'சொந்த வீடுகூட இல்லை'

'சொந்த வீடுகூட இல்லை'

3 mins read
fff36063-31d2-4bd7-a346-06e4d3b0b3e7
-

ஒரு படத்­துக்­காக உடல் எடை­யைக் கூட்­ட­லாம் மொட்டை, அடித்­துக் கொள்­ள­லாம். ஆனால் நடி­கர் மாத­வன் தன் அழ­கான பல் வரி­சையை உடைத்துக் கொண்­டுள்­ளார்.

அவர் இயக்­கி­யுள்ள 'ராக்­கெட்ரி: நம்பி விளைவு' எதிர்­வ­ரும் ஜூலை 1ஆம் தேதி உல­கெங்­கி­லும் வெளி­யா­கிறது. இது இந்­திய விண்­வெளி ஆய்வுக்­கழகத்­தில் விஞ்­ஞா­னி­யாகப் பணி­யாற்­றிய நம்பி நாரா­ய­ணனின் வாழ்க்­கையை மைய­மாக வைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள படம்.

இந்­நி­லை­யில் அவர் அண்­மை­யில் அளித்துள்ள பேட்டியில், பணத்­துக்­காக தாம் இந்­தப் படத்தை இயக்­க­வில்லை என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

அது மட்­டு­மல்ல, ஏரா­ள­மான படங்­களில் நடித்­திருந்­தா­லும் மாத­வ­னுக்கு சொந்த வீடு இல்லை. இன்னமும்­கூட வாடகை வீட்­டில்­தான் வசித்து வருகிறார்.

"நான் தமி­ழில் கடை­சி­யாக நடித்த 'விக்­ரம் வேதா', அதற்கு முன்பு நடித்த 'இறுதிச்­சுற்று' ஆகி­யவை வணி­கப் படங்­க­ளாக அமைந்தன. எனக்­குப் பணம் வேண்­டும் என்­றால், அதே­போன்ற வணி­கப் படங்­களை இயக்க முடி­யும். ஆனால் பணத்­துக்­காக 'ராக்­கெட்ரி' படத்தை எடுக்­க­வில்லை.

"நம்பி நாரா­ய­ணன் என்ற மனி­த­ரின் சாத­னை­க­ளை­யும் அவ­ருக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளை­யும் சொல்ல வேண்டும் என்­ப­தற்­கா­கவே இந்­தப் படத்தை தயா­ரித்­துள்­ளேன்.

"எனக்­குச் சொந்­த­மாக ஒரு வீடு­கூட கிடை­யாது. துபாய், இந்­தியா என எங்­கி­ருந்­தா­லும் வாடகை வீட்டில் தான் தங்­கி­யி­ருக்­கி­றேன். இந்­தப் படத்­துக்குப் பிறகு ஒரு வீடு வாங்கவேண்­டும் என என் மனைவி கண்­டிப்­பு­டன் கூறி­யுள்­ளார்.

"ஏனென்­றால், இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நாங்­கள் வீடு மாற வேண்­டி­யுள்­ளது. எனவே, எனக்கு பணம் என்­பது பெரிய விஷ­யம் கிடை­யாது. பணம் இன்­றைக்கு வரும் நாளைக்கு போகும். இந்­தக் கதையை மக்­க­ளுக்­குச் சொல்லவேண்­டும் என்­பதே எனது நோக்­கம்," என்று மாத­வன் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய விண்­வெளி ஆய்­வுக் கழ­கத்­தில் பணி­யாற்றி விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர் நம்பி நாராயணன் 1994ஆம் ஆண்டு திடீ­ரென கேரள காவல்துறை­யினரால் கைது செய்­யப்­பட்­டார்.

ராக்­கெட் தொழில்­நுட்­பத்தை வெளி­நாட்­டுக்கு விற்­ற­தாக அவர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டது. எனி­னும், பல ஆண்­டு­க­ளாக நீடித்த வழக்கு விசா­ர­ணை­யின் முடி­வில் நம்பி நாரா­ய­ணன் நிர­ப­ராதி என உச்ச நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

இதை மைய­மாக வைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள இப்­ப­டம், ஒரே சம­யத்­தில் தமிழ், இந்தி, ஆங்­கி­லம், மலை­யா­ளம், கன்­னட மொழி­களில் வெளி­யா­கிறது. ஏற்­கெ­னவே கான் திரைப்­பட விழா­வில் திரை­யி­டப்­பட்டு வர­வேற்­பைப் பெற்ற இந்­தப் படம், ஜூலை 1ஆம் தேதி உல­கெங்­கி­லும் உள்ள திரை­ய­ரங்­கு­களில் வெளி­யீடு காண்கிறது.

"நம்பி நாரா­ய­ணன் வாழ்க்­கையை மட்­டுமே வைத்து மூன்று திரைப்­ப­டங்­களை உரு­வாக்­க­லாம். ஒரு நடுத்­தர வர்க்­கத்து மனி­த­ரால் எப்­படி மிகப்­பெ­ரிய உய­ரங்­களை எட்ட முடிந்­தது என்­பது முக்­கி­ய­மான விஷ­யம்.

"இஸ்­ரோ­வில் அவர் செய்த சாத­னை­கள், அவ­ரது வாழ்க்­கை­யைப் பட­மாக்­க­ வேண்டும் என்ற எண்ணத்தை என் மன­தில் ஆழமாக விதைத்­து­விட்டது.

"அவ­ரு­டைய அனைத்­து­வி­த­மான பழக்க வழக்­கங்­க­ள், நடை, உடை பாவ­னை­க­ளைக் கவ­னித்­தேன். அவர் தமி­ழர் என்­ப­து­கூட முத­லில் எனக்­குத் தெரி­யாது. அவர் சாதனை­க­ளைப் பார்க்­கும்­போது அவர் மீதான வழக்கு எனக்­குச் சின்­ன­தாக ஆகிவிட்­டது.

"அவர் மீதான வழக்கு தொடர்­பான காட்­சி­கள் ஏழு நிமி­டங்­கள் மட்­டுமே படத்­தில் இடம்­பெற்­றி­ருக்­கும். நம்பி நாரா­ய­ணன் யார் என்­ப­து­தான் எனது தேட­லாக இருந்­தது. ஒரு பெரிய மனி­த­ரைப் பற்றி அவர் அடைந்­துள்ள உய­ரங்­கள் பற்றி அறி­யா­மலேயே இருந்­துள்­ளோம். இதுவே கூட பெரிய குற்றம்­தான்.

"அச்சு அச­லாக அவ­ரைப்­போல் காட்சி­யளிக்க வேண்­டும் என்­ப­தற்­காக என் வரிசைப் பற்­களை உடைத்து மாற்­றிக்­கொண்­டேன். 14 மணி நேரம் நக­ரா­மல் உட்­கார்ந்து ஒவ்­வொரு தலை­மு­டி­யை­யும் தனித்­த­னி­யாக எடுத்து 'கல­ரிங்' செய்­தி­ருக்­கி­றேன்.

"அதன் பிறகு சுற்றி இருப்­ப­வர்­கள் என்னை உண்­மை­யான நம்பி நாரா­ய­ணனா­கவே பார்த்­தார்­கள். ஐந்து ஆண்டு­கள் இந்­தக் கதை யிலேயே வாழ்ந்திருக்கிறேன். கொஞ்­சம் பிழைப்­புக்­காக 'மாறா', 'நிசப்­தம்' என்று இடை­யில் ஒன்­றி­ரண்டு படங்­களில் நடித்­தேன்.

"எனக்­கும் நம்பி சாருக்­கும் இருந்த அக்­கறை, பக்­கு­வம் வேற யாருக்­கும் சீக்கிரம் வராது என்று தோன்­று­கிறது," என்கிறார் மாத­வன்.

, :   