'கதறி அழுததைப் பார்த்தேன்'

'கதறி அழுததைப் பார்த்தேன்'

3 mins read

திரைப்­ப­டங்­களை திரை­ய­ரங்­கில் பார்க்­கும்­போது கிடைக்­கும் சுகமே அலா­தி­யா­ன­து­தான் என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

தாம் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரங்­கள் தம் மீது ஆதிக்­கம் செலுத்த, தாம் ஒரு­போ­தும் அனு­ம­திப்­பதில்லை என்­றும் சொல்­கி­றார்.

கதா­பாத்­தி­ரங்­களை தேர்வு செய்­வ­தில் முன்னை­விட அதிக கவ­னம் செலுத்­து­வ­தா­கச் சொல்­பவர், எப்­போ­துமே தமது முடிவு சரி­யாக இருக்­கும் என்று சொல்­வ­தற்­கில்லை என்­றும் ஒப்புக் கொள்கிறார்.

"நான் எப்­போ­துமே மன­திற்­பட்­ட­தை­த்தான் பேசு­வேன். பொய் செல்ல வேண்­டிய, எதை­யே­னும் சமா­ளிக்க வேண்­டிய அவ­சி­யம் எனக்கு இல்லை.

"இதற்கு முன்பு 'அதே கண்­கள்' படத்­தில் எதிர்­மறை கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கக் கேட்­ட­போது மறுத்­து­விட்­டேன். அது தவறு என்­பது இப்­போது புரி­கிறது. பொது­வாக நடி­கர்­கள் தங்­க­ளுக்­குப் பிடித்­த­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க வேண்­டும் என விரும்­பு­வார்­கள். நானும் அதற்கு விதி­வி­லக்­கல்ல," என்று சொல்­லும் ஐஸ்­வர்­யா­வுக்கு, கைவ­சம் போது­மான பட வாய்ப்பு கள் உள்­ளன. எனவே புதுப் படங்­களை ஏற்­ப­தில் அவ­ச­ரம் காட்­ட­வில்லை என்­கி­றார்.

"ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கும்­போ­தும் ஏதா­வது புது விஷ­யத்­தைக் கற்­றுக்­கொள்­கி­றேன். சிலர் என்­னைப் பாராட்­டும்­போது, 'ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ர­மா­கவே மாறி­விட்­டீர்­கள்' என்று புகழ்­வார்­கள். ஆனால் உண்மை அதற்கு நேர்­மா­றா­னது. எந்­த­வொரு கதா­பாத்­தி­ரத்­தை­யும் நான் தலைக்­குள் ஏற்­றிக்­கொள்­வதில்லை. அனைத்­தை­யும் சுமக்க நினைப்­பதும் சரி­யல்ல.

"நான் நடிக்­கும் பாத்­தி­ரங்­கள் என்­னை­யும் என் சிந்­த­னை­களை­யும் விழுங்­கி­வி­டு­வ­தாக இருக் கக் கூ­டாது. அதை நான் அனு­ம­திக்க மாட்­டேன்," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

ஒரே சம­யத்­தில் பல படங்­களில் நடிக்­கும்­போது ஒரு­கு­றிப்­பிட்ட ­பாத்திரத்தின் தன்­மையை மற்­றொரு பாத்­தி­ரத்­தின் மீது திணித்­து­வி­டக்­கூடாது என்­ப­தில் கவ­ன­மாக இருப்­ப­தா­கச் சொல்­ப­வர், இந்த முடி­வு­தான் தமக்­கான வாய்ப்­பு­களை தொடர்ந்து பெற்­றுத் தருகிறது என்கிறார்.

அண்­மை­யில் ஐஸ்­வர்யா நடித்த 'சூழல்' இணை­யத்­தொடர் வெளி­யீடு கண்டு, ரசி­கர்­க­ளி­டம் பலத்த வர­வேற்­பைப் பெற்றுள்­ளது. இதில் அவர் ஏற்றிருந்த கதா­பாத்­தி­ரம் பல­ரால் பாராட்­டப்­பட்­டது.

"கொரோனா காலக்­கட்­டத்­தில் படப்­பி­டிப்­பு­கள் நடை­பெ­றா­த­தால் பல படங்­கள் முடங்­கிப்­போ­யின. ஒரு­வ­கை­யில் எனக்கு அது பயிற்­சிக்­கா­ல­மாக மாறி­விட்­டது.

"நான் அடுத்­த­டுத்து நடிக்க ஒப்­புக்­கொண்ட படங்­களில் எனக்­கான கதா­பாத்­தி­ரங்­க­ளின் தன்மை குறித்து ஆராய்ந்­தேன். சில வச­னங்­க­ளை­யும் பேசி, ஒத்­திகை பார்க்க முடிந்­தது," என்று சொல்­லும் ஐஸ்­வர்யா, சிறு வய­தி­லேயே திரை­ய­ரங்­கு­க­ளுக்­குச் சென்று படம் பார்ப்­பது என்­றால் உற்­சா­க­மா­கி­விடுவாராம். அந்த அனு­ப­வங்­கள் இன்­ற­ள­வும் மன­தில் நிழ­லா­டு­வ­தா­கக் குறிப்­பி­டு­கி­றார். திரை­ய­ரங்­கு­களா, ஓடிடி தளங்­களா என்று கேள்வி எழுப்­பி­னால் தம்மால் பதில் சொல்ல முடி­யாது என்­கி­றார்.

"ரஜினி சார் படங்­கள், 'ஆர்ஆர்­ஆர்', 'பாகு­பலி' போன்ற படங்­களை திரை­ய­ரங்­கில் எழும் விசில், கைத்­தட்­டல்­க­ளுக்கு மத்­தி­யில் பார்க்­கும் அனு­ப­வத்தை கற்­பனை செய்து பாருங்­கள். அந்த மகிழ்ச்­சி­யும் உற்­சா­க­மும் வீட்­டில் அமர்ந்­த­படி பார்த்­தால் நிச்­ச­யம் கிடைக்­காது.

"ஒரு திரைப்­பட விழா­வில் நான் நடித்த 'க/பெ.ரண­சிங்­கம்' திரை­யி­டப்­பட்­டது. அதைப் பார்த்த சிலர் கண்­ணீர்­விட்டு கதறி அழு­ததை நான் நேர­டி­யா­கப் பார்த்­தேன். திரை­ய­ரங்­கு­க­ளின் தாக்­கம் என்­பது இது­தான். ரசி­கர்­களை எங்­கும் போக­வி­டா­மல், அசை­ய­வி­டா­மல் படம் பார்க்க வைக்­கும்," என்று சொல்­லும் ஐஸ்­வர்யா, இத்­த­கைய அனு­ப­வங்­கள் கிடைக்க வேண்­டும் எனில் திரை­ய­ரங்­கு­க­ளுக்கு செல்­வ­து­தான் ஒரே வழி என்­கி­றார்.

"சில சம­யங்­களில் வய­தான கதா­பாத்­தி­ரங்­களில் தோன்­று­வது ஏன் என்று சிலர் கேட்­கிறார்­கள். அப்­ப­டி­ப்­பட்ட வேடங்­கள் ஒரு நடி­கை­யாக என்னை மேலும் மெரு­கேற்­று­கின்­றன," என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

, :

  