'காதலைச் சொல்லாமலேயே காதலித்தோம்'

'காதலைச் சொல்லாமலேயே காதலித்தோம்'

3 mins read
dd6d3675-1670-428c-8257-0af66dc9c6fb
-

'ஜெய்­பீம்' படத்­துக்­குப் பிறகு தமிழ் ரசி­கர்­க­ளி­டம் நன்கு அறி­மு­க­மா­கி­விட்­டார் லிஜோ மோல்.

'சிவப்பு மஞ்­சள் பச்சை' படத்­தின் மூலம் தமிழில் அறி­மு­க­மா­ன­வர். மலை­யா­ளத்­தில் முன்­னணி நடிகை என்­றா­லும் தமி­ழில் நடிக்க வேண்­டும் என்ற ஆர்­வத்­தால் அவ்­வப்­போது சென்­னை­யில் முகா­மி­டு­கி­றார்.

திரை­யில் மட்­டு­மல்ல, நேரி­லும் லிஜோ மோலி­டம் ஒரு­வித எளி­மை­யைக் காண முடி­கிறது. இயல்­பா­கப் பேசு­கி­றார். சில விஷ­யங்­களை வெளிப்­ப­டை­யா­கப் போட்டு உடைக்­கி­றார்.

அறி­மு­க­மான புதி­தில் தமி­ழில் பேச சிர­மப்­பட்­ட­வர், இப்­போது சர­ள­மாக அழ­குத் தமி­ழில் பேசு­வது உற்­சா­கம் அளிக்­கிறது.

"ஒரு மொழி­யைப் பிழை இல்­லா­மல் பேசி­னால் போதும், அதுவே வெற்­றி­தான். உண்­மை­யில் சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு வரை தமி­ழில் பேச வராது. பள்­ளி­யில் படிக்­கும்­போது தமி­ழும் ஒரு பாடம் என்பதால் ஓர­ளவு எழு­த­வும் வாசிக்­க­வும் தெரி­யும்.

"ஆனால் 'ஜெய்­பீம்' படத்­துக்­காக இரு­ளர் சமூக மக்­க­ளு­டன் பேச வேண்­டி­யி­ருந்­தது. அதற்­காக தமிழில் பேச கற்­கத் தொடங்­கி­னேன். அந்­தப் படம் முடி­வ­தற்­குள் தமிழ் ஓர­ளவு வச­மா­கி­யுள்­ளது.

"நான் நடித்த காட்­சி­க­ளுக்கு நானே பின்­ன­ணிக் குரல் கொடுக்க வேண்­டும் என இயக்­கு­நர், தயா­ரிப்­பா­ளர், சூர்யா என மூவ­ரும் இடை­வி­டா­மல் ஊக்­கம் அளித்­த­னர்.

"பின்­னணி பேசிய பிறகு தமிழ் கொஞ்­சம் சர­ள­மா­கி­விட்­டது," என்று சொல்­லும் லிஜோ மோலுக்கு பூர்­வீ­கம் கேரளா என்­பது சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. தந்தை விவ­சாயி, தாயார் அரசு ஊழி­யர். ஒரு தங்கை உள்­ளார்.

அம்மா பெயர் லிசம்மா. அப்பா பெயர் ஜோஸ். இரு­வ­ரது பெயர்­க­ளின் முதல் எழுத்தை சேர்த்து லிஜோ என்று தமக்­குத் தாமே பெயர் சூட்­டிக்­கொண்­டுள்­ளார் லிஜோ.

பட்­டப்­ப­டிப்பை முடித்த கையோடு ஊட­கத்­து­றை­யில் பணி­யாற்ற விரும்­பி­னா­ராம். ஆனால் ஒரு தொலைக்­காட்சி நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றி­ய­போது கிடைத்த அனு­ப­வங்­கள் அந்த வேலையே வேண்­டாம் என்று முடி­வெ­டுக்க வைத்­த­தாம்.

"அதன் பிறகு ஊட­கத்­துறை மீதான ஈர்ப்பு முடி­வுக்கு வர­வில்லை. அது­சார்ந்த பட்ட மேற்­ப­டிப்­பில் சேர்ந்த போது­தான் திரைப்­பட வாய்ப்பு தேடி வந்­தது.

"தமி­ழில் அறி­மு­க­மான வேகத்­தில் நான்­கைந்து படங்­களில் நடிப்­பேன் என்­று­தான் என் தோழி­கள் எதிர்­பார்த்­த­னர். ஆனால் எனக்கு முப்­பது வய­தா­கி­விட்­டது. அத­னால் திரு­ம­ணத்­துக்­குப் பிற­கு­தான் நடிப்பு என்று வீட்­டில் முட்­டுக்­கட்டை போட்­டு­விட்­ட­னர்.

"முது­க­லைப் படிப்­பின்­போ­து­தான் அருணைச் சந்­தி­னேன். அவர்­தான் ஒரு குறும்­ப­டத்­தில் நடிக்­கக் கேட்­டார். ஆனால் மறுத்­து­விட்­டேன். சுமார் ஐந்து ஆண்­டு­கள் காதலை வெளிப்­ப­டுத்­தா­ம­லேயே காத­லர்­க­ளாக இருந்­தோம். பிறகு வீட்­டில் விவ­ரம் தெரி­விக்க, அது திரு­ம­ணத்­தில் முடிந்­து­விட்­டது," என்­கி­றார் லிஜோ.

ஒரு படத்­தில் நடிக்க ஒப்­புக்­கொள்­ளும் முன்பு அதன் முழுக்­கதை, வச­னங்­களை அச்­சிட்டு தரச் சொல்லி, அதை ஒரு­முறைக்கு மூன்று முறை படித்து­வி­டு­வது இவர் வழக்­கம். அப்­போ­து­தான் தனது கதா­பாத்­தி­ரத்தை தனக்­குள் கொண்டு வர முடி­யும் என நம்பு­கி­றார்.

"கதைப்­படி என்­றா­லும், நட­னமா­டும் காட்­சி­கள் இருப்­பின் அந்­தப் படத்­தை தொடக்க நிலையிலேயே தவிர்த்­து­வி­டு­வேன். காரணம் எனக்கு அறவே நட­ன­மாட வராது.

"திரைத்­து­றை­யில் நீடிக்க முடி­யாது என்ற எண்­ணத்­து­டன்­தான் நடிக்க வந்­தேன். ஆனால் எனக்­கும் நடிக்க வரும் என்ற தன்­னம்­பிக்­கையை என்­னுள் விதைத்த படம் 'ஜெய்­பீம்'. அதை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது, அதுபோன்ற படைப்புகள் நிறைய வர வேண்டும்," என்கிறார் லிஜோ மோல்.