'போராடி வென்றுள்ளேன்'

'போராடி வென்றுள்ளேன்'

3 mins read
8de69d5d-e04c-43d8-ae51-f59b6f806fb0
துஷாரா விஜயன் -

தமிழ் சினி­மா­வின் கதா­நா­ய­கி­கள் மும்­பை­யில் இருந்­து­தான் வர வேண்­டும் என்­ப­தில்லை. திண்­டுக்­கல் அருகே உள்ள கன்­னி­யா­பு­ரம் என்ற குக்­கி­ரா­மத்­தில் இருந்­தும் வர­லாம் என்று சொல்­வ­தற்­கா­கவே நடிக்க வந்­துள்­ளேன் என்­கி­றார் இளம் நாயகி துஷாரா விஜ­யன்.

'சார்­பட்டா பரம்­பரை' படத்­தில் ஆர்­யா­வுக்கு ஜோடி­யாக நடித்­த­வர். சிறு வய­தி­லேயே கதா­நா­ய­கி­யாக வேண்­டும் என்ற கன­வு­டன் இருந்­த­தா­கச் சொல்­லும் துஷாரா, திரைப்­ப­டங்­கள் சமூ­கத்­தில் ஏற்­ப­டுத்­தும் மாற்­றங்­கள் தம் கவ­னத்­தைப் பெரி­தும் ஈர்த்­த­தால், திரை­யு­ல­கம் மீதான விருப்­பம் மேலும் அதி­க­ரித்­தது என்­கி­றார்.

"நான் யாரைப் பின்­பற்றி திரை­யு­ல­குக்கு வந்­தேன் என்று கேட்­கி­றார்­கள். தனிப்­பட்ட ஒரு­வ­ரைப் பார்த்து நான் நடி­கை­யாக ஆசைப்­ப­ட­வில்லை. சினிமா ஏற்­ப­டுத்­தும் தாக்­கம் வியக்க வைத்­தது. திரை­யில் நாய­க­னும் நாய­கி­யும் பேசும் வச­னங்­களை மனப்­பா­டம் செய்து, நமது சொந்த வாழ்க்­கை­யில் பயன்­ப­டுத்­து­கி­றோம்.

"திரைப்­ப­டங்­க­ளு­ட­னும் கலை­ஞர்­க­ளு­ட­னும் நம்­மைப் பொருத்­திப் பார்க்­கி­றோம். இத­னால்­தான் நாய­கன், நாய­கிக்கு அதிக வர­வேற்பு கிடைப்­ப­தா­கத் தோன்­று­கிறது," என்று சொல்­லும் துஷாரா அச்சு அசல் தமிழ்ப் பெண்.

மிகச் சர­ள­மாக தமி­ழில் உரை­யா­டு­ப­வர், மண்­வா­ச­னை­யுள்ள கதைக்­க­ளங்­களில் நடிக்க விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார். மேலும், தமது வாழ்க்­கையை 'சார்­பட்டா' படத்­துக்­கு­முன், சார்­பட்டா'வுக்­குப்­பின் எனப் பிரித்­துப் பார்க்க வேண்­டும் என்­கி­றார்.

"உண்­மை­தான். முன்பு பத்­துப் பேருக்கு என்­னைப் பற்­றித் தெரி­யும் என்­றால், இப்­போது எல்­லோ­ருக்­கும் தெரிந்த முக­மாகி உள்­ளேன். அது­தான் சினிமா. இதற்கு ஆசைப்­பட்­டுத்­தான் திரைத்­து­றைக்கு வந்­துள்­ளேன்.

"என் வீட்­டில் உள்ள சிறார்­கள்­கூட நான் ஏற்று நடித்த மாரி­யம்மா கதா­பாத்­தி­ரம் குறித்து பேசு­கி­றார்­கள். நமக்­குப் பிடித்­த­மா­ன­வற்­றைச் செய்­வ­தும் அவற்றை மற்­ற­வர்­கள் ரசித்­துப் பாராட்­டு­வ­தும் அழ­கான அனு­ப­வங்­க­ளாக மனத்­தில் பதிந்­து­வி­டு­கின்­றன. இது ஒரு­வித போதை. திரை­யு­ல­கில் கடந்த ஏழு ஆண்­டு­க­ளா­கப் பணி­யாற்றி வரு­கி­றேன். பல ஏற்ற இறக்­கங்­க­ளைப் பார்த்­தா­கி­விட்­டது," என்று சிரித்­த­படி கண்­சி­மிட்­டு­கி­றார் துஷாரா.

