'மகளை மீட்டெடுக்கும் தந்தையின் போராட்டம்'

'மகளை மீட்டெடுக்கும் தந்தையின் போராட்டம்'

2 mins read
63a02960-59b9-45cf-925b-41f2bbad6691
'பொம்மை நாயகி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

"பாலி­யல் வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளின் மன­நி­லை­யும் சமூ­கத்­தின் மன­நி­லை­யும் எப்­படி இருக்­கும் சட்­டம் எவ்­வ­ளவு தூரம் உறு­து­ணை­யாக உள்­ளது என்­ப­து­தான் 'பொம்மை நாயகி' படத்­தின் கதைக்­கரு," என்­கி­றார் இயக்­கு­நர் ஷான்.

இவ­ரது தந்தை சமூக உணர்­வுள்ள களப்­ப­ணி­யா­ள­ராக இருந்­த­வர். ஷானும் அவ­ரு­டன் பணி­யாற்றி உள்­ளார்.

"குழந்­தை­கள் மீதான பாலி­யல் வன்­மு­றை­க­ளுக்கு எதிராக அக்­க­றை­யோடு வேலை செய்­த­வர் என் தந்தை. வலி­யும் வேத­னை­யு­மான நினை­வு­க­ளாக அந்த அனு­ப­வங்­கள் அப்­ப­டியே மன­தில் தேங்கி நிற்­கின்­றன. அத­னா­ல­தான் அப்­படி பாதிக்­கப்­பட்ட சிறு பெண்­ணின் கதை­யைத் தேர்ந்­தெ­டுத்­தேன்," என்­கி­றார் ஷான்.

பார்­வை­யா­ள­னின் கவ­னத்தை முழு­வ­து­மாக தனக்­குள் கிர­கித்­துக்­கொள்ள வேண்­டும் என்­ப­து­தான் திரைக்­க­லை­யின் முதல் விதி என்று சுட்­டிக்­காட்­டும் இந்த அனு­பவ இயக்­கு­நர், தாமும் அதைப் பின்­பற்றி உள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"குழந்­தை­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் வன்­முறை குறித்து நிறைய கேள்­விப்­ப­டு­கி­றோம். ஆனால் சிலர் இதில் குழந்­தை­க­ளின் தவ­றும் இருக்­கிறது எனச் சொல்­லி­வி­டு­கி­றார்­கள். வன்­மு­றைக்­குப் பிறகு அதோடு குழந்­தை­யின் வாழ்க்கை முடிந்­து­வி­டு­வ­தில்லை. அவர்­க­ளின் மீதான வன்­மு­றைக்கு தண்­டனை தரும் சட்­டங்­கள் இருக்­கின்­றன. ஆனால் அதை சரி­யா­கப் பயன்­படுத்­து­வது தவறு செய்­த­வர்­கள் தான்.

"குழந்­தை­க­ளின் மன­நிலையைத் தாண்டி, இதில் பெற்­றோர் மன­நிலை­யும் பார்க்­கப்­ப­டு­கிறது. குழந்­தை­கள்­மீ­தான வன்­மு­றையை எப்­படி வேண்­டு­மா­னா­லும் காட்­ட­லாம். நான் சொல்ல வந்­தது அதற்­கான சட்­டங்­கள், சமூ­கத்­தின் பார்வை ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யில், குழந்­தையை ஒரு சாமா­னி­யன் எப்­படி மீட்­டெ­டுத்­தான் என்பதே கதைக்­களம்.

"அப்­பா­வி­க­ளான அவர்­கள் ஏன் பாதிக்­கப்­பட வேண்­டும்? இது­வும் கதை­யின் அடிப்­படை. அது­வும்­போக, இது அப்­பா­வுக்­கும் பெண்­ணுக்­கு­மான ஒரு பய­ணம். தண்­டனை என்­பது அந்­தக் காலத்­தில் காலம்­க­டந்து கிடைக்­கும் என்­பார்­கள். இப்­போ­தெல்­லாம் கைமேல் பலன். ஒரு நல்ல தகப்­ப­னின் பரி­த­விப்­பும் மேன்­மை­யும் இதில் இருக்­கிறது," என்று உணர்­வு­பூர்­வ­மா­கப் பேசு­கி­றார் ஷான்.

இதில் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­யின் தந்­தை­யாக நடித்­தி­ருப்­ப­வர் யோகி­பாபு.'மண்­டேலா' படம் வெளி­யா­கும் முன்பே, அவர் மீது நம்­பிக்கை வைத்து நாய­க­னாக ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

"பல­ரி­டம் இந்­தக் த­தை­யைச் சொல்லி இருக்­கி­றேன். அப்­போ­தெல்­லாம் யோகி­யின் நினைவு வர­வில்லை. எழு­தும்­போ­து­கூட மன­தில் யோகி இல்லை. அவ­ரின் புகைப்­ப­டம் ஒன்­றைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தேன். அந்த முகத்­தில் நகைச்­சுவை தவிர பல பரி­மா­ணங்­கள் இருப்­ப­தா­கத் தோன்­றி­யது. யோகி­யு­டன் பேசி­னேன்.

"நிச்­ச­யம் அர்ப்­ப­ணிப்­பான நடிப்பு. இப்­ப­டி­யொரு யோகி­பா­புவை நீங்­கள் பார்த்­தி­ருக்க மாட்­டீர்­கள். நீங்­கள் அதை உண­ர­மு­டி­யும்.

"பெண்­ணுக்­குத் தன் காலடி நிழல்­கூட சொந்­த­மில்­லா­த­போது ஆண் குழந்­தைக்கு பெரிய திட­லையே அளிக்­கி­றார்­கள். பெண் மீதான வன்­மு­றை­யும் அதன் பின்­னான வாழ்க்­கை­யும் இதில் அல­சப்­ப­டு­கிறது," என்­கி­றார் ஷான்.