'இரவின் நிழல்' படத்தில் தாம் நடித்திருப்பது குறித்து நடிகரும் செய்தியாளருமான பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக விமர்சித்துள்ளதாகப் புகார் எழுப்பி உள்ளார் நடிகை ரேகா நாயர்.
அது மட்டுமல்ல, சென்னை கடற்கரைப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பயில்வான் ரங்கநாதனுடன் அவர் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
இருவரும் காரசாரமாகப் பேசிக்கொள்ளும் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் குறித்து மோசமாக விமர்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், 'இரவின் நிழல்' படத்தில் ரேகா நாயரின் நடிப்பு குறித்தும் அவர் விமர்சித்துள்ளார். இதையடுத்து, ரங்கநாதனுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"என்னைப் பற்றி விமர்சிக்க நீங்கள் யார்? நடிகைகள் குறித்து விமர்சிக்க உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?" என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினார் ரேகா நாயர்.
இதுகுறித்து பின்னர் விளக்கம் அளித்த பயில்வான் ரங்கநாதன், எதுவாக இருந்தாலும் காவல் நிலையத்தில் பேசிக்கொள்ளலாம் என்று தாம் கூறியதாகவும் அதைக்கேட்டதும், ரேகா நாயர் உடனே கிளம்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் இருந்துகொண்டே அத்துறையைச் சார்ந்தவர்கள் குறித்து கேவலமாக விமர்சிக்கும் போக்கை ஏற்கமுடியாது என்கிறார் ரேகா நாயர்.
இந்நிலையில், அவரும் பொது வெளியில் தவறாகப் பேசியிருப்பதாக இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பயில்வான் ரங்கநாதனின் விமர்சனங்கள் குறித்து திரையுலகி னர் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

