'நிலைமை மாறிவிட்டது'

'நிலைமை மாறிவிட்டது'

1 mins read
e516664b-0532-462c-a866-84a8b8176d42
-

உடல்­ந­லம் சார்ந்த பிரச்­சி­னை­களில் இருந்து மீண்டு வரு­வ­தா­க­வும் மீண்டும் இந்­திப் படங்­களில் நடிக்க கதை­க­ளைக் கேட்டு வரு­வ­தா­க­வும் ஷ்ருதி ஹாசன் தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது பிர­பா­சு­டன் 'சலார்' படத்­தில் நடித்து வரும் இவர், நல்ல படைப்­பு­களில் நடிப்­பது மன­நிறைவைத் தரு­வ­தாக அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எனது தந்தை கமல்­ஹா­ச­னிடம் நிறைய கற்­றுக்­கொண்­டேன். இளைய­ராஜா, ஏ.ஆர்.ரகு­மான் இசை என்­றால் எனக்கு உயிர்.

"அவர்­கள் இசை­ய­மைப்­பா­ளர்­கள் மட்­டு­மின்றி மனி­தா­பி­மா­னம் நிறைந்த மிகச்­சிறந்த மனி­தர்­கள்," என்று ஷ்ருதி ஹாசன் தெரி­வித்­துள்­ளார்.

இசைத்­துறை மீதான ஆர்­வம் தமக்கு சிறி­தும் குறை­ய­வில்லை என்­றும் இப்­போது திரை­யு­ல­கில் பல மாற்­றங்­கள் நிகழ்ந்­துள்ளதாகவும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நடிக்க வந்த புதி­தில் எனக்­குப் பாட­வும் தெரி­யும் என்று சொன்­ன­தும் எல்­லோ­ரும் ஆச்­ச­ரி­ய­மா­கப் பார்த்­தார்­கள். எனி­னும் அப்­போது பல்­வேறு திறமை உள்­ள­வர்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்கப்படவில்லை.

"ஆனால் இப்­போது நிலைமை மாறி இருக்­கிறது. பன்­முகத் திறமை உள்­ள­வர்­கள் அதி­க­மாகிவிட்டார்கள். அனை­வ­ருக்­கும் வாய்ப்­பு­கள் கிடைக் கின்­றன. திறமை உள்­ள­வர்­கள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கி­றார்­கள்," என்கிறார் ஷ்ருதி.