திருமதி செல்வம்: வீட்டுக் கடனை எல்லாம் அடைப்பதற்காக உழைத்தேன்

திருமதி செல்வம்: வீட்டுக் கடனை எல்லாம் அடைப்பதற்காக உழைத்தேன்

2 mins read
f69c7efe-8e55-4de7-9514-83a8c9f5acfc
அபிதா (இடது), 'சேது' படத்தில் விக்ரம், அபிதா. -

'சேது' படம் பெரிய வெற்றியைப் பெற்றபோதும், அதன் நாயகி அபிதாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் வேறு வழியின்றி, தொலைக்காட்சி பக்கம் ஒதுங்க நேரிட்டது.

சஞ்சீவ், அபிதா இருவரும் 'திருமதி செல்வம்' தொலைக்காட்சித் தொடருக்கு கிடைத்த வரவேற்பு தமக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளித்ததாக சொல்லும் அபிதா, அந்த தொடர் தன் வாழ்க்கையை மாற்றி அமைத்ததாகவும் கூறுகிறார்.

"'சேது' படத்தில் நடிக்கும் முன்பு என்னை வீட்டில் ஜெனி என்றுதான் அழைப்பார்கள். ஆனால் 'சேது' படம் வெற்றி பெற்ற பிறகு தமிழ் ரசிகர்களைப் போலவே என் வீட்டாரும் அபிதா என்று அழைக்கத் தொடங்கினர்.

"அதன் பிறகு 'திருமதி செல்வம்' தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் ஏற்று நடித்த அர்ச்சனா கதாபாத்திரம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்ததால் செல்லும் இடங்களில் எல்லாம் அர்ச்சனா என்றே அழைக்கத் தொடங்கினர்.

உண்­மை­யைச் சொல்ல வேண்­டு­மா­னால், இந்­தத் தொட­ரில் நடிப்­ப­தற்கு என்னை ஒப்­பந்­தம் செய்ய இயக்­கு­நர் கும­ரன் தேடி வந்­த­போது அந்த வாய்ப்பை ஏற்­கும் மன­நி­லை­யில் நான் இல்லை. அவர் வீட்­டுக்கு வந்த சம­யத்­தில், தலைக்கு எண்­ணெய் வைத்து, ஜடை பின்னி, கிரா­மத்­துப் பெண் போல் காட்­சி­ய­ளித்­தேன்.

"கதையை விவ­ரித்த பிறகு கிளம்­பிய இயக்­கு­நர், மறு­நாள் படப்­பி­டிப்­புக்கு 'இதே தோற்­றத்­தில் வாருங்­கள்' என்­றார். கிட்­டத்­தட்ட ஆறு ஆண்­டு­க­ளாக ஒரு தொடரை நடித்த வகை­யில் நன்கு சம்­பா­தித்து வீட்­டுக் கடன்­களை எல்­லாம் தீர்த்­தேன்.

"'சேது' படத்­தில் நடித்­த­போது அறவே நட­ன­மா­டத் தெரி­யாது. அத­னால் படப்­பி­டிப்­பின்­போது இயக்­கு­நர் பாலா கடு­மை­யாக திட்­டி­விட்­டார். அத­னால் ஒரு நாள் முழு­வ­தும் அழு­து­கொண்டே இருந்­தேன். அப்­போது என் அக்கா, பார­தி­ராஜா போன்ற இயக்­கு­நர்­கள் சரி­யாக நடிக்­க­வில்லை என்­றால் அடித்­து­வி­டு­வார்­கள் என்­றும் வெறும் திட்­டுக்­காக அழு­வது தேவை­யற்­றது என்­றும் கூறி­னார்.

"மறு­நாள் பாலா சாரி­டம் மன்­னிப்பு கேட்­டேன். 'உங்­கள் நல்­ல­துக்­கா­கத்­தான் ஏசி­னேன்' என்­றார்.

"ஆனா­லும், படம் வெளி­யான பின்­னர் சிறப்பு காட்சி திரை­யிட்­ட­போ­தும் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போ­தும் அவர் என்னை அழைக்­க­வில்லை. அதற்­கான கார­ணம் இன்று வரை தெரி­ய­வில்லை.

"என்­னைப் புறக்­க­ணிக்­கும் அள­வுக்கு என்ன செய்­தேன் என்­பது குறித்து இது­வரை நானும் அவ­ரி­டம் கேட்­ட­தில்லை. அவ­ரும் இது பற்றி எந்தவிதமான விளக்­கமும் அளித்ததில்லை," என்று சொல்­லும் அபிதா, இப்­போது மாரி என்ற தொலைக்­காட்­சித் தொட­ரில் நடித்து வரு­கி­றார்.