கொரோனாவால் முடங்கிக்கிடந்த தமிழ்த் திரையுலகம் இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து ஏராளமான புது நாயகிகள் கோடம்பாக்கத்துக்குப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அந்தப் பட்டியலில் சங்கீதா சிருங்கேரியும் இணைந்துள்ளார். கர்நாடகாவில் இருந்து தமிழுக்கு வந்துள்ள மேலும் ஒரு கன்னடத்துப் பைங்கிளி என்று சமூக ஊடகங்களில் இளையர்கள் பலரும் குறிப்பிட்டு, சங்கீதாவுக்கு வாழ்த்து கூறி வரவேற்றுள்ளனர்.
தாம் நடிகையானது, மூன்று படங்களில் நடித்து முடித்திருப்பது, தமிழ்ப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளது ஆகிய அனைத்துமே கனவு போல் இருப்ப தாகச் சொல்கிறார் சங்கீதா.
சங்கீதாவின் தந்தை சிவகுமார் இந்திய விமானப் படையில் பணியாற்றியவர். தாயார் மருத்துவத்துறை ஆலோசகர். சிருங்கேரி என்பது இவர் பிறந்த ஊராம். அதனால் தன் பெயருடன் அதைச் சேர்த்துக் கொண்டுள்ளார்.
"மற்றபடி பட்டப்படிப்பை முடித்துவிட்டேன். சிறு வயது முதல் சமூக சேவையிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும்போது நிறைய பதக்கங்கள் பெற்றிருக்கிறேன். 'என்சிசி'யிலும் பங்கேற்றேன்.
"குழந்தைப் பருவத்தில் இருந்தே பெற்றோர் எனக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக உள்ளனர். நான் எதைக் கேட்டாலும் மறுக்க மாட்டார்கள். அப்படித்தான் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அதற்குப் பச்சைக்கொடி காட்டினர். இப்படிப்பட்ட தந்தையும் தாயும் கிடைத்த வகையில் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி," என்கிறார் சங்கீதா.
பொதுவாக விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கி, அதன் மூலம் சின்னத்திரை வாய்ப்புகளைப் பெற்று, அதன்பிறகு திரைத்துறையில் அறிமுகமா வார்கள்.
பல நடிகைகளின் பாதை இதுவாகத்தான் இருக்கும். ஆனால் சங்கீதா விஷயத்தில் எல்லாமே நேர்மாறாக உள்ளது. விளம்பரங்களில் நடிக்கும் முன்பே சின்னத்திரை தொடர் வாய்ப்பு தேடிவந்ததாம்.
"கடந்த 2016ஆம் ஆண்டு கன்னடத்தில் உருவான 'ஹரஹர மஹாதேவகி' என்ற தொடரில் நடித்துள்ளார். அதன் பிறகு இரண்டு தெலுங்குத் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தபோது தான் '777 சார்லி' பட வாய்ப்பு கிடைத்தது.
"அதன் பிறகு இந்திப் படத்திலும் நடித்துள்ளேன். இப்போது தமிழில் நடிக்கவும் ஒப்பந்தமானது மகிழ்ச்சி தருகிறது," என்று சொல்லும் சங்கீதா முன்னணி இயக்குநரின் படத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் படத்தயாரிப்புத் தரப்பால் வெளியிடப்படுமாம்.
இவர் அண்மையில் பார்த்து ரசித்த படம் 'கர்ணன்'. அதில் தனுஷின் நடிப்பும் திரைக்கதை அமைப்பும் தம்மை மிகவும் கவர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்.
"அது மட்டுமல்ல, சங்கீதாவுக்குப் பிடித்தமான நடிகர் தனுஷ். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறார்.
சங்கீதா ஓர் உடற்பயிற்சிப் பிரியை. எப்போது நேரம் கிடைத்தாலும் பலவிதமான உடற் பயிற்சிகளை மேற்கொள்கிறார். தந்தை விமானப்படை அதிகாரி என்பதால் அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அந்தந்த நேரத்துக்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பாராம்.
"தமிழ் மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் அவர்கள் பிறர்க்கு அளிக்கும் மரியாதை. நான் சென்னைக்கு வந்தது முதல் என்னைச் சுற்றி உள்ள அனைவருமே கண்ணியமாகவும் அக்கறையுடனும் நடந்து கொள்கிறார்கள்.
"தங்களுக்குப் பிடித்தமான கலைஞர்களை அவர்கள் தாங்கிப் பிடிக்கிறார்கள்.
"ஒரு நல்ல படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு விரைவில் அறிமுகமாக உள்ளேன். அனைவரது ஆசியும் வாழ்த்தும் எனக்குத் தேவை," என்கிறார் சங்கீதா சிருங்கேரி.

