தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அப்பா செல்லம் அதுல்யா

3 mins read

அண்­மை­யில் வெளி­யான 'வட்­டம்' திரைப்­ப­டம் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளின் பார்­வை­யைத் தன் பக்­கம் திருப்பி உள்­ளார் அதுல்யா ரவி.

பெரிய வெற்­றிப் படத்தை கொடுக்­கா­விட்­டா­லும்­கூட தமக்­கான வாய்ப்­பு­கள் தொடர்ந்து தேடி வரு­வது உற்­சா­க­மும் நம்­பிக்­கை­யும் அளிக்­கிறது என்­கி­றார் இந்த இளம் நாயகி.

தமது முகப்­பொ­லி­வைக் கூட்­டு­வ­தற்­காக இவர் 'பிளாஸ்­டிக்' அறுவை சிகிச்சை செய்துகொண்­ட­தாக வெளி­யான தக­வல் முற்­றி­லும் பொய் என்று குறிப்­பி­டு­ப­வர், இயற்­கை­யான அழகு இருக்­கும்­போது தாம் செயற்­கையை நாட வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­கி­றார்.

"என் பெற்­றோர் அழ­கான பெண்­ணா­கவே என்­னைப் பெற்­றெ­டுத்து, வளர்த்­துள்­ள­னர். எனவே அறுவை சிகிச்சை மூலம் நான் அழ­காக மாறத் தேவை­யில்லை. மேலும், அது­போன்ற செயற்கை அழ­குக்­காக நான் சிகிச்சை பெறு­வதை என் தந்தை அனு­ம­திக்க மாட்­டார்.

"வீட்­டில் நான் அப்பா செல்­லம். அப்­பா­வுக்கு என் மீது அள­வுக்கு அதி­க­மான பாசம் என்­ப­தால் என் உட­லில் சின்­ன­தாக ஒரு கீறல் ஏற்­பட்­டா­லும்­கூட துடித்­துப் போய்­வி­டு­வார்," என்­கி­றார் அதுல்யா.

அண்­மை­யில் எடுக்­கப்­பட்­டுள்ள சில புகைப்­ப­டங்­களில் அதுல்­யா­வின் முகம், குறிப்­பாக அவ­ரது மூக்கு முன்­னை­விட அழ­காக இருப்­ப­தாக சமூக ஊட­கங்­களில் பலர் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இதன் கார­ண­மாவே அவர் தமது அழகை மெரு­கேற்­றும் வகை­யில், சிகிச்சை பெறு­வதாக தக­வல் பரவி உள்ளது.

"இதில் ரக­சி­யம் ஏதும் இல்லை. காய்ச்­சாத பாலில் பஞ்சை நனைத்து காலை 6 மணிக்கு அதை முகத்­தில் தட­விக்­கொள்­வேன். அரை­மணி நேரம் கழித்து, சுடு­நீ­ரில் முகத்­தைக் கழுவ வேண்­டும். அதன் பிறகு உடற்­ப­யிற்சி, யோகா செய்­வேன்.

"மேலும், உண­வில் வறுத்த, பொறித்த உண­வு­க­ளைத் தவிர்த்­து­வி­டு­கி­றேன். இவ்­வ­ள­வு­தான் எனது அழ­கின் ரக­சி­யம்," என்று சொல்­லும் அதுல்யா, நடி­கர் விஜய்­யின் தீவிர ரசிகை.

ஆனால் இவ­ரது தந்தை அஜித்­தின் ரசி­க­ராம். இரு­வ­ரது புதுப்­ப­டங்­கள் வெளி­யா­கும்­போது தந்­தை­யும் மக­ளு­மாக திரை­ய­ரங்­கம் சென்று, அந்­தப் படங்­க­ளைப் பார்த்­து­வி­டு­வார்­க­ளாம்.

"விஜய், அஜித் இரு­வ­ரது படங்­க­ளை­யும் ரசித்­துப் பார்ப்­போம். ஆனால் வீட்­டுக்­குள் யார் நல்ல நடி­கர், யாருக்கு செல்­வாக்கு அதி­கம் என்­கிற அர­சி­யல் எல்­லாம் இருக்­காது. தவிர, எனக்­கும் அப்­பா­வுக்­கும் சண்டை ஏற்­பட வாய்ப்பே இல்லை. என்னை அவர் தேவ­தை­யா­கத்­தான் பார்க்­கி­றார். எனக்­காக எதை வேண்­டு­மா­னா­லும் விட்­டுக்­கொ­டுப்­பார்.

"விஜய்­யு­டன் இணைந்து நடிப்­பீர்­களா என்று ரசி­கர்­கள் பலர் தொடர்ந்து கேட்­கி­றார்­கள். அது எப்­போது நடக்­கும் என்­பது எனக்­குத் தெரி­ய­வில்லை. ஆனால் நிச்­ச­யம் ஒரு­நாள் விஜய்­யு­டன் திரை­யைப் பகிர்ந்­து­கொள்­வேன் என்ற நம்­பிக்கை உள்­ளது.

"காதல் கண் கட்­டுதே' படத்­தில் நடித்­த­போது அது முழு நீள திரைப்­ப­டம் என்­ப­தைக்­கூட புரிந்­து­கொள்­ளா­மல், விவ­ரம் அறி­யா­மல்­தான் நடித்­தேன். இப்­போது எது நல்ல கதை, நல்ல படம் என்­பதை ஓர­ளவு அனு­மா­னிக்க முடி­கிறது.

"இந்த அள­வுக்கு முன்­னேறி இருப்­பதே பெரிய விஷ­யம். எனவே காலம் நமக்­கான எதிர்­கா­லத்­தில் என்ன வைத்­தி­ருக்­கிறது என்­பது யாருக்­குத் தெரி­யும்?" என்று கேள்வி எழுப்­பு­கி­றார் அதுல்யா.

'நாடோ­டி­கள்-2', 'என் பெயர் ஆனந்­தன்', 'முருங்­கைக்­காய் சிப்ஸ்' உள்­ளிட்ட படங்களின் மூலம் கோடம்­பாக்­கத்­தில் தனது பயணத்தை மீண்­டும் திட்­ட­மிட்ட பாதை­யில் மேற்­கொண்டு வரும் அதுல்­யா­வுக்கு, நடிகை ஆண்ட்­ரி­யாவை மிக­வும் பிடிக்­கு­மாம். ஆண்ட்ரி­யா­வின் குர­லுக்­கும் நடிப்­புக்­கும் தாம் பெரிய ரசிகை என்­கி­றார்.

"இதை அவ­ரி­டமே சொல்லி இருக்­கி­றேன். 'வட்­டம்' படத்­தில் அவ­ரு­டன் இணைந்து நடித்­தது இனிய அனு­ப­வம். கதைப்­படி அவர் மிக துணிச்­ச­லான பெண். ஒரு காட்­சி­யில் கெட்ட வார்த்­தையைக்­கூட பயன்­படுத்தி இருப்­பார்.

"இந்­தப் படத்­தின் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது, 'அதுல்யா ரொம்ப அழ­காக இருக்­கி­றார்' என்று வெளிப்­ப­டை­யா­கப் பேசி­னார். இது­போன்ற பெரிய மனம் யாருக்கு வரும்? இந்­தப் படத்­தில் நானும் அவ­ரும் இணைந்து நடிக்­கும் காட்­சி­களே இல்லை. ஆனா­லும் அவ­ரது அன்பை என்­னால் உணர முடி­கிறது," என்­கி­றார் அதுல்யா ரவி.