'சினிமாதான் என் உயிர்'

'சினிமாதான் என் உயிர்'

3 mins read
53a0dd59-55fd-4bc4-92cd-3f598ff4d44f
-

'ரசி­கர்­கள் இல்­லை­யென்­றால் நான் இல்லை' என்­கிறார் விக்­ரம். இரு தினங்­க­ளுக்கு முன்பு திடீர் உடல்­நலக்குறைவால் மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்­பட்டு, சிகிச்­சைக்குப் பிறகு பழைய தெம்­பு­டன் வலம் வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், இவர் நடித்­துள்ள 'கோப்ரா' படத்­தின் இசை­ வெ­ளி­யீட்டு விழா சென்­னை­யில் சிறப்­பாக நடந்­தே­றி­யது. இதில் கலந்துகொண்டு பேசிய விக்­ரம், சினிமாதான் தமது உயிர் என்­றும் தமக்கு திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­தைத் தவிர வேறு எது­வும் தெரி­யாது என்றும் கூறினார்.

"இரு­பது வய­தில் பெரிய விபத்­தில் சிக்­கி­னேன். அப்­போது அறுவை சிகிச்சை மூலம் ஒரு காலை அகற்ற வேண்­டும் என்று கூறி­விட்­ட­னர். ஆனால் நான் அதற்கு ஒப்­புக்­கொள்­ள­வில்லை. மன உறு­தி­யு­டன் போரா­டி­ய­தன் கார­ண­மாக இன்று உங்­கள் முன்பு இரு கால்­களில் நிற்­கி­றேன்.

"எனக்கு உடல்­நிலை சரி­யில்லை என்­றதும் நெருக்­க­மா­ன­வர்­கள் பலர் பத­றிப்­போ­யி­னர். அத்­த­கை­ய­வர்­களின் அன்­பா­லும் அக்­க­றை­யா­லும் தற்போது நான் நல­மாக உள்­ளேன். அதை தெரி­விக்­கத்­தான் இந்த இசை வெளி­யீட்டு விழா­வில் கலந்து கொண்­டேன்," என்­றார் விக்­ரம்.

'கோப்ரா' படத்­தில் ஏழு வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட இவர், ஒவ்­வொரு பாத்­தி­ரத்­துக்­கும் வித்தி­யா­ச­மான பின்­ன­ணிக்குரல் கொடுத்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார். மேலும், பல ஆண்டு­களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகு­மா­னின் இசை­யில் நடித்­த­தை­யும் இவர் நினைவு­கூர்ந்­தார்.

"பல ஆண்­டு­க­ளுக்கு முன் 'சோழா டீ' என்ற தேநீர் விளம்­ப­ரத்­தில் நடித்­தேன். அதில் எனக்கு சோழ மன்­னன் கதா­பாத்­தி­ரம். அதற்கு திலீப் என்ற இளை­யர் இசை­ அ­மைத்­தார். அந்த இசை அனை­வ­ரை­யும் கவர்ந்­தது. அவர்­தான் இன்று நம் கண்­முன் ரகு­மா­னாக பல சாத­னை­க­ளைப் புரிந்து வளர்ந்து நிற்­கி­றார்.

"இன்று 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் ஆதித்த கரி­கா­லன் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தது கன­வு­போல் உள்­ளது. ஒரு வர­லாற்­றுக் கதையில் நடிப்­பதைப் பெரு­மை­யா­கக் கரு­து­கி­றேன்.

"நானும் சிறந்த நடி­க­ருக்­கான தேசிய விருதைப் பெற்­றி­ருக்­கி­றேன். சில தரு­ணங்­களில் ஆஸ்­கார் விருது பெற வேண்­டும் என்று நினைத்­தி­ருக்­கி­றேன். இதற்குக் காரணம் ஏ.ஆர்.ரகு­மான்.

"நாமும் சாதிக்க வேண்­டும் என்ற எண்­ணத்தை அவர் ஏற்­படுத்­து­கி­றார். நமக்­குள் ஒரு கனவு இருந்­தால்... ஒரு லட்­சி­யம் இருந்­தால்... அதற்­காக கடி­ன­மாக உழைத்­தால்... யாராக இருந்­தா­லும் மிகப் பெரிய உய­ரத்தை எட்ட முடி­யும். நீங்­கள் நினைத்துப் பார்க்­காத அள­விற்­கான எல்­லை­யைத் தொட முடி­யும். அதற்கு ரகு­மான் சிறந்த உதா­ர­ணம்.

"இந்த விழா­வின் நாய­க­னான அவர் இந்­திய நாட்­டின் பெருமை. வாழும் சகாப்­தம். அவ­ரு­டைய இசைக்கு அனை­வ­ரை­யும்போல் நானும் ஒரு ரசி­கன். அவர் 'கோப்ரா' படத்­தில் தன்­னு­டைய பங்­க­ளிப்பை வழங்­கி­ய­தற்­காக நன்றி," என்­றார் விக்ரம்.

படத்­தின் இயக்­கு­நர் அஜய் ஞான­முத்து மிகச் சிறந்த இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ராக உரு­வெ­டுப்­பார் என்று பாராட்­டிய விக்ரம், 'கோப்ரா' படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளி­யி­டு­வது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் கூறி­னார்.

"கார­ணம், அந்த நிறு­வ­னம் ஒரு படத்தை வெளி­யி­டு­கிறது என்­றால் வெற்றி உறுதி. அதற்­காக உத­ய­நிதி ஸ்டா­லி­னுக்கு நன்றி தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

"இந்­தப் படத்­தில் கிரிக்­கெட் வீரர் இர்­ஃபான் பதான் நடித்­துள்­ளார். அவர் கிரிக்­கெட் விளை­யாட்­டில் பந்தடிப்பு, பந்து வீச்சு என்று இரண்டி­லும் பெய­ரெ­டுத்­த­வர். கிரிக்­கெட் ஆட்­டத்­தைப்போல் இந்­தப் படத்­துக்­கா­க­வும் நிறைய சிக்­சர்­களை அடித்­துள்­ளார். மற்ற நட்­சத்­தி­ரங்­களும் பங்­க­ளித்­துள்­ள­னர்.

"இந்­தப் படத்­துக்­காக முதன்­முதலாக சிக்­க­லான கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளேன். எழு வித­மான தோற்­றங்­களில் மட்­டு­மல்­லா­மல், வசனம் பேசு­வ­தி­லும் வித்­தி­யா­சம் காட்ட வேண்­டும் என்­றார் இயக்­கு­நர். அதற்­காக மிக­வும் மெனக்­கெட்­டேன்.

"படத்­தில் இடம்­பெற்­றுள்ள ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரத்­தை­யும் மிக நுட்­ப­மாகச் செதுக்கி உள்­ளார் இயக்கு­நர் அஜய் ஞான­முத்து. அவ­ரது உழைப்­புக்­கா­கவே இந்­தப் படம் வெற்­றி­பெற வேண்­டும்," என்­றார் விக்­ரம்.