கார்கில் போர் நினைவிடத்துக்குச் சென்று, அப்போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தி உள்ளார் நடிகர் அஜித்.
அவ்வப்போது திடீர்ப் பயணம் மேற்கொள்வதும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதும் அஜித்தின் வழக்கம். அவர் நேரடியாக இதைச் செய்வதில்லை என்றாலும் அவரது மேலாளர் அல்லது மக்கள் தொடர்பாளர் அவரது பயணம் குறித்த விவரங்களைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், அண்மையில் காஷ்மீரில் உள்ள லடாக் பகுதிக்குச் சென்று, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்பபடங்களை வெளியிட்டிருந்தார் அஜித்.
இந்நிலையில், இமயமலைப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ள அவர், அங்கு பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்து வருகிறார்.
லடாக் சென்றிருந்தபோது, அவரது அடுத்த படத்தின் நாயகியான மஞ்சு வாரியரும் உடன் இருந்தார். இருவரும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில், கார்கில் போர் நினைவிடத்துக்குச் சென்ற அஜித், அங்கு 'சல்யூட்' அடித்து மரியாதை செலுத்தும் காட்சியுடன் கூடிய புகைப்படம் வெளியாகி உள்ளது.
மேலும் அப்பகுதியில் கடமையாற்றும் இந்திய ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார் அஜித்.
இந்தப் புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது மூன்றாவது முறையாக, இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்த அவர், திடீரென இமயமலைப் பகுதிக்குச் சென்றுவிட்டார்.
எனினும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் முன்னர் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்கில் போர் நினைவிடத்தில் அஜித்.

