'இவர் ஒரு நடிப்பு ராட்சசி'

'இவர் ஒரு நடிப்பு ராட்சசி'

3 mins read
16abffcc-956f-4c96-9d98-0d1e4bf2581e
-

இந்த ஆண்­டில் மட்­டும் நித்யா மேனன் நடிப்­பில் மூன்று படங்­கள் வெளி­யீடு கண்­டுள்­ளன. மூன்­றி­லும் மாறு­பட்ட கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ளார் நித்யா மேனன்.

தனு­ஷு­டன் நடித்து அண்­மை­யில் வெளி­யான 'திருச்­சிற்­றம்­ப­லம்' படத்­தின் மூலம் தமிழ் ரசி­கர்­களு­டன் நித்யா நெருக்­க­மா­கி­விட்­டார். அப்­ப­டத்­தில் அவர் ஏற்று நடித்த யசோதா கதா­பாத்­தி­ரம் குறித்து சமூக ஊட­கங்­களில் பல­ரும் பாராட்டு மழை பொழிந்து வரு­கின்­ற­னர்.

அதே­ச­ம­யம் அப்­ப­டத்­தின் இறு­திக்­காட்சி எதிர்­பார்த்­த­படி இல்லை என்றும் பொருத்­த­மற்ற முடிவு என்­றும் ஒரு விவா­தம் நடை­பெற்­றுக்கொண்­டி­ருக்­கிறது.

இந்­நி­லை­யில், ஓர் இயக்­கு­ந­ரின் பணி­யில் யாரும் குறுக்­கி­டக்­கூ­டாது என்று கூறி­யுள்ளார் நித்யா மேனன்.

"எதி­லும் ஒரு­மித்த கருத்து என்­பது ஏற்­பட வாய்ப்­பில்லை. ஒரு விவ­கா­ரம் தொடர்­பாக பல்­வேறு கருத்­து­கள் நிலவும். இது இப்­படி இருக்க வேண்டும் என்­றும் இப்­படி இருந்­தி­ருக்­க­லாம் என்­றும் பலர் பல­வி­த­மா­கப் பேசக்­கூடும்.

"ஒரு திரைப்­ப­டத்தை உரு­வாக்­கும் இயக்­கு­நர்­தான் அனைத்­தை­யும் முடிவு செய்­கி­றார். படத்­தில் இடம்­பெ­றும் காட்­சி­கள், அவற்­றின் தன்மை எல்­லாம் அவர் கையில் உள்­ளது.

"இறு­திக்­காட்சி இப்­ப­டித்­தான் இருக்க வேண்­டும் என்று முடிவு செய்து, அவர் தன் கருத்தை காட்­சிப்­ப­டுத்து­கி­றார்.

"ஒரு­வேளை நீங்­கள் திரைப்­ப­டம் இயக்­கும் பட்­சத்­தில் உங்­க­ளு­டைய கருத்­து­களை முன்­வைக்­க­லாம். 'திருச்­சிற்­றம்­ப­லம்' படத்­துக்கு விமர்­சன ரீதி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. பெரும்­பா­லா­னோர் படத்தை ரசித்­துப் பார்த்­துள்­ள­னர்.

"எனவே எதிர்­மறை கருத்­து­கள் குறித்­துப் பேசு­வதை நிறுத்த வேண்­டும்," என்று திட்­ட­வட்­ட­மா­கப் பேசுகிறார் நித்யா.

ஒரு கதா­பாத்­தி­ரத்­துக்­காக தாம் நூறு விழுக்­காட்­டுக்­கும் மேல் உழைப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அதற்­கான அங்­கீ­கா­ர­மும் பாராட்­டும் உட­னுக்­கு­டன் கிடைப்­பது கூடு­தல் உற்­சா­கம் தரு­கிறது என்கிறார்.

"உண்­மைச் சம்­ப­வங்­கள், யதார்த்­த­மான, நேர்­மை­யான கதைக்­க­ருக்­களை கவ­னத்­து­டன் தேர்வு செய்­கி­றா­ராம். மேலும் அதிக படங்­களில் நடிக்க வேண்­டும் எனும் திட்­ட­மும் இல்லை என்­கி­றார்.

