தெலுங்கில் வெளியாகி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதிலும் ராஷ்மிகாதான் நாயகி.
சுகுமார் இயக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். எதிர் வரும் ஜூலை மாதம் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இம்முறை அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில் இடையேயான மோதல் அதிகம் இருக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல். மேலும் பெரும் பொருள்செலவில் உருவாகிறது 'புஷ்பா-2'.

