'எம்ஒய்3' என்ற இணையத்தொடரில் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா. அண்மையில் அவரது நடிப்பில் வெளியான 'மகா' படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்ததற்காக சிம்புவுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தார் ஹன்சிகா.
"என்னுடன் நடிக்கக் கேட்டு நானே தொலைபேசியில் சிம்புவை தொடர்பு கொண்டேன். உடனே கால்ஷிட் ஒதுக்கிவிட்டார். அவர் நடித்தது எங்களுக்குக் கூடுதல் பலம் சேர்த்தது. நாற்பது நிமிடங்கள் திரையில் தோன்றுவதுபோன்று சிம்புவுக்கான காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதற்கு எத்தனை நாள்கள் கால்ஷீட் ஒதுக்கித்தர வேண்டும் என்பது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் எங்களது நிலையை உணர்ந்து உதவிக்கரம் நீட்டினார்," என்று ஹன்சிகா கூறியுள்ளார்.