புது­மு­கங்­க­ளுக்கு வாய்ப்பு கிடைப்­ப­தில்லை என்­றும் வாரிசு நடி­கர்­க­ளுக்­குத்­தான் மவுசு உள்­ளது என்­றும் கூறப்­ப­டு­வதை தம்­மால் ஏற்க முடி­யாது என்று குறிப்­பி­டு­ப­வர், யாராக இருந்­தா­லும் திற­மைக்­குத்­தான் முதல் மரி­யாதை என்­கி­றார்.

"திறமை இல்லை என்­றால் திரை­யு­ல­கில் நீடிக்க இய­லாது. நாம் சினி­மாவை மதித்­தால் அது நூறு மடங்கு திருப்­பிச் செய்­யும். மாட­லிங், விளம்­ப­ரங்­களில் நடிக்க அழகு என்­பது மிக அவ­சி­யம். ஆனால், திரைப்­ப­டங்­களில் நடிக்க அழகு தேவை­யில்லை.

"நமது திற­மைக்­கான அங்­கீ­காரத்தை யாரா­லும் நிரா­க­ரிக்க முடி­யாது. பெரிய அள­வில் இல்­லை­யென்­றா­லும் சிறிய அள­வி­லா­வது அந்த அங்கீகாரத்தை எதிர்­பார்க்­க­லாம்.

"திரைத்­து­றை­யில் நான் கற்­றுக்­கொண்ட முக்­கி­ய­மான பாடம், பொறுமை காப்­பது. எத்­தனை பேர் வேண்­டு­மா­னா­லும் உங்­க­ளைப் புறக்­க­ணிக்­க­லாம். நிறைய அவ­மா­னங்­க­ளைச் சந்­திக்க நேரி­ட­லாம். ஆனால் சாதிக்க முடி­யும் என்ற நம்­பிக்கை வேண்­டும்.

"இப்­ப­டித்­தான் நான் போராடி வெற்றி பெற்­றேன். கடு­மை­யாக முயற்சி செய்­தும் எது­வும் கிடைக்­க­வில்­லையே என்று நான் புலம்­பி­யதோ யோசித்­ததோ கிடை­யாது," என்­கி­றார் துஷாரா.

சில படங்­களில் ஒப்­பந்­த­மாகி, படப்­பி­டிப்­புக்கு முன்பு நீக்­கப்­பட்ட அனு­ப­வம் தமக்­கும் உள்­ளது என்று குறிப்­பி­டு­ப­வர், இது­போன்ற மேலும் பல அனு­ப­வங்­களைக் கடந்­து­தான் இன்று நாய­கி­யாக உயர்ந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"சில புறக்­க­ணிப்­பு­களும் மறுப்­பு­க­ளும்­தான் எனக்கு முன்­னே­றிச் செல்ல வேண்­டும் என்ற எண்­ணத்தை ஏற்­ப­டுத்­தின.

"நாய­கிக்கு முக்­கி­யத் துவம் உள்ள படம் 'நட்­சத்­தி­ரம் நகர்­கிறது'. பா.ரஞ்­சித் போன்ற பெரிய இயக்­கு­ந­ரி­டம் இருந்து இவ்­வ­ளவு விரை­வாக இரண்­டா­வது பட­வாய்ப்பு கிடைக்­கும் என எதிர்­பார்க்­க­வில்லை.

"அவர் திடீ­ரென என்னை அழைத்து கதை சொன்­ன­போது நம்­பவே முடி­ய­வில்லை. அதி­லும், இந்­தப் படம் நாய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் கதைக்­க­ளத்­து­டன் உரு­வாகி உள்­ளது.

"நான் நடிக்­கும் படங்­க­ளின் சுவ­ரொட்­டி­யில் என் பட­மும் இடம்­பெற வேண்­டும் என்று மிகுந்த ஆசை. அதை நிறை­வேற்றி உள்­ளார் பா.ரஞ்­சித்," என்­கி­றார் துஷாரா விஜ­யன்.