வேண்டாம் இந்த விருது: கோபத்தில் கங்கனா

வேண்டாம் இந்த விருது: கோபத்தில் கங்கனா

1 mins read
fb75ef11-98e2-4304-a7f1-418e9d7c23d6
'தலைவி' படத்தில் கங்கனா. -

தன் பெயரை விரு­துக்கு பரிந்­துரைத்­த­தால் கோபம் அடைந்த நடிகை கங்­கனா ரண­வத், 'ஃபிலிம்­ஃபேர்' நிறு­வனத்தின்மீது வழக்கு தொடுக்­கப்போவ­தாக அறி­வித்­துள்­ளார். அவ­ரது இந்­தக் கோபம் சமூக ஊட­கங்­களில் புதிய விவா­தங்­களை தொடங்கி வைத்­துள்­ளது.

கடந்த 2014ஆம் ஆண்­டி­லேயே 'ஃபிலிம் ­ஃபேர்' விரு­துக்­கான தேர்­வில் ஊழல் நிலவுவதாகவும் நியாய­மற்ற நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­டு­வ­தாகவும் சாடியிருந்­தார் கங்­கனா.

மேலும் அந்த விரு­துத் தேர்­வில் ஊழ­லும் நெறி­மு­றை­யற்ற செயல்­பா­டு­களும் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், இனி தமது பெயரை அந்த விரு­துக்­குப் பரி­சீ­லிக்க வேண்­டாம் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், காலஞ்­சென்ற முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கை வர­லாற்­றுப் பட­மான 'தலைவி' படத்­தில் நடித்­தி­ருந்­தார் கங்­கனா.

இந்தப் படம் கடந்த 2021இல் வெளி­யா­னது. இதில் சிறப்­பாக நடித்­த­தற்­காக 67வது 'ஃபிலிம்­ஃபேர்' விரு­துக்கு சிறந்த நடிகைக்­கான பிரி­வில் கங்­க­னா­வின் பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து விருது குழு­வி­னர் அவ­ருக்கு அண்­மை­யில் தகவல் தெரி­வித்­த­னர். அதன் பிறகே பிரச்­சினை வெடித்­தி­ருக்­கிறது.

"நியா­ய­மற்ற முறை­யில் வழங்­கப்­படும் 'ஃபிலிம்­ ஃபேர்' உள்­ளிட்ட விரு­து­களை நான் தவிர்த்து வரு­கி­றேன். இருப்­பி­னும் என்னை தேர்ந்­தெ­டுத்­துள்­ள­தா­கக் கூறி அழைப்பு விடுத்­துள்­ள­னர். அவர்­கள் இன்­னும் என்னைப் பரிந்­து­ரைத்து வரு­வ­தைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்­தேன்.

"அந்த விருது நிகழ்­வில் நான் பங்­கேற்­பது எனது தொழில் தர்­மத்­திற்கு எதி­ரா­னது," என்­கி­றார் கங்­கனா.

இவ­ரது இந்­த பகி­ரங்க குற்­றச்­சாட்டை அடுத்து, விரு­துப் பரிந்­து­ரைப் பட்­டி­ய­லில் இருந்து அவ­ரது பெயரை 'ஃபிலிம்­ ஃபேர்' நீக்கிவிட்டது.