'தன்னம்பிக்கை தரும் படிப்பு'

'தன்னம்பிக்கை தரும் படிப்பு'

3 mins read
27968e7c-1ea9-48ab-9c2a-7537b8ef8cd1
கிரித்தி ஷெட்டி -

சிறு வய­தில் இருந்தே தமக்கு நட­னத்­தின் மீது மிகுந்த ஆர்­வம் உண்டு என்­கி­றார் இளம் நாயகி கிரித்தி ஷெட்டி.

அதைப் புரிந்­து­கொண்டு பெற்­றோர் தம்மை நட­னப் பள்­ளி­யில் சேர்த்­த­தா­கச் சொல்­கி­றார்.

'தி வாரி­யர்' படத்­தில் இடம்­பெற்­றுள்ள புல்­லட், விசில் பாடல்­க­ளுக்கு ரசி­கர்­கள் மத்தி­யில் பலத்த வர­வேற்பு கிடைத்துள்ளது. தமிழ் சினி­மா­வில் சினே­கா­வுக்கு அடுத்து சிரிப்­பழகிப் பட்­டம் கிரித்தி ஷெட்­டிக்­குத்­தான் என்று சமூக ஊட­கங்­களில் ரசி­கர்­கள் பல­ரும் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

ஆனால் அவரோ, தம்­மை­விட சிறப்­பாக நட­ன­மா­டக்­கூ­டிய திரைக்­க­லை­ஞர்­கள் இருப்­ப­தாக தன்­ன­டக்­கத்­து­டன் சொல்­கி­றார்.

"பயிற்சி இருந்­தால் போதும், யார் வேண்டு­மா­னா­லும் என்­னைப்­போல் நட­ன­மாட முடி­யும். என் நட­னத்தை ரசி­கர்­கள் பல­ரும் பாராட்­டு­வது மகிழ்ச்சி அளிக்­கிறது. அதே­ச­ம­யம் இந்தப் பாராட்டு எனக்கு மட்­டுமே உரித்­தா­னது அல்ல. எனக்கு அந்த நடன அசை­வு­க­ளைக் கற்­றுக்­கொ­டுத்த நடன அமைப்­பா­ள­ருக்­கும் என்­னுடன் பாடல்­க­ளுக்கு நட­ன­மா­டிய கலை­ஞர்­க­ளுக்­கும் பாராட்­டு­களில் பங்­குண்டு," என்­கி­றார் கிரித்தி.

நட­னத்­தில் மட்­டு­மல்ல, இவர் சிறந்த பேட்­மிண்­டன் வீராங்­க­னை­யும்­கூட. பள்ளி நாள்­களில் பல்­வேறு போட்­டி­களில் கலந்துகொண்டு பரி­சு­கள் பெற்­றுள்­ளா­ராம். அதே­போல் படிப்பிலும் படு­சுட்­டி­யாம்.

"ஐந்­தாம் வகுப்பு முடிக்­கும் வரை மருத்து­வ­ராக வேண்­டும் என்­ப­து­தான் எனது ஆசை. அதற்­கேற்ப அறி­வி­யல் பாடத்­தில் அதிக மதிப்­பெண் பெற்­று­வி­டு­வேன். அப்­பா­வும் அம்­மா­வும் எனக்கு ஊக்­கம் அளித்­த­னர்.

"ஆனால் என்ன நடந்­ததோ தெரி­ய­வில்லை. ஆறாம் வகுப்புக்கு வந்­த­தும் மருத்­து­வர் ஆசையைக் கைவிட்­டேன். மாறாக, நட­னத்­தின் மீது ஆர்­வம் திரும்­பி­யது. பத்­தாம் வகுப்பு படிக்­கும்­போதே விளம்­ப­ரங்­களில் நடிக்­கும் வாய்ப்பு தேடி­வந்­தது. அதன் பிறகு மாட­லிங் துறையிலும் கால்­ப­தித்­தேன்.

