'கொலை' படம் உலகத்தரத்தில் உருவாகியுள்ளது'

'கொலை' படம் உலகத்தரத்தில் உருவாகியுள்ளது'

2 mins read
fcb81230-2174-42b4-a5e3-3fa0b7453f6c
'கொலை' படத்தின் ஒரு காட்சியில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங். -

விஜய் ஆண்­டனி நடிப்­பில் உரு­வாகி உள்ள புதிய படம் 'கொலை'. ரித்­திகா சிங், மீனாட்சி சவுத்ரி என இரு நாய­கி­கள் உள்ள இந்­தப் படம் உல­கத்தரத்­தில் உரு­வாகி உள்­ள­தா­கச் சொல்­கி­றார் விஜய் ஆண்­டனி.

பாலாஜி குமார் இயக்­கி­யுள்ள இந்­தப் படத்­துக்கு கிரீஷ் கோபா­ல­கி­ருஷ்­ணன் இசை­ய­மைத்­துள்­ளார். இந்­நி­லை­யில் இப்­ப­டக்­கு­ழு­வி­னர் சென்­னை­யில் இசை வெளி­யீட்டு விழாவை சிறப்­பாக நடத்தி முடித்­துள்­ள­னர்.

இந்­நி­கழ்­வில் பேசிய விஜய் ஆண்­டனி, உல­கத் தர­மான ஒரு படத்­தில் பணி­யாற்­றி­யதை நினைத்து தாம் பெரு­மி­தம் கொள்­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"எந்த படத்­துக்­குமே முழுப்­பொறுப்பு இயக்­கு­நர்­தான். அவ­ருக்­குத் தூணா­க­வும் துரும்­பா­க­வும் இருப்­ப­து­தான் என்­னைப் போன்ற கலை­ஞர்­க­ளின் முக்­கிய வேலை. இந்­தப் படத்­தின் மூலம் பாலாஜி என்ற தர­மான இயக்­கு­நர் தமிழ் சினி­மா­வுக்­குக் கிடைத்­துள்­ளார்.

"அவ­ரு­டைய கன­வு­தான் 'கொலை' என்ற பட­மாக உரு­வாகி உள்­ளது. அவர் மீதான நம்­பிக்­கை­யின் பேரி­லேயே உல­கத்­த­ரத்­தில் ஒரு படம் உரு­வாகி இருப்­ப­தா­கச் சொல்­கி­றேன்.

"இந்த படத்­தின் தயா­ரிப்­பா­ளர்­கள் தமிழ் சினி­மா­விற்கு கிடைத்த வரங்­கள். அவர்­க­ளுக்கு நிறைய அனு­ப­வம் இருக்­கிறது. அத்­த­கை­ய­வர்­க­ளு­டன் இணைந்­து பணி­யாற்றி­யது மகிழ்ச்சி அளிக்­கிறது. ஓர் இசை­ய­மைப்­பா­ள­ராக, இந்தப் படத்­தின் இசை­ய­மைப்­பா­ள­ரு­டைய பணி மிக­வும் பிடித்­தி­ருக்­கிறது. ­நா­யகிகள் ரித்­திகா, மீனாட்சி ஆகிய இரு­வரு­ட­னும் பணி­பு­ரிந்­தது நல்ல அனு­ ப­வம். இரு­வ­ருமே சிறப்­பாக நடித்துள்ளனர்," என்று அள­வோடு பேசி முடித்­தார் விஜய் ஆண்­டனி.

நாயகி ரித்­திகா பேசு­கை­யில், இப்­ப­டத்­தில் இடம்­பெற்­றுள்ள ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரத்­துக்­கும் உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்டுள்ளது என்­றார்.

"இந்­தப் படத்­தின் கதை­யைக் கேட்­கத் தொடங்­கிய சில நிமி­டங்­களில் நான் கதைக்­குள் ஆழ­மாகப் போய்­விட்­டேன். கதை­யின் முடிவை உட­ன­டி­யா­கத் தெரிந்­து­கொள்ள விரும்­பி­னேன். அந்த அள­வுக்கு சுவா­ர­சி­ய­மான கதை, திரைக்­கதையை அமைத்­துள்­ளார் இயக்கு­நர்," என்­றார் ரித்­திகா சிங்.

இது­போன்ற தரு­ணத்­துக்காகவே தாம் பல ஆண்­டு­க­ளா­கக் காத்துக்­கி­டந்­த­தாக இயக்­கு­நர் பாலாஜி குமார் குறிப்­பிட்­டார்.

"இந்தப் படம் உரு­வாக மிக முக்­கி­ய­மான கார­ணம் விஜய் ரத்­தி­ன­மும் விஜய் ஆண்­ட­னி­யும்தான். இந்­தக் கதை­யில் நடிக்க விஜய் ஆண்­டனி ஒப்­புக்­கொள்­வாரா என சந்­தே­க­மாக இருந்­தது. ஆனால் கதையை வெகு­வா­கப் பாராட்­டி­ய­து­டன், கேட்ட தேதி­களில் கால்­ஷீட்­டும் ஒதுக்­கி­னார்.

"என்­னு­டன் பணி­யாற்­றிய தொழில்­நுட்பக் கலை­ஞர்­கள் இந்தப் படத்­தின் பலம். அவர்­கள் அனை­வருமே கண்­மூ­டித்­த­ன­மான நம்­பிக்­கை­யு­டன் உழைத்­தார்­கள்," என்­றார் இயக்­கு­நர் பாலாஜி குமார்.