நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள 'பட்டாம் பூச்சி' படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகிறது. இதை பத்ரி இயக்க, குஷ்பு தயாரித்துள்ளார்.
சைக்கோ, திகில் கதையை மையமாகக் கொண்டு உருவாகிஉள்ளது இப்படம். இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக இம்மாதம் 13ஆம் தேதியே இப்படம் திரைகாணும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முதன் முறையாக இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜெய். அவரும் சுந்தர்.சி.யும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் திரையில் அனல் தெறிக்குமாம். இந்தப் படத்தில் சுந்தர்.சி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாகத் தெரிகிறது. ஜெய்யின் வில்லத்தனம் புது மாதிரியானதாக இருக்கும் என்றும் ரசிகர்களை நிச்சயம் மிரளவைக்கும் என்றும் இயக்குநர் உத்தரவாதம் அளிக்கிறார்.

