முன்னாள் கணவர் நாக சைதன்யா குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டதால் நடிகை சமந்தா கோபத்தில் வெடித்தார்.
மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அக்ஷய்குமாருடன் கலந்துகொண்டார் சமந்தா. அப்போது அங்கிருந்த ரசிகர்கள் தொடர்ந்து அவரது மணமுறிவு குறித்து மட்டுமே கேள்விகளைக் கேட்டனர்.
இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், "வேண்டுமானால் எங்கள் இருவரையும் ஒரே அறையில் அடைத்து வையுங்கள். ஆனால், அங்கு கூர்மையான பொருள்கள் எதுவும் இருக்கக்கூடாது. இந்தப் பதில் போதுமா?'' என்று கேட்டார்.
இதன் மூலம் நாக சைதன்யா மீதான தனது கோபத்தை அவர் காட்டத்துடன் வெளிப்படுத்தி இருப்பதாக மும்பை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.