தங்கர் பச்சான் இயக்கத்தில் நடிக்கிறார் மம்தா

1 mins read
7ae1a39e-de77-4b32-954c-9d0bc04aa8c0
நடிகை மம்தா மோகன்தாஸ். -

தங்­கர் பச்­சான் இயக்­கும் படத்­திற்கு 'கரு­மே­கங்­கள் கலை­கின்­றன' என பெய­ரிட்­டுள்­ள­னர். இதில் முதன்மை வேடத்­தில் யோகி பாபு, மம்தா மோகன்­தாஸ் நடிக்­கின்­ற­னர்.

இவர்­க­ளு­டன் பார­தி­ராஜா, கவு­தம் மேனன் ஆகி­யோ­ரும் நடிக்­கி­றார்­கள். இதன் படப்­பி­டிப்பு கும்­ப­கோ­ணத்­தில் தொடங்கி நடை­பெற்று வரு­கிறது. சென்னை, ராமே­சு­வ­ரம் பகு­தி­க­ளி­லும்்் தொடர்ந்து படப்­பி­டிப்பு நடக்­க­ இருக்­கிறது. இந்­தப்­ப­ட­மும் தங்­கர் பச்­சா­னின் சிறு­க­தை­யைத் தழுவி உரு­வாக்­கப்­ப­டு­கிறது.

சிறி­தும் சம­ர­சம் செய்துகொள்­ளாத தனது பாணி­யி­லான வெகு இயல்­பான வாழ்­வி­ய­லைச் சொல்­லும் படைப்­பாக இந்­தப் படம் இருக்­கும் என்­கி­றார் தங்­கர்­பச்­சான்.

கண்­மணி எனும் கதைப் பாத்­தி­ரத்­திற்­காக இந்­தி­யா­வி­லுள்ள பல நடி­கை­க­ளி­டம் நடிப்­புத் தேர்வு நடத்­திய பின் மம்தா மோகன்­தாஸ் தேர்­வாகி இருக்­கி­றார். கதை நாயகி­யாக தாம் நடிப்­ப­தைப் பெரு­மை­யாக கரு­து­வ­தாக மம்தா மோகன்­தாஸ் கூறு­கி­றார்.