"சினிமா வாய்ப்­பு கிடைக்­கும் என எதிர்­பார்க்­கவே இல்லை. இளம் வய­தி­லேயே சினிமா மூலம் இந்த அள­வுக்­குப் புகழ் கிடைக்­கும் என்­றும் நினைக்­க­வில்லை. விதி குறித்து வீட்டுப் பெரி­ய­வர்­களும் மற்­ற­வர்­களும் பேசும்­போ­தெல்­லாம் நம்­பிக்கை இல்­லா­மல் அவர்­க­ளைப் புறக்­கணிப்­பேன். ஆனால், இப்­போது விதியை நம்­ப­லாம் என்று தோன்­று­கிறது," என்று சொல்­லும் கிரித்தி ஷெட்டி, தற்­போது சைக்­கா­லஜி துறை­யில் பட்­டப்­ப­டிப்பு மேற்­கொண்டு வரு­கி­றார்.

மனோதத்­து­வம் படித்­தால் தன்­னம்­பிக்­கை அதி­க­ரிக்­கும் என்று நம்­பு­வ­தா­கச் சொல்­ப­வர், தனித்­தி­ற­மை­கள் மேலும் மேம்­படும் என்­கி­றார்.

"மனி­தர்­க­ளைப் புரிந்­து­கொள்­ள­வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் நான் சைக்­கா­லஜி படிப்­ப­தா­கச் சொல்­வது தவறு. இந்­தப் படிப்­பின் மூலம் ஒரு­வர் தனது தன்­னம்­பிக்­கையை வளர்த்­துக்­கொள்ள முடி­யும் என நம்­பு­கி­றேன். மருத்­துவ ரீதி­யாக மனோதத்­து­வம் படிப்­பது வேறு. என் நோக்­கம் அது­வல்ல. தன்­னம்­பிக்கை, சுய முன்­னேற்­றம், தனித்­தி­றன்­கள் மேம்­பாடு ஆகி­ய­வற்­றைக் கற்­றுத்­த­ரும் படிப்­பையே நான் நம்­பு­கி­றேன்," என்­கி­றார் கிரித்தி.

இவ­ருக்­குப் பிடித்த தமிழ் நடி­கர் கார்த்தி. இப்­போது விஜய் சேது­பதிக்­கும் ரசி­கை­யா­கி­விட்­டார். தெலுங்­கில் வெளி­யான 'உப்பண்ணா' படத்­தில் விஜய்­ சே­து­ப­திக்கு மக­ளாக நடித்­துள்­ளார் கிரித்தி.

"நான் கார்த்­தி­யின் தீவிர ரசிகை. 'பையா' படத்­தில் தொடங்கி அவ­ரது நடிப்பை வெகு­வாக ரசிப்­பேன். அதே­போல் இந்தி, தெலுங்கு, தமி­ழில் வெற்­றி­பெ­றும் படங்களை ஒன்­று­வி­டா­மல் பார்த்து­வி­டு­வேன். அப்­ப­டித்­தான் 'பீட்ஸா' படத்­தில் விஜய்­சே­து­ப­தி­யின் நடிப்பை முதன் முத­லில் பார்த்­தேன்.

"அதன் பிறகு, 'விக்­ரம் வேதா'வில் அவ­ரது நடிப்­பைப் பார்த்து மிரண்­டி­ருக்­கி­றேன். அவ­ருக்கே மக­ளாக நடிப்­பேன் என்று நினைக்­க­வில்லை. 'உப்­பண்ணா' படத்­தின் கிளை­மாக்ஸ் காட்­சி­யில் 15 பக்­கம் வசனம் உள்­ளது. அதை வேக­மா­கப் பேசி­ய­படியே அவ­ரது முகத்­தைப் பார்த்து நடிக்க வேண்­டும். பல­முறை முயன்­றும் சரி­யாக நடிக்க முடி­ய­வில்லை.

"இத­னால், பதற்­ற­மாக உணர்ந்­தேன். அப்­போது விஜய் ­சே­து­பதிதான் என்னை ஆசு­வா­சப்­ப­டுத்தி எப்­படி நடிக்க வேண்­டும் என்று சொல்லிக்­கொ­டுத்­தார். அதை மறக்­கவே முடி­யாது," என்று சொல்­லும் கிரித்தி, தற்­போது பாலா இயக்­கத்­தில் சூர்யா நடித்து வரும் 'வணங்­கான்' படத்­தில் நாய­கி­யாக நடிக்கி­றார்.