'இதுதான் புலிப் பாய்ச்சல்'

'இதுதான் புலிப் பாய்ச்சல்'

3 mins read
1c44d9b1-c1fc-440a-9287-2cd73cafaeca
-

பிருத்­வி­ராஜ் சில தமிழ் படங்­களில் மட்­டுமே நடித்­தி­ருந்­தா­லும், தமிழ் ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல நடி­கர் என்ற பெய­ரைப் பெற்­ற­வர். மலை­யா­ளத்­தில் இருந்து தமி­ழுக்கு வந்து நடிப்­பில் முத்­திரை பதித்­துள்ள சில நடி­கர்­களில் அவ­ரும் ஒரு­வர்.

தற்­போது இயக்­கு­ந­ரா­க­வும் அவ­தா­ரம் எடுத்­துள்ள அவர் ஷாஜி கைலாஷ் இயக்­கத்­தில், 'கடுவா' என்ற படைப்பை அளித்­துள்­ளார். உணர்வு­பூர்­வ­மான, அடி­த­டி­கள் நிறைந்த காட்­சி­க­ளு­ட­னும் விறு­வி­றுப்­பான திரைக்­க­தை­யு­ட­னும் உரு­வாகி உள்­ளது இப்­ப­டம்.

மென்­மை­யா­கத் தோற்­ற­ம­ளிக்­கும் பிருத்­வி­ராஜா இப்­ப­டி­யொரு படத்­தில் நடித்­துள்­ளார் என மலை­யா­ளத் திரை­யு­ல­கி­னர் வியக்­கி­றார்­கள். 'கடுவா' என்­றால் புலி என்று அர்த்­த­மாம்.

"ரசி­கர்­கள் சிலர் நினைப்­ப­து­போல் நான் அவ்­வ­ளவு மென்­மை­யான ஆள் அல்ல. என் படங்­கள் இப்­ப­டித்­தான் இருக்­கும் என யாரும் முடிவு செய்­து­வி­டக்­கூ­டாது.

"இதை மன­திற்­கொண்­டு­தான் படத்தை இயக்க முடிவு செய்­தேன். 'ஜன­கனமன', 'ப்ரோ­டாடி', 'கடுவா', 'கோல்ட்' ஆகிய படங்­களில் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களை உரு­வாக்­கி­ய­து­தான் அவற்­றின் வெற்­றிக்­குக் கார­ணம்.

"இயக்­கு­நர், நடிகர் என்ற வகை­யில் தொடர் வெற்­றி­கள் மிகுந்த மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது. 'கடுவா' பட­மும் எனக்­குப் புத்­து­ணர்ச்சி தரும் படைப்­பாக அமைந்­தது. சமூ­கத்­திற்கு தேவை­யான நல்ல கதை­கள் மலை­யா­ளத்­தில் பட­மாக்­கப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய கால­கட்­டத்­தில் நானும் ஜன­ரஞ்­ச­க­மான ஒரு படைப்பை அளித்­துள்­ளேன். இதுதான் புலிப் பாய்ச்சல்," என்­கி­றார் பிருத்­வி­ராஜ்.

சரி.... 'கடுவா' படத்­தின் கதை என்ன?

"கடந்த 1990ல் கேர­ளா­வில் உள்ள கோட்­ட­யம் அருகே பாலா என்ற இடத்­தில் நடந்த உண்மைச் சம்­ப­வம்­தான் 'கடுவா' கதை. கதா­நா­ய­க­னின் மீசை, மலை­யா­ளி­க­ளுக்கே உரிய வேட்டி என எல்­லாமே 1990ல் நடந்­ததை கண்­முன் கொண்­டு­வ­ரும்.

"கடந்த 2009ஆம் ஆண்­டி­லேயே இந்­தப் படம் குறித்து இயக்­கு­நர் ஷாஜி கைலா­ஷி­டம் பேசி­ இ­ருந்­தேன். அப்­போது அவர் திரை­யு­லகை விட்டு சற்றே தள்ளி இருந்­தார்.

