பாலாவின் 'அவன் இவன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். இந்தப் படத்தைத் தொடர்ந்து 'பாகன்', 'தெகிடி', 'அதே கண்கள்' ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
தற்பொழுது இவர் நடித்திருக்கும் படம் 'வேழம்'. இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன் நடித்திருந்தார்.
அந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நாயகன் அசோக் செல்வனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் இதில் பங்கேற்காத நிலையில் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன், இயக்குநர், தயாரிப்பாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜனனி ஐயர், "தெகிடி', 'வேழம்' என தலைப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன.
"நல்ல திரைப்படங்களை ஆதரிக்க தமிழ்த் திரையில் ஆட்கள் குறைவாக உள்ளனர். இருந்தும் 'வேழம்' படத்தை வெளியிட எஸ்பி சினிமா சார்பில் கிஷோர் முன்
வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
"நான் என் பெயரில் இருக்கும் ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டேன். இனிமேல் அனைவரும் என்னை 'ஜனனி' என்று அழைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

