இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்த நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு நன்றி தெரிவித்துள்ளார் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
உதவும் மனிதம் அமைப்பின் மூலம் சாலையோரம் வாழ்ந்து வருபவர்களுக்கு உணவளிப்பது, ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்பது என உதவுகிறார்.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு தமது அமைப்பின் மூலம் உதவ முன்வந்துள்ள அவர், நிவாரணப் பொருள்களை இலங்கை மக்களுக்கு நேரடியாக வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர், "நம்பிக்கையோடு பணிகளைத் தொடங்கலாம் என்றும் நீங்கள் அனுப்பும் பொருள் களை கப்பல் சேவை மூலம் கொண்டுவர நான் ஆவன செய் கிறேன்," என்றும் கூறியுள்ளார்.