"முத­லில் கதை­யைப் படி­யுங்­கள், பிறகு படம் இயக்­கு­வது குறித்து பேச­லாம் என்­றேன். அவ­ரும் என் மீதுள்ள மரி­யாதை கார­ண­மாக கதை­யைப் படித்­துப் பார்த்­துள்­ளார். அதன் பின்­னர் படத்தை இயக்க சம்­ம­தித்­தார்.

"என்­னைப் பொறுத்­த­வரை ஷாஜி கைலா­ஷின் பல்­வேறு வெற்­றிப் படங்­களில் 'கடுவா' முதன்­மை­யா­னது என்­பேன்," என்று சொல்­லும் பிருத்வி­ராஜ், சொந்த நிறு­வ­னம் மூலம் சில படங்­களை தயா­ரிக்­க­வும் செய்­துள்­ளார்.

'டிரை­விங் லைசென்ஸ்' படம் வெற்­றி­பெற்­றதை அடுத்து, 'ஜன­க­ன­மன', 'கடுவா', 'கோல்ட்' என அவர் தயா­ரித்­துள்ள படங்­கள் வசூ­லில் அசத்தி வரு­கின்­றன. அடுத்து இந்­தி­யில் அக்‌ஷய் குமார் நடிக்­கும் படம் தயா­ரிப்­பில் உள்­ளது.

"தமி­ழில் முன்­னணி நடி­கர்­களை வைத்து படம் இயக்கி, தயா­ரிப்­பீர்­களா? என்று சிலர் கேட்­கி­றார்­கள். எனக்கு கோடம்­பாக்­கத்­தி­லும் பல நண்­பர்­கள் உள்­ளனர். நான் கதா­நா­ய­கர்­க­ளுக்­காக படம் எடுக்­கும் தயா­ரிப்­பா­ளரோ, இயக்­கு­நரோ அல்ல.

"ஒரு கதை எழு­திய பிறகே யாரை வைத்து வேலை­க­ளைத் தொடங்­க­லாம் என முடிவு செய்­வேன். கதைக்கு யார் பொருத்­தமோ அவ­ரி­டம் பேசு­வேன். அந்த நடி­க­ருக்கு கதை பிடித்­தி­ருந்­தால் அடுத்­த கட்­டத்­துக்­குச் செல்­வேன்.

"எல்­லாம் சரி­யாக அமைந்­தால் அஜித் தொடங்கி சிவ­கார்த்­தி­ கே­யன் வரை யார் வேண்­டு­மா­னா­லும் என் படங்­களில், இயக்­கத்­தில் நடிக்­கும் வாய்ப்­புண்டு. அவர்­களை நானே நேர­டி­யாக அணு­கிப் பேசு­வேன்," என்­கி­றார் பிருத்­வி­ராஜ்.

தமி­ழில் நடிக்­கக் கேட்டு சில வாய்ப்­பு­கள் தேடி­வந்­த­போ­தும், நல்ல கதை­கள் அமை­ய­வில்லை என்று சொல்­ப­வர், தமி­ழில் தற்­போது பிர­ம்மாண்ட, வெற்­றிப்­படங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது வியப்­ப­ளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"மலை­யா­ளத்­தில் இருந்து தமி­ழுக்கு வந்து நேரத்தை ஒதுக்கி, கதை பண்­ணும் அள­வுக்கு, ரசி­கர்­களை மகிழ்­விக்­கும் வித­மாக, கதை­கள் தேடி வரு­வ­தற்­காக காத்­தி­ருக்­கி­றேன்.

"தற்­போது பெரிய எழுத்­தா­ளர்­கள், படைப்­பா­ளி­கள்­கூட நடிக்­கத் தொடங்கி உள்­ள­னர். அண்­மைய மலை­யாளத் திரைப்­ப­டங்­கள் மற்ற மொழி­களைச் சேர்ந்­த­வர்­க­ளா­லும் அதி­கம் கவ­னிக்­கப்­படு­கிறது. மிக விரைவில் தமிழ் ரசிகர்களை வித்தியாச மான கதையோடு சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது," என்­கி­றார் பிருத்­வி­ராஜ்.

, :

  

பிருத்­வி­ராஜ்