'வலி உணர்ந்து நடித்தேன்'

'வலி உணர்ந்து நடித்தேன்'

3 mins read
77488bfb-9320-4c0a-8a82-63bad8004c2c
-

ஓடிடி தளங்­களில் வெளி­யா­கும் திரைப்­ப­டங்­கள் உல­கம் முழுவதும் அதி­க­மான ரசி­கர்­க­ளைச் சென்­ற­டை­வ­தா­கச் சொல்­கி­றார் அருண் விஜய்.

புதுப்­ப­டங்­களை முறை­கே­டாக இணை­யத்­த­ளங்­களில் வெளி­யி­டு­வ­தால் திரை­யு­ல­கம் மிகுந்த பாதிப்புக்கு ஆளா­வ­தாக அண்­மைய பேட்­டி­யில் இவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அருண் விஜய் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'தமிழ் ராக்­கர்ஸ்' இணை­யத்­தொ­டர் கடந்த 19ஆம் தேதி வெளி­யானது. திரை­யு­ல­கத்­தினர் அனு­ப­விக்­கும் வேத­னை­க­ளை­யும் சிக்­கல்­க­ளை­யும் இந்­தத் தொடர் ஆழ­மா­க­வும் புள்ளி விவ­ரங்­க­ளு­ட­னும் எடுத்­துச் சொல்­லும் வகை­யில் உரு­வாகி இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"நான் நடித்த 'தடம்' படம் 2019இல் வெளி­யா­னது. ஆனால் அடுத்த நாளே இணையத்­தளங்­களில் அதை வெளி­யிட்­ட­னர். இது­போன்ற செயல்­க­ளால் தயா­ரிப்­பா­ள­ருக்கு பெரும் இழப்பு ஏற்­படும். இதை நன்கு அறிந்­துள்­ள­வர்­கள் இப்­ப­டிப்­பட்ட முறை­கேடான செயல்­களில் ஈடு­ப­டக்­கூ­டாது," என்று வேத­னை­யு­டன் குறிப்­பிட்­டுள்ள அருண் விஜய், ஓடிடி தளங்­களில் திரைக் கலை­ஞர்­க­ளுக்கு கூடு­தல் சுதந்­தி­ரம் கிடைத்­துள்­ளது என்­கி­றார்.

ஓடிடி தளங்­களில் துணிச்­ச­லு­டன் செயல்­பட முடி­கிறது என்­றும் எது­குறித்­தும் வெளிப்­ப­டை­யா­கப் பேச முடி­கிறது என்­றும் சொல்­கி­றார்.

"நம்­மு­டைய கருத்­து­களை உரக்­கச் சொல்­லும் சுதந்­தி­ரம் வேண்­டும். திரைப்­ப­டங்­க­ளுக்­கும் இணை­யத் தொடர்­க­ளுக்­கும் இடையே பெரிய வித்­தி­யா­சங்­கள் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. இரண்­டை­யும் ஒரே மாதி­ரி­யா­கத்­தான் பார்க்­கி­றேன்.

"எனக்­கான கதா­பாத்­தி­ரத்­து­டன் பொருத்­திக்கொள்­ள­வும் அத­னு­டன் பய­ணம் செய்யவும் கூடு­தல் அவ­கா­சம் கிடைக்­கிறது என்­பதை வேண்­டு­மா­னால் முக்­கி­ய­மான வித்­தி­யா­சம் எனக் குறிப்­பி­ட­லாம். அதே­ச­ம­யம் ஓடிடி தளத்­தில் வெளி­யா­கும் படைப்­பு­கள் மூலை முடுக்­கு­கள் எல்­லாம் சென்­ற­டைகிறது. இத­னால் கடைக்­கோடி ரசி­க­னுக்­கும் நம் படங்­க­ளைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்," என்­கி­றார் அருண் விஜய்.

'தமிழ் ராக்­கர்ஸ்' இணை­யத்­தொ­ட­ரில் பேசப்­பட்­டுள்ள விஷ­யங்­களை, இரண்­டரை மணிநேர திரைப்­ப­டத்­துக்­குள் அடைக்க முடி­யாது என்­றும் அதை உணர்ந்­து­தான் இணை­யத்தொட­ராக எடுக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் விளக்­கம் அளிக்­கி­றார்.

முன்பு திருட்டு விசிடி, இப்­போது முறை­கே­டா­கச் செயல்படும் இணை­யத்­த­ளங்­கள் ஆகி­ய­வற்­றால் திரைத்­துறை தினந்­தோறும் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கக் கொல்­லப்­ப­டு­கிறது என கவலை தெரி­விக்­கி­றார்.

"தயா­ரிப்­பா­ளர்­க­ளின் வலி, கலை­ஞர்­க­ளின் உழைப்பு ஆகி­ய­வற்றை மன­திற்­கொண்டுதான் இணை­யத்­தொடரில் நடித்­தேன். என்­னைப் பொறுத்­த­வரை 'இயக்­கு­ந­ரின் நடி­கன்' என்று பெய­ரெ­டுக்­கவே விரும்­பு­கி­றேன். கார­ணம், நான் நடிக்­கும் கதா­பாத்­தி­ரங்­களை எனக்­கும் முன்­பா­கவே உள்­வாங்­கிக் கொண்டு, அதை மெரு­கேற்­று­வது இயக்­கு­நர்­தான். அவ­ரது உழைப்­பின் தொடர்ச்­சி­யா­கவே நடி­கர்­கள் திரை­யில் தோன்­று­கி­றார்­கள்.

"நான் கதா­நா­ய­க­னாக நடிக்­கும்­போது, அந்­தக் கதா­பாத்­தி­ர­மும் சில இடங்­களில் தவறு செய்­வ­தாக காட்­டப்­ப­டு­கிறது. சில தோல்­வி­களைச் சந்­திப்­ப­தா­க­வும் சித்தி ரிக்­கப்­ப­டு­கிறது. இப்­ப­டிப்­பட்ட காட்­சி­களில் ஏன் நடிக்­கி­றீர்­கள் என்று ரசி­கர்­கள் கேட்­ப­துண்டு.

"இது­போன்ற காட்சி அமைப்பை நான் வர­வேற்­கி­றேன். கார­ணம், கதா­நா­ய­கர்­களும் மனி­தர்­கள்­தான். அவர்­க­ளுக்­கும் பின்­ன­டை­வு­கள் ஏற்­படும். அவ்­வாறு காட்­சிப்­படுத்­தும்­போதுதான் இயல்­பா­க­வும் நம்­பும்­ப­டி­யா­க­வும் இருக்­கும்.

"சிறு குறை­பா­டு­கள் உள்ள கதா­நா­ய­க­னாக திரை­யில் தோன்­று­வதை விரும்­பு­கி­றேன்," என்று சொல்­லும் அருண் விஜய், 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் நடிக்க முடி­யா­மல் போன­தற்­காக வருந்­து­கி­றா­ராம்.

அந்த வாய்ப்பு தேடி­வந்­த­போது, தமது சொந்­தத் தயா­ரிப்­பில் ஒரு படத்தைத் தயாரித்து வந்­த­தா­க­வும் நீண்ட நாள்­கள் மீசை, தாடி­யு­டன் படப்­பி­டிப்­பில் பங்­கேற்க வேண்­டும் என்று இயக்­கு­நர் மணி­ரத்­னம் தரப்­பில் கேட்டுக்­கொண்­ட­தா­க­வும் சொல்­கி­றார்.

"என்னால் நீண்ட நாள்களுக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அதனால் அந்தப் பட வாய்ப்பு கைநழுவிப்போனது. எனினும் மணி சார் மீண்டும் ஒரு வாய்ப்பை அளிப்பார் என நம்புகிறேன்," என்கிறார் அருண் விஜய்.