'பகாசூரன்' வேடத்தில் மிரள வைக்கும் செல்வா

'பகாசூரன்' வேடத்தில் மிரள வைக்கும் செல்வா

2 mins read
aa1649fc-f3d6-4e20-9dd5-d246aee7f71b
'பகாசூரன்' படத்தின் சுவரொட்டியில் செல்வராகவன். -

சிறந்த இயக்­கு­நர் என்று பெய­ரெடுத்த செல்­வ­ரா­க­வன் இப்­போது மிரள வைக்­கும் நடிப்­பா­லும் ரசிகர்­களைக் கவர்ந்து வரு­கி­றார்.

'சாணிக்­கா­யி­தம்' படத்­தில் கீர்த்தி சுரே­ஷு­டன் இணைந்து கலக்­கி­ய­வர், இப்­போது 'பகா­சூ­ரன்' படத்­தி­லும் நடிப்­பில் முத்­திரை பதித்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் இயக்குநர் மோகன் ஜி.

"ஒவ்­வொரு வீட்­டி­லும் பிள்­ளை­கள் கதவை மூடிக்­கொண்டு அறைக்­குள் என்ன செய்­கி­றார்­கள் என்­பதை பெற்­றோர் கவ­னிக்க வேண்­டும். இதைச் செய்­தாலே போதும், நாட்­டில் குற்­றங்­கள் குறை­யும். கதை­யைக் கேட்­ட­வு­டன் இதில் நடிப்­பது எனத் தீர்­மா­னித்­து­விட்டேன்," என்­கி­றார் செல்வா.

இப்­ப­டத்­தில் நட்டி நட்­ராஜ் நடிப்பு பேசப்­படும் என்று படக்­கு­ழு­வி­னர் அடித்­துச் சொல்­கின்­ற­னர். நட்டி பேசும் நல்ல அறி­வு­ரை­யு­டன் கூடிய வச­னங்­கள், செல்­வா­வின் வித்­தி­யா­ச­மான தோற்­றம், ஒப்­பனை ஆகியவை குறித்து சமூக ஊட­கங்­களில் பல­வி­த­மான விவா­தங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

சரி, இயக்­கு­நர் மோகன் ஜி என்ன சொல்­கி­றார்.

"மகா­பா­ர­தத்­தில் நிறைய கதா­பாத்­தி­ரங்­கள் உள்­ளன. அதில் தனது அகோ­ரப் பசிக்கு தன் மக்­களையே விழுங்­கிய அசு­ரன்­தான் பகா­சூ­ரன். அந்­தக் கதா­பாத்திரத்தை அடிப்­ப­டை­யாக வைத்து உரு­வாக்கிய கதை இது. அதே­ச­ம­யம் உண்­மைச் சம்­ப­வங்­க­ளின் கோர்வை­யாக இந்­தப் படம் இருக்­கும். இது­தான் பகா­சூரன் என்­ப­தற்­கான பெயர்க் கார­ணம்.

"இந்­தப் படத்­தின் மிகப்­பெ­ரிய இரு கதா­பாத்­தி­ரங்­கள் செல்­வ­ரா­க­வன், நட்டி நட்­ராஜ். இரண்­டுக்­குமே வலு­வான, அசாத்­தி­ய­மான நடிப்பை வெளிப்­ப­டுத்­தக்கூடிய இரு­வர் தேவைப்­பட்­ட­னர்.

"யாரை ஒப்­பந்­தம் செய்­ய­லாம் என்று விவா­தித்­த­போது, 'சாணிக் காயி­தம்' படத்­தின் சுவ­ரொட்டி வெளி­யா­னது. அதில் செல்­வ­ரா­க­வன் கொடுத்­தி­ருந்த 'போஸ்' என்னை வெகு­வா­கக் கவர்ந்­தது. உடனே அவரை சந்­திக்க நேரம் கேட்டு, பின்­னர் முழுக் கதை­யை­யும் விவ­ரித்­தேன்.

"பொறு­மை­யாக உட்­கார்ந்து கதை கேட்­ட­வர், 'இந்தப் படத்­தில் நான்­தான் நடிக்கி­றேன்' என்று உறு­தி­ய­ளித்து அனுப்பி வைத்­தார்.

"நட்டி நட்­ராஜ் சார் என்­னு­டைய முந்­தைய படங்­க­ளி­லேயே நடிக்க வேண்­டி­யது. ஆனால் அதற்­கான வாய்ப்­பும் சூழ­லும் அமை­ய­வில்லை. ஆனால் இந்­தப் படத்­தில் அவரை விட்­டு­வி­டக்­கூ­டாது என்று முடி­வெடுத்து எப்­ப­டியோ பிடித்­து­விட்­டேன்," என்­கி­றார் மோகன்ஜி.

செல்­வா­வின் நடிப்பு தம்மை மிரள வைத்­தி­ருப்­ப­தாக நட்­டி­யும் பாராட்­டுப் பத்­தி­ரம் வாசிக்­கி­றார். நடிப்­புக்கு என்று வழங்­கப்­படும் அத்­தனை விரு­து­க­ளை­யும் பெறு­வதற்­கான தகுதி செல்­வா­வுக்கு உண்டு என்­றும் கூறு­கி­றார்.

"இது எப்­ப­டிப்­பட்ட கதை. இதில் என்ன பிரச்­சினை குறித்து அல­சப்­பட்­டுள்­ளது என்­ப­தை­யெல்­லாம் கடந்து செல்­வா­வின் நடிப்பு முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது. பத்­தடி தூரம் நடப்­ப­தற்­குள் ஒரு மனி­தன் தனது இயல்­பில் இருந்து சட்­டென கதா­பாத்­தி­ர­மா­கவே நம் முன் நிற்­பதை யோசித்­துப் பாருங்­கள்.

"அந்த வியப்­பும் பர­வ­ச­மும் இன்­னும் என் மனதை விட்டு அக­ல­வில்லை. படப்­பி­டிப்பு முடி­யும் வரை அவரை பிர­மிப்­பு­டன் பார்த்து ரசித்­தேன். அவ­ரது உடல்­மொழி, மாறு­பட்ட நடிப்பு ஆகி­யவை தமிழ் சினி­மா­வுக்கு மிக தாம­த­மா­கக் கிடைத்­தி­ருக்­கிறது," என்­கி­றார் நட்டி.