந்த வீடு வாங்கி, தன் பெற்­றோ­ரின் கனவை தம் மால் நிறை­வேற்ற இய­லும் என ஒரு­போ­தும் ஒரு­போ­தும் நினைத்­ததே இல்லை என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

"நீங்­கள் மிக­வும் ஆசைப்­பட்ட, விரும்­பிய ஒரு கனவு கடின உழைப்­பின் மூலம் கண்­டிப்­பாக நிறை­வே­றும். எனக்கு 19 வய­தாக இருக்­கும்­போது­தான் இப்­போது வாங்­கி­யுள்ள வீட்­டைப் பார்த்து முன்­ப­திவு செய்­தோம். ஆனால் கொரோனா தொற்று, சாலை விபத்தில் சிக்கியது போன்­ற­வற்­றால் இரண்டு ஆண்­டு­கள் வேகமாக கடந்­தோ­டி­விட்­டன.

"இந்த வீட்­டுக்­குள் நுழை­வ­தற்­கான சரி­யான நேரம் இப்­போ­து­தான் அமைந்­தது. இந்த வய­தில் நான் ஒரு வீட்டை வாங்­கு­வேன் என நினைக்­கவே இல்லை. நான் ஆசீர்­வ­திக்­கப்­பட்­ட­வ­ளாக உணர்­கி­றேன்," என்­கிறார் யாஷிகா ஆனந்த்.