'மீண்டும் இணைய ஆசை'

'மீண்டும் இணைய ஆசை'

3 mins read
4785931d-2cc4-4ca0-9b02-e8f82698a1ba
-

'சூர­ரைப் போற்று' படத்­தின் வெற்­றி­க்­குப் பிறகு அபர்ணா பால­மு­ரளி தமி­ழில் பெரி­தாக ஒரு வலம் வரு­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில், அவரைத் தமிழ்ப் படங்­களில் அறவே காணோம்.

இந்­நி­லை­யில், 'வீட்ல விஷே­சம்' படம் மூலம் மீண்­டும் தமிழ் ரசி­கர்­களைச் சந்திக்­கி­றார் அபர்ணா.

இந்­தி­யில் வெளி­யாகி வெற்றி பெற்ற 'பதாய் ஹோ' திரைப்­படத்தைத் தழுவி தமி­ழில் எடுக்­கப்­பட்­டுள்ள படம் இது.

சில நடி­கை­கள் மறு­ப­திப்பு செய்­யப்­படும் படங்­களில் நடிக்­கத் தயங்­கு­வ­தா­கக் கூறப்­படும் நிலை­யில், அபர்ணா அது­குறித்து தாம் அதி­கம் யோசிக்­க­வில்லை என்­கிறார்.

"இந்­தப் படத்தை இந்­தி­யில் நான் பார்த்­தி­ருக்­கி­றேன். அதில் சன்யா மல்­ஹோத்ரா நாயகி. அவ­ரைப் போன்று நடிக்­கா­மல் வேறு என்ன வித்­தி­யா­ச­மாக செய்­ய­லாம் என்று யோசித்­தேன். அதன்பிறகு சில விஷ­யங்­களை முடிவு செய்து, அவற்றைக் கடைப்­பி­டித்­தேன்.

"இந்­திப் பதிப்­புக்­கும் தமி­ழுக்­கும் நிறைய வித்தி­யா­சங்­கள் இருக்­கும். குறிப்­பாக, வச­னங்­கள் எல்­லாம் மிகவும் எளி­மை­யாக இருக்­கும் என்­ப­து­டன், தமி­ழுக்கு ஏற்றாற் போல் காட்சி­களை அமைத்­துள்­ள­னர்," என்­கி­றார் அபர்ணா.

'சூர­ரைப் போற்­று' படத்துக்­குப் பிறகு மீண்­டும் 'வீட்ல விஷே­சம்' படத்­தில் ஊர்­வ­சி­யு­டன் இணைந்து நடித்­தது சுவா­ர­சி­ய­மாக இருந்­த­தாம்.

சூர்யா படத்­தில் நன்கு முதிர்ச்­சி­யான தாயாக நடித்­தி­ருப்­ப­வர், இம்­முறை மிக­வும் அப்­பா­வி­யான, குறும்­புத்­த­னம் நிறைந்த அம்மா­வாக நடித்­துள்­ளா­ராம்.

"எந்­தக் காட்­சி­யாக இருந்­தா­லும், அதை மெரு­கேற்­று­வ­தில் ஊர்­வசி மேடம் ரொம்ப கெட்­டிக்­கா­ரர். அவ­ருக்­கும் சத்­ய­ராஜ் சாருக்கு மான உடல்­மொழி கச்­சி­த­மாக அமைந்­துள்­ளது. இரு­வ­ரும் வரும் காட்­சி­கள் ரசி­கர்­களை நிச்­ச­யம் கவ­ரும்," என்று சொல்­லும் அபர்ணா, 'மகே­ஷிண்ட பிர­தி­கா­ரம்' படம்­தான் தமது திரைப்பய­ணத்­தில் மிக முக்­கி­ய­மான படம் என்­கி­றார்.

மலை­யா­ளத்­துக்­குப் பிறகு பின்­னாள்­களில் அந்­தப் படத்தை தமி­ழி­லும் தெலுங்­கி­லும் மறு­பதிப்பு செய்­த­னர். அந்­தப் படம் பெரிய வெற்றி­யைப் பெறும் என்று தாம் எதிர்­பார்க்­கவே இல்லை என்­கி­றார்.

"அந்­தப் படத்­தில் நடித்து முடித்த மறு­நாளே குஜ­ராத் மாநி­லத்­துக்­குச் சென்­று­விட்­டேன். படத்­தின் விளம்­பர நிகழ்­வு­க­ளில்­கூட பங்­கேற்­க­வில்லை. அந்­தப் படத்­தில் எனது கதா­பாத்­தி­ரம் எப்­ப­டிப்­பட்­டது என்­பதை யூகிக்க இய­லாத வகை­யில், கடைசி வரை­யில் ரக­சி­யம் காத்தனர்.

"எதிர்­பார்த்­த­ப­டியே அந்­தப் பாத்­தி­ரத்­துக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த வர­வேற்பு. வாய்ப்பு இருந்­ததால் அந்­தப் படத்­தின் இயக்­கு­ந­ரு­டன் மீண்­டும் பணி­யாற்ற விரும்­பு­கி­றேன்," என்­கிறார் அபர்ணா.

'தங்­கம்' என்ற மலை­யா­ளப் படத்­தில் நடித்து முடித்­துள்­ளார் அபர்ணா, அடுத்து மலை­யாளத்­தி­லேயே 'பத்­மினி' என்ற படத்­தில் நடித்து வரு­கி­றார். தமி­ழில் அசோக் செல்­வ­னு­டன் 'நித்­தம் ஒரு வானம்' படத்­தில் நடிக்­கி­றார்.

"இப்­போது 'சூர­ரைப் போற்று' படத்­தின் இந்திப் பதிப்பு தயா­ராகி வரு­கிறது. இதில் அக்­‌ஷய் குமார் நாய­க­னாக நடிக்­கி­றார். சுதா கொங்கு­ரா­தான் இயக்­கு­நர்.

"பெரும்­பா­லா­ன­வர்­கள் தமிழ்க் குழு­வில் இடம்­பெற்­றி­ருந்­த­வர்­கள். மீண்­டும் அதே படக்­கு­ழு­வு­டன் இணைந்து பணி­யாற்ற விரும்­பு­கி­றேன்," என்று சொல்­லும் அபர்ணா, நல்ல பாடகி என்­பது பல­ருக்­குத் தெரி­யா­மல் இருக்­க­லாம்.

அண்­மை­யில், தனி­யார் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்ற அவர், அந்­நி­கழ்ச்­சி­யில் பாடி சிறார்­களைக் கைதட்டி பாராட்டி குதூ­க­லித்­தார். இந்த அளவு எளி­மை­யாக இருக்­கும் ஒரு­சில நடி­கை­களில் அபர்­ணா­வும் ஒரு­வர் என ரசி­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

"எனக்­கும் இசை­யில் ஆர்­வம் அதி­கம். சிறார்­கள் இவ்­வ­ளவு திற­மை­யு­டன் இருப்­பதைப் பார்க்­கும்­போது உற்­சா­க­மாக இருக்­கிறது. அதனால்­தான் அந்த நிகழ்ச்­சி­யில் நானும் ஒரு பாட­லைப் பாடி­னேன்," என்­கி­றார் அபர்ணா.

, :

  