பட வெளியீட்டுக்காக காத்திருக்கும் உக்ரேன் நாயகி

பட வெளியீட்டுக்காக காத்திருக்கும் உக்ரேன் நாயகி

1 mins read
18241acb-d049-4cbd-bdb3-c528c0cdaa7d
'பிரின்ஸ்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. -

கடந்த நான்கு மாதங்­க­ளாக இந்தி­யா­வில் தங்கி உள்­ளார் மரியா ரயபோஷப்கா.

உக்­ரே­னைச் சேர்ந்த இவர்­ சிவகார்த்­தி­கே­யன் நாய­க­னாக நடிக்­கும் 'பிரின்ஸ்' படத்­தின் கதா­நா­யகி.

படப்­பி­டிப்­புக்­காக தமி­ழ­கம் வந்­த­வர், நான்கு மாதங்­கள் வேக­மாக கடந்து சென்­று­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"மிக அரு­மை­யான படக்­கு­ழு­வு­டன் இணைந்து பணி­யாற்­றி­யது மகிழ்ச்சி அளிக்­கிறது. அக்­டோ­பர் மாதம் இந்­தி­யா­வில் தீபா­வ­ளிப் பண்­டிகை கொண்­டா­டப்­படும் வேளை­யில், நான் நடித்­துள்ள படம் வெளி­யா­கும் என அறி­விக்­கப்­பட்டுள்­ளது. அந்த நாளுக்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றேன்," என்­கிறார் மரியா.

ஒரே சம­யத்­தில் தமிழ், தெலுங்கு என இரு மொழி­களில் வெளி­யா­கிறது 'பிரின்ஸ்' படம். காத­லும் நகைச்­சு­வை­யும் கலந்த கதைக்களம் சிவ­கார்த்­தி­கே­ய­னுக்­குப் பொருத்­த­மாக இருக்­கும் என்­கி­றார் படத்­தின் இயக்­கு­நர் அனு­தீப்.

தமன் இசை­ய­மைக்­கும் இந்­தப் படத்­தி­ல் சிவ­கார்த்­தி­கே­யன் ஒரு பாடலை எழு­தி­யுள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது. இப்படத்தில் சிவகார்த்தி கேயன் ஆசிரியராக நடிப்பதாகத் தகவல்.