இயக்குநர் மிஷ்கின்: உணர்வுள்ள திரைக்கதை மிக முக்கியம்

இயக்குநர் மிஷ்கின்: உணர்வுள்ள திரைக்கதை மிக முக்கியம்

2 mins read
69aeae12-0142-455a-901d-a3e7f2ec2d43
'குருதி ஆட்டம்' படத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் -

திரைக்­க­தை­யில் உணர்வு இல்­லை­யென்­றால் படம் ரசி­கர்­க­ளு­டன் இணைந்து பய­ணிக்­காது என்­கி­றார் இயக்­கு­நர் மிஷ்­கின்.

'குருதி ஆட்­டம்' ­ப­டத்­தின் செய்­தி­யா­ளர் சந்­திப்பு சென்­னை­யில் நடை­பெற்­றது. அதில் பேசி­ய­போதே மிஷ்­கின் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

இயக்­கு­நர் ஸ்ரீ கணேஷ் இயக்­கத்­தில் அதர்வா நடித்­துள்ள படம் 'குருதி ஆட்­டம்'. நாய­கி­யாக ஜோடி­யாக பிரியா பவானி சங்­கர் நடிக்க, யுவன் சங்­கர் ராஜா இசை­ய­மைத்­துள்­ளார்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதமே இப்­ப­டம் திரை­கா­ணும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், சில கார­ணங்­க­ளால் அது சாத்­தி­ய­மா­க­வில்லை. இதை­ய­டுத்து அடுத்த வாரம் வெளி­யிட உள்­ள­னர்.

"எனது உத­வி­யா­ள­ராக இருந்த ஸ்ரீ கணேஷ் அறத்­து­டன் வாழும் நல்ல மனி­தர். அவ­ரு­டைய முதல் படம் மிகச்­சி­றப்­பான படைப்­பாக அமைந்­துள்­ளது.

"படத்­தின் திரைக்­க­தை­யில் எப்­பொ­ழு­தும் ஓர் உணர்வு இருக்க வேண்­டும். அப்­படி இல்­லை­யென்­றால் படம் ரசி­கர்­க­ளு­டன் இணைந்து பய­ணிக்­காது. ஸ்ரீ கணேஷ் உணர்­வு­பூர்­வ­மான நல்ல மனிதரும்­கூட. அவ­ரு­டைய அந்த நல்ல எண்­ணங்­கள்தான் இந்த திரைக்­க­தையை அமைக்க உத­வி­யுள்­ளது. எனது உத­வி­யா­ளர்­கள் எப்­பொ­ழு­தும் சிறந்த படம்­தான் எடுப்­பார்­கள். "இந்­தப் படத்­தில் அதர்வா பல பரி­ணா­மங்­களை காட்­டி­யுள்­ளார். பல தொழில்­நுட்ப கலை­ஞர்­கள் இதில் அறி­மு­க­மா­கி­றார்­கள். அனை­வ­ரும் இந்­தப் படத்தை வெற்றி பெற வைக்க வேண்­டும்," என்­றார் மிஷ்­கின்.

அடுத்து பேசிய அதர்வா, படத்­தின் தயா­ரிப்­பா­ளர் முரு­கா­னந்­தத்­தின் ஒத்­து­ழைப்­பால்­தான் படம் மிக அழ­காக உரு­வா­கி­யுள்­ளது என்­றார்.

"இந்­தப் படத்­தில் பல இளம் நடி­கர்­கள் முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ள­னர். ஸ்ரீ கணேஷ் இந்த கதை­யைச் சொல்­லும் போது, அனைத்து கதா­பாத்­தி­ரங்­களும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தாக இருந்­தன.

"அந்­தக் கதையை மிக நேர்த்­தி­யான திரைப்­ப­ட­மாக மாற்­றி­யுள்­ளார். ஒவ்­வொரு சிறு விஷ­யத்­தி­லும் மிகுந்த கவ­னம் செலுத்தி, கடு­மை­யாக உழைத்­துள்­ளார். மேலும், இசை­ய­மைப்­பா­ளர் யுவன் சங்­கர் ராஜா­வின் இசை பெரும் பலம் சேர்த்­துள்­ளது. இசை­யும் நல்ல இயக்­கம் ஆகிய அனைத்து அம்­சங்­களும் வெற்­றி­யைத் தேடித் தரும்," என்­றார் அதர்வா.