'இளவரசியாக நடிக்க ஆசை'

'இளவரசியாக நடிக்க ஆசை'

3 mins read
dab0b68b-9cad-4965-aa37-cd21f9d4b61c
-

உல­கம் முழு­வ­தும் சுமார் 2,500 திரை­களில் வெளி­யா­கிறது 'தி லெஜண்ட்' திரைப்­ப­டம். தமிழ், தெலங்கு, கன்­ன­டம் எனப் பல மொழி­களில் படத்தை வெளி­யிட உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், பெங்­க­ளூ­ரில் இப்­ப­டத்தை அறி­மு­கப்­படுத்­தும் நிகழ்வு நடை­பெற்­றது. இதில் படத்­தின் நாயகி ஊர்வசி ரௌடேலா கலந்துகொண்­டார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், தென்­னிந்­திய மொழிப் படங்­களில் நடிப்­பதை பெரு­மை­யா­கக் கரு­து­வ­தா­க­வும் தரத்­தில் எந்­த­வித சம­ர­சத்­துக்­கும் இடம் அளிக்­காத வகை­யில் தென்­னிந்­திய கலை­ஞர்­கள் செயல்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

இந்­தி­யில் அறி­மு­க­மான இவர் பின்­னர் கன்­ன­டத்தில் உரு­வான 'ஐரா­வதா' படத்­தின் மூலம் தென்­னிந்­தி­யா­வில் அறி­மு­க­மா­னார்.

"அந்­தப் படம் எனக்கு நல்­ல­தொரு தொடக்கத்தை அளித்­தது என­லாம். தர்­­ஷன் நாய­க­னாக நடித்­தி­ருந்­தார். 'ஐரா­வதா' நல்ல அனு­ப­வத்­தை­யும் நினை­வு­க­ளை­யும் என் மன­தில் விட்­டுச் சென்­று்­ள­ளது.

"இந்­நி­லை­யில் மீண்­டும் பெங்­க­ளூரு வந்­தி­ருப்­பது உற்­சா­கம் அளிக்­கிறது. என்­னைப் பொறுத்­த­வரை 'தி லெஜண்ட்' பட­மும் நேரடி கன்­னடப் படம்­தான்," என்­கி­றார் ஊர்­வசி.

அதிக சம்­ப­ளம் கொடுத்­த­தன் கார­ண­மாக 'தி லெஜண்ட்' படத்­தில் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தாக கூறப்­ப­டு­வதை ஏற்க இய­லாது என்று குறிப்­பிட்ட அவர், முழுக் கதை­யை­யும் கேட்ட பிறகே நடிக்க முன்­வந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

"இந்­தப் படத்­தில் எனக்கு சண்­டைக் காட்சி­களும் உள்­ளன. மேலும் நட­னத்­துக்­கும் முக்­கி­யத்­து­வம் அளித்­துள்­ள­னர். அனைத்­தை­யும்­விட எனது நடிப்­பாற்­றலை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­பு­களும் அதி­கம்.

"இயக்­கு­நர்­கள் ஜெடி, ஜெர்ரி இரு­வ­ருமே எதை­யும் தெளி­வா­கத் திட்­ட­மிட்­டுச் செய்­யக்­கூ­டி­ய­வர்­கள். தரம் என்று வந்­து­விட்­டால் எந்­த­வித சம­ர­சத்­துக்­கும் உட்­ப­ட­மாட்­டார்­கள்.

"தென்­னிந்­திய கலை­ஞர்­கள் கடு­மை­யாக உழைக்­கி­றார்­கள். நடி­கர்­கள் தங்­க­ளுக்­கான கதா­பாத்­தி­ர­மா­கவே மாறி­விடு­கி­றார்­கள். என்­னைக் கவர்ந்த விஷ­யங்­களில் இது மிக­வும் முக்­கி­ய­மா­னது.

"இவ்­வாறு கடி­ன­மாக உழைக்­கும் கலை­ஞர்­க­ளைப் பார்க்கும்­போது நமக்­கும் ஒரு­வித ஊக்கமும் தன்னம்பிக்கையும் ஏற்­படும். கடு­மை­யா­க­வும் உண்­மை­யா­க­வும் உழைத்­தால் வெற்றி பெற­லாம் என்­ப­தற்கு ஒட்­டு­மொத்த தென்­னிந்­தி­யத் திரை­யு­ல­க­மும் சிறந்த உதா­ரணம்," என்­கி­றார் ஊர்­வசி.

தனக்­கென சில கன­வுக் கதா­பாத்­தி­ரங்­கள் இருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், எந்த மொழி­யில் அந்­தக் கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தா­லும் நடிக்­கத் தயார் என்­கி­றார்.

"இள­வ­ர­சி­யாக நடிக்க வேண்­டும் என்­பது எனது நீண்ட நாள் ஆசை. மேலும், படை வீராங்­க­னை­யா­க­வும் நடிக்க விரும்­பு­கி­றேன்.

"வாழ்க்­கை­யில் பெரி­தா­கச் சாதித்த பெண்­க­ளின் வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­தில் இடம்­பெற வேண்­டும் என்­ப­தும் எனது விருப்­பம். இறு­தி­யாக, மிகச்­சி­றந்த காதல் படைப்­பில் நடிக்க வேண்­டும் என்­றும் ஆசைப்­ப­டு­கி­றேன்.

"தமி­ழில் உள்ள அனைத்து முன்­னணி நடி­கர்­க­ளு­ட­னும் இணைந்து நடிக்க விரும்­பு­கி­றேன். அதே­போல் கன்­ன­டத்­தில் யாஷ், உபேந்­தி­ரா­வு­டன் நடிக்­கும் ஆசை­யும் உண்டு," என்­கி­றார் ஊர்­வசி ரௌடாலா.

இந்தியில் தாம் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் மிக விரைவில் அங்கும் சவாலான கதாபாத்திரங்கள் அமையும் என நம்புகிறாராம்.

முன்பெல்லாம் இந்தியில் சம்பளம் அதிகம், படப்பிடிப்பு மெதுவாக நடைபெறும் என்பார்கள். இப்போது இந்திக்கு நிகராக தென்னிந்திய படங்களிலும் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. அதனால்தான் இந்தி நடிகைகள் பலரும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் தென்னிந்திய படங்களின் இந்தி மறுபதிப்பில் நடிக்கவும் விரும்புகிறார்கள்," என்கிறார் ஊர்வசி.