இந்தியாவில் பெண்கள் நாள்தோறும் உருவ கேலிக்கு ஆளாகி வருவதாக நடிகை ஹூமா குரோஷி கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட அனைத்துப் பெண்களும் ஏதேனும் ஒரு வகையில் ஒரு பிரச்சினையை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "பெண்களின் தோற்றத்தை அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கேலி செய்கிறார்கள்.
"உருவகேலி செய்வது நமக்குள் ஊறிப்போன ஒன்றாக மாறிவிட்டது. உருவ கேலிகள் ஒருவரின் நம்பிக்கையை முழுவதுமாக சிதைத்து விடுகிறது. இந்த பிரச்சினையை மையமாக வைத்து தயாராகி உள்ள ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன். இந்த படம் உருவ கேலி செய்பவர்கள் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்," என்று ஹூமா குரோஷி தெரிவித்துள்ளார்.
மறைந்த கவர்ச்சி நடிகை 'சில்க்' ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஏற்கெனவே 'டர்ட்டி பிக்சர்' என்ற திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க உள்ளனர். இதில் நடிகை வித்யா பாலன் நடிக்க முன்வரவில்லையாம்.
இதையடுத்து, முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏக்தா கபூர் புது நாயகியைத் தேடி வந்தார். அவரது முயற்சி குறித்து கேள்விப்பட்ட நடிகைகள் டாப்சியும் கீர்த்தி சனானும் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இருவரில் யாரேனும் ஒருவரை ஏக்தா கபூர் ஒப்பந்தம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் பாகம் உருவாவது குறித்தும் அதில் நடிப்பது குறித்தும் வித்யா பாலன் இதுவரை வெளிப்படையாக ஏதும் தெரிவிக்கவில்லை.
அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியுள்ள நடிகை நஸ்ரியா தமது விமானப் பயணம் மோசமான அனுபவங்களைத் தந்ததாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் பணியாளர்கள் வழங்கிய சேவை மோசமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"விமானத்தில் பைகள் காணாமல் போய் உதவிக்கு அவர்களை அழைக்கும்போது கண்டுகொள்ளவே இல்லை. இனிமேல் எனது வாழ்க்கையில் அந்த விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன்," என்று கூறியுள்ளார் நஸ்ரியா.
இதையடுத்து ரசிகர்களும் மோசமான விமானப் பயணங்கள் குறித்த அனுபவங்களை நஸ்ரியாவுடன் பகிர்ந்துள்ளனர்.