தாம் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்ற புகார் தொடர்பாக ரசிகர்கள் எழுப்பியுள்ள கேள்விக்குப் பதிலளித்துள்ள ராஷ்மிகா, அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
இனி அவ்வாறு நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். இதன் காரணமாகவே தம்மால் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை என்கிறார்.
"இப்போது தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருவதால் இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என சென்னையில் நடக்கும் எனது படங்களின் நிகழ்ச்சிகளில் என்னைத் தொடர்ந்து பார்க்கப் போகிறீர்கள். நான் சொல்வதை நம்புங்கள்," என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.

