'ரசிக்க வைப்பார் சந்தானம்'

'ரசிக்க வைப்பார் சந்தானம்'

3 mins read
30078ceb-9fed-43c4-ae95-e90c8d10f900
-

'குளு­குளு' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பில் உரு­வா­கிறது சந்­தா­னம் நாய­க­னாக நடிக்­கும் புதுப்­ப­டம். லோகேஷ் கன­க­ரா­ஜு­டன் இணைந்து பணி­யாற்­றிய ரத்­ன­கு­மார் இயக்­கும் படம் இது.

'மேயாத மான்', 'ஆடை' படங்­களில் கவ­னம் ஈர்த்­த­வர். 'விக்­ரம்', 'மாஸ்­டர்' படங்­களில் லோகே­ஷு­டன் இணைந்து அவற்­றுக்­கான வச­னங்­களை எழு­தி­ய­வர்.

இது வழக்­க­மான சந்­தா­னம் பட­மாக இருக்­காது. எனி­னும் அவ­ரது ரசி­கர்­க­ளுக்­குப் பிடித்­த­மான பட­மாக இருக்­கும் என்­கி­றார் ரத்­ன­கு­மார்.

"எளி­தான முறை­யில் சொல்­வ­தாக இருந்­தால் சந்­தா­னம் இது­வரை என்ன செய்துகொண்­டி­ருக்­கி­றாரோ, அதை இந்­தப் படத்­தில் அறவே தவிர்த்­துள்­ளார். அது­தான் இந்­தப் படத்தை அவர் தேர்வு செய்­யக் கார­ணம்.

"அதிக பேச்சு, வழக்­க­மான அதி­ரடி வச­னங்­கள், எதி­ரா­ளி­யின் பேச்­சுக்­குப் பதி­லடி என எது­வுமே இருக்­காது. "ஒரு­வ­கை­யில் இது எதிர்­மறை நகைச்­சு­வைப் படம் என­லாம். எனி­னும் பாமர ரசி­க­னும் ரசிக்­கும்­ப­டியாக இருக்­கும்," என்­கி­றார் ரத்­ன­கு­மார்.

அது என்ன 'குளு­குளு'?

"குளு­குளு என்­பது குளிர்ச்­சியை சுட்­டிக்­காட்­டும். குலுங்­கிக் குலுங்­கிச் சிரிக்­கும் படமா என்­றும் கேட்­கா­தீர்­கள். என்­னு­டைய நாய­கன் பய­ணத்­தில் ஆர்­வம் உள்­ள­வர். பல மாநி­லங்­கள், பல மொழி­கள் பேசு­ப­வர்­க­ளி­டம் பேசிப்­பழகு­ப­வர். சக மனி­தர்­க­ளைக் கடந்து எல்லா உயி­ரி­னத்­தி­ட­மும் அன்பு காட்­டு­ப­வர். இதை மற்­ற­வர்­களும் பின்­பற்றவேண்­டும் என வலி­யு­றுத்­து­வார். பின்­வி­ளை­வு­க­ளைப் பற்றி யோசிக்­கா­மல் உதவி செய்­யக்­கூ­டிய நல்ல மன­சுக்­காரர்.

"இத­னால் என் நாய­கன் சந்­திக்­கும் மனி­தர்­கள், உதவி செய்­வ­தில் ஏற்­படும் பிரச்­சி­னை­கள், அதன் பின்­வி­ளை­வு­கள் என எல்­லாம் ஒன்­றோடு ஒன்று பின்­னப்­பட்­டி­ருக்­கும்," என்­கி­றார் ரத்­ன­கு­மார்.

சந்­தா­னத்­தி­டம் இரு­பது நிமி­டங்­கள் போல் கதையை விவ­ரித்­தா­ராம். உடனே அதில் நடிக்க சம்­ம­தித்­துள்­ளார்.

"அவரே தயா­ரிப்­பா­ள­ரி­டம் நேர­டி­யாக சம்­ம­தம் தெரி­வித்­த­தும் மள­ம­ள­வென்று வச­னங்­கள் உட்­பட அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் செய்து முடித்­தேன். உடனே பாராட்டு தெரி­வித்­தார்.

"கதைப்­படி கூகல் என்­ப­து­தான் அவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர். அவ­ரைச் சுற்றி எப்­போ­தும் நான்­கைந்து பேர் இருப்­பார்­கள். எதைப் பற்றி கேட்­டா­லும் பதில் சொல்­வார். பல மொழி­கள் தெரி­யும். அவ­ரு­டைய தாயார் ஆங்­கி­லம் மட்­டும் தப்­பும் தவ­று­மா­கச் சொல்­லிக் கொடுத்­தி­ருப்­பார். இது தொடர்­பான வச­னங்­கள் பிர­மா­த­மாக அமைந்­துள்­ளன.

"சந்­தா­னம் சார் இல்­லாமல் பத்து முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரங்­கள் உள்­ளன. எல்­லா­ருக்­கும் ஒரு கதை இருக்­கும். அவர்­க­ளுக்கு ஒரு நோக்­கம் இருக்­கும். அவர்­கள் எல்­லா­ரு­டைய வாழ்க்­கை­யை­யும் சந்­தா­னம் கடந்து போயி­ருப்­பார்.

"ஒரு கதா­நா­ய­க­னாக சந்­தா­னத்­தைக் கையாள்­வ­தில் எந்­த­வி­த­மான சிர­ம­மும் இருப்­ப­தாக நான் உண­ர­வில்லை. முன்பே திட்­ட­மிட்­ட­படி செயல்­பட்­ட­தால் குழப்­பம் இல்­லா­மல் வேலை பார்க்க முடிந்­தது.

"தாம் நடிக்­காத காட்­சி­க­ளி­லும் மிகுந்த அக்­கறை காட்­டு­கி­றார். நேரம் இருந்­தால் அந்­தக் காட்­சி­கள் பட­மாக்­கப்­ப­டு­வதை பார்ப்­பார்.

"ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரத்­தை­யும் மெரு­கேற்­று­வது தொடர்­பாக தனது ஆலோ­ச­னை­க­ளைப் பகிர்ந்து கொள்­வ­தும் அவ­ரது வழக்­கம்.

"கதா­நா­யகி அதுல்யா சந்­திரா மலை­யா­ளத்­தில் இருந்து தமி­ழுக்கு வந்­துள்­ளார். தெலுங்­கில் இரண்டு படங்­கள் முடித்த அனு­ப­வ­மும் உண்டு. 'மெட்­டில்டா' என்ற வெளி­நாட்­டில் இருந்து தமி­ழ­கம் வரும் பெண்­ணின் கதா­பாத்­தி­ரத்­து­டன் நன்­றா­கப் பொருந்தி உள்­ளார்.

இன்­னொரு நாய­கி­யாக நமீதா கிரு­ஷ­ண­மூர்த்தி நடித்­துள்­ளார். இது­தான் அவ­ருக்கு முதல் படம். இரு­வ­ரது கதா­பாத்­தி­ரங்­களும் நிச்­ச­யம் ரசி­கர்­க­ளின் மன­தில் பதி­யும். மொத்தத்தில் இம்முறை சந்தானம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு படத்தைத் தரப்போகிறார்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ரத்னகுமார்.

, :   

சந்தானம்