மாதவன்: உடனடியாக முடிவெடுக்கக் கூடாது

மாதவன்: உடனடியாக முடிவெடுக்கக் கூடாது

1 mins read
6eb76716-f28e-4e68-9c51-30bff6dd11f5
'ராக்கெட்ரி' படத்தின் ஒரு காட்சியில் மாதவன், சிம்ரன். -

ஒரு­சில படங்­க­ளின் வெற்­றியை மட்­டும் கவ­னத்­தில் கொண்டு ஒட்­டு­மொத்த இந்­தி­யத் திரை உலகின் போக்கு மாறி­விட்­ட­தாகக் கூற முடி­யாது என்­கி­றார் மாதவன்.

மும்­பை­யில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், அனைத்­துத் தரப்பு மக்­களும் பார்க்­கும் வகை­யில் திரைப்­படங்­களை உரு­வாக்க வேண்­டும் என்­றார்.

"தென்­னிந்­தி­யா­வில் உரு­வான சில படங்­கள் இந்­திய அள­வில் பெரும் வெற்றி பெற்­றுள்­ளன. 'பாகு­பலி-1', 'பாகு­பலி-2', 'ஆர்ஆர்ஆர்', 'புஷ்பா', 'கேஜி­எஃப்' ஆகிய படங்­க­ளுக்கு வட­இந்­தி­யா­வி­லும் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

சொல்­லப்­போ­னால், இந்­தி­யில் உள்ள முன்­னணி நாய­கர்­க­ளின் படங்­க­ளை­விட இவற்­றின் வசூல் நன்­றாக இருந்­தது. ஆனால் இந்­தச் சில படங்­க­ளின் வெற்­றியை மட்­டுமே வைத்து இந்­திய சினிமா­வின் பாணி மாறி­யுள்­ளது என்று கூறி­விட முடி­யாது.

"நல்ல படங்­களை மக்­கள் நிச்­ச­யம் விரும்பிப் பார்ப்­பார்­கள். உண்­மை­யில் கொரோனா பெருந்­தொற்று காலத்­தில் மக்­கள் ஏரா­ள­மான உலக சினி­மாக்­க­ளைப் பார்த்­துப் பழ­கி­விட்­டார்­கள்.

"அத­னால் அவர்­க­ளின் விருப்­பங்­க­ளி­லும் ரச­னை­க­ளி­லும் நிறைய மாற்­றங்­கள் ஏற்­பட்­டி­ருக்­கின்றன என்று கரு­து­கி­றேன்," என்றார் மாத­வன்.