தனுஷ், ஐஸ்வர்யா மணவாழ்க்கை முறிந்து விட்டதில் இருவரது நண்பர்களுக்கும் மிகுந்த வருத்தம். இருவரையும் எப்படியாவது சமாதானப்படுத்தி, சேர்த்து வைக்க உண்மையான நண்பர்கள் இன்னும் முயற்சி செய்து வருகிறார்கள்.
அதன் பலனாக கடந்த சில வாரங்களாக தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்னையில் உள்ள ஒரு வீட்டில் சிலமுறை நேரில் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆர்யபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தச் சந்திப்பு நடந்ததாகத் தகவல். அந்த வீட்டின் கதவில் உள்ள பெயர்ப் பலகையில் இருவரது பெயர்களும் உள்ளன. அந்தப் பலகையை இருவரும் அகற்றவில்லை. நேரில் சந்தித்துப் பேசுவதன் மூலம் கருத்து வேறுபாடுகள் களைந்து இருவரும் மீண்டும் இணைவார்கள் என்பதே நட்பு வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.