"எந்­த­வொரு கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும், அது எனது இயல்­பான குணா­தி­ச­யத்­து­டன் ஏதோ ஒரு வகை­யில் பொருந்­திப்போனால் போதும், அதில் நடிக்­கத் தயங்­க­மாட்­டேன். துணிச்­ச­லான பெண்ணை திரை­யில் பிர­தி­ப­லிக்­கும் கதா­பாத்­தி­ரங்­க­ளில்­தான் எனக்கு ஆர்­வம் அதி­கம். எனக்­குப் பல மொழி­கள் தெரி­யும். அத­னால் வச­தி­யாக உள்ளது.

"சினிமா என்­பது ராக்­கெட் அறி­வி­யல் சம்­பந்­தப்­பட்­ட­தல்ல. எனவே எது சரி­யா­னது என்று தோன்­று­கி­றதோ, அதைச் செய்­கி­றேன்.

"எனவே திட்­ட­மிட்­டுச் செயல்­பட்டு, வாய்ப்பு­களை ஏற்க வேண்­டும் என்­ப­தெல்­லாம் அவ­சி­யம் இல்­லா­தது," என்று நித்யா­வின் பேச்­சில் தெளி­வும் நம்­பிக்கையும் அதி­கம் தொனிக்­கிறது.

நித்­யா­வின் நிஜம், நிழல் (நடிகை) ஆகி­ய­வற்­றுக்கு இடையே உள்ள வித்­தி­யாசம்?

"இரண்­டும் வெவ்­வேறு என நான் கரு­தி­ய­து இல்லை. நடிப்பு என்­பது வெளி­யில் இருந்து வர­வில்லை. அது ஆத்­மார்த்­த­மாக, என்­னுள் இருந்து இயல்­பா­க­வும் சர­ள­மா­க­வும் வெளிப்­படு­கிறது.

"என் ஆழ் மனதில் பதிந்­துள்­ள­வற்றை எனது நடிப்­பில் காண முடியும். அதே­ச­ம­யம் படப்­பிடிப்பு முடிந்த அடுத்த நிமி­டமே என் மன­தை­விட்டு அந்­தந்த கதா­பாத்­தி­ரங்­கள் மறைந்­து­வி­டும்," என்­கி­றார் நித்யா மேனன்.

'திருச்­சிற்­றம்­ப­லம்' படத்­தின் இசை வெளி­யீட்டு விழா­வில் நித்யாவை, 'இவர் ஒரு நடிப்பு ராட்­சசி' என்று குறிப்­பிட்­டுப் பாராட்­டி­னார் நடிகர் பிரகாஷ்ராஜ். அவ­ரைப் போன்ற அனு­ப­வ­மும் அதீத திற­மை­யும் கொண்­ட­வர்­கள் தம்­மைப் பாராட்­டு­வது மிகப்­பெ­ரிய அங்­கீ­கா­ரம் என்­கி­றார்.

'திருச்­சிற்­றம்­ப­லம்' படத்­தில் நடித்­துள்ள மற்ற இரு கதா­நா­ய­கி­க­ளான பிரியா பவானி சங்­கர், ராஷி கண்ணா ஆகி­யோ­ரும் நித்­யா­வின் நடிப்பைப் பாராட்டித் தீர்த்­துள்­ள­னர்.

"உடன் நடிக்­கும் கலை­ஞர்­களும் பாராட்டு­வதைக் கேட்­கும்­போது ஒரு நடி­கை­யாக வியந்துபோகி­றேன். பிரி­யா­வும் ராஷி­யும் எனது ரசிகை­கள் என்று கூறி­ய­போது, இது­தான் எனக்­குக் கிடைத்த உச்­ச­பட்ச பாராட்டு என்று நினைக்கத் தோன்­றி­யது," என்கிறார் நித்யா.

, :

  