தாய்லாந்து கடலில் படப்பிடிப்பு; யானை மீது ஜெயம் ரவி, குதிரை மீது விக்ரம்

தாய்லாந்து கடலில் படப்பிடிப்பு; யானை மீது ஜெயம் ரவி, குதிரை மீது விக்ரம்

2 mins read
06483f30-feaa-4b94-9b53-92e556c6f2ab
படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா. -

'பொன்­னி­யின் செல்­வன்' படம் அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும் மன­நி­றைவு தரும் படைப்­பாக இருக்­கும் என்­கி­றார் அப்­ப­டத்­தின் ஒளிப்­பதி­வா­ளர் ரவி­வர்­மன்.

கடந்த 65 ஆண்­டு­க­ளாக பொன்­னி­யின் செல்­வ­னைத் திரைப்­ப­ட­மாக்க முயற்­சி­கள் நடந்­து­கொண்டே இருந்­தன. மறைந்த முதல்­வர் எம்ஜிஆர் தொடங்கி பலர் இந்த முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர். ஆனால் எது­வும் கைகூ­ட­வில்லை.

"சிலர் தீவி­ர­மாக முயன்று அதற்­கான பணி­க­ளைத் தொ­டங்­கி­ய­போது, காலில் இட­றும் கல் மாதிரி ஏதா­வது ஒரு தடை ஏற்­பட்டு பட வேலை­கள் நின்­று­போ­ன­தாக அறிகி­றேன். இந்­நி­லை­யில், இத்­தனை ஆண்­டு­கால கனவை இயக்­கு­நர் மணி­ரத்­னம் நன­வாக்கி உள்­ளார். இந்­தப் படத்தை உரு­வாக்­கி­யது பெரும் சாதனை," என்­கி­றார் ரவி­வர்­மன்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பே 'பொன்­னி­யின் செல்­வன்' படம் தொடர்­பான வேலை­க­ளைச் சத்­த­மின்­றித் தொடங்­கி­விட்­டா­ராம் மணி ரத்­னம். அச்­ச­ம­யம் அவ­ரி­டம் இருந்து வந்த குறுந்­த­க­வ­லில் 'ஒரு படம் செய்­ய­லாமா... நாம் சந்­திக்­க­லாமா' என்று கேட்­டி­ருந்­தா­ராம்.

ரவி­வர்­ம­னும் நேரில் செல்ல, "வேறு ஒன்­று­மில்லை. 'பொன்­னி­யின் செல்­வன்' படத்தை எடுக்­கப் போகி­றோம். இரண்டு பாகங்களாகப் படத்தை முடிக்­கி­றோம். நீங்­கள்­தான் ஒளிப்­ப­தி­வா­ளர்' என்­றார். அது சற்றும் எதிர்­பார்த்­தி­ராத இன்ப அதிர்ச்சி.

"அடுத்­த­டுத்து படப்­பி­டிப்­பிற்­கான திட்­டங்­கள் கச்­சி­த­மா­கப் போடப்­பட்­டன. 130 நாள்­களில் படப்­பி­டிப்பு நடந்து முடிந்­தது. தாய்­லாந்து காடு­கள், நீர்­நி­லை­கள், குகை­களில் நடந்த படப்­பி­டிப்பு மிக­வும் சிர­ம­மானது.

"நடி­கர்­கள், படப்­பி­டிப்­புக் குழு­வி­னர் எல்­லோ­ரும் ஒரு குறிப்­பிட்ட இடத்­திற்கு வந்து, பிறகு நடந்தோ, பட­கு­க­ளிலோ படப்­பி­டிப்பு நடக்­கும் இடத்­தைச் சென்­ற­டைய வேண்­டும். அங்­கே­தான் கடல் காட்­சி­கள், சண்டை, பாடல் காட்­சி­களும் எடுக்கப்­பட்­டன. அப்போதுதான் கொரோனா­ முதல் அலை வந்­தது. சென்னை திரும்­பி­னோம். மணி சார் அந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி வச­னங்­களை­யும் காட்­சி­க­ளை­யும் மேலும் கூர்தீட்­டி­னார்.

"இந்­தப் படத்­துக்­காக நடி­கர்­கள் பெரி­தும் மெனக்­கெட்­டுள்­ள­னர். நடி­கர் கார்த்தி குதிரை ஏற்­றத்­தில் கைதேர்ந்­த­வ­ரா­கி­விட்­டார். நூறு கிலோ மீட்­டர் ஓடும் குதி­ரை­க­ளை­எல்­லாம் அவர் குழந்தை மாதிரி பழக்கி வைத்­தி­ருந்­தார். ஒரு­முறை பெரும் வேகத்­தில் வரும்­போது குதி­ரை­யின் பிடி சற்று விலகி கீழே விழுந்­து­விட்­டார். நல்­ல­வேளை, பின்­னி­யி­ருந்த கால்­கள் வில­கி­விட்­ட­தால் சிராய்ப்­பு­க­ளோடு தப்­பித்­தார். ஆனால் அவர் வந்த குதிரை, கேம­ரா­வின் பக்­கத்­தில் இருந்த நாற்­கா­லியை உடைத்து விட்­டுப்போனது.

"மற்­றொரு சம­யத்­தில் நடி­கர் விக்­ரம் காலை ஏழு மணிக்­கு குதிரை­யில் ஏறி அமர்ந்­த­வர் மாலை ஆறு மணி வரை இறங்­க­வில்லை. மிக­வும் முக்­கி­ய­மான அந்தக் காட்சி­யில் மூழ்­கி­விட்­டார்.

"ஜெயம் ரவிக்கு யானை­யின் மீது வரு­வ­து­போல் காட்­சி­கள் இருந்­தன. வேக­மாக ஓடும் யானை­யில் மெல்­லிய ஆடை­யு­டன் அமர்ந்­தி­ருப்­ப­தெல்­லாம் சாதா­ரண விஷ­ய­மல்ல. மிகுந்த துணிச்­சல் தேவை," என்கிறார் ரவிவர்மன